Tuesday, July 28, 2009

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட எனக்கு பிடித்த/பிடிக்காத பத்து..

ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...

என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )

1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..

2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..

3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..

4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...

5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..

6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..

7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.

8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...

9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..

10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..

பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?


10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...



டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...

Tuesday, July 21, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்து..

நான் ஜனிக்க போகும் நேரம்..
கடவுள் உனக்கு உலகில் என்ன வேண்டும்? என்றான்...
எனக்கென்று ஒரு உறவை தா என்றேன் கடவுளிடம்..

முதலில் தாயை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்தை பகிர முடியும் என்றான்..

பின்பு தந்தையை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்துடன் பண்பை உணர முடியும் என்றான்..

அதன்பின் நல்ல ஆசிரியரை தந்தான்..
ஏன் என்றேன்?
பண்புடன் பகுத்தறிவு பெற முடியும் என்றான்..

காதலியாய் ஒரு பெண்ணை தந்தான்..
இவளும் ஏன் என்றேன்?
உலகை புரிந்துகொள்ள முடியும் என்றான்..

நான் என்னை நானாக உணர ஒரு உறவை தா என்றேன்..

என்னை பார்த்து ஒரு புன்னகை செய்த கடவுள்..
காத்திரு ஜூலை 22 வரை என்றான்..
காத்திருந்தேன் ..
காலை கதிரவனாய் உன் ஜனனம்..

ஆம்.. என்னை நான் நானாக உணர கடவுள்
உன் நட்பை தந்தான்..


இன்று ( 22 . 07 . 2009 )
என்
நண்பன் வினோத்கெளதம் க்கு பிறந்தநாள்...

அவன் விரும்பிய அனைத்தும் பெற்று
நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்



எனது உயிர் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

wish you a very happy birthday da machan..










Friday, July 10, 2009

அழிந்து போன கரகம்..

நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி சிகரங்களை தொட்ட பல கலைகள் இன்று காணமல் போவதும் அழிக்கபடுவதும் சர்வ சாதரணமான விஷயமாக ஆகி வருகிறது...

மருத்துவம், இசை, நாட்டியம், கல்வி இப்படி எந்த கலையிலும் சிறந்து விளங்கிய நமது நாட்டில் நம்மவர்களால் அந்த கலைகள் அழிக்கப்படுவது வேதனை.


அதிலும் நாட்டுப்புற கலையான கரகாட்டம் இன்று அடிபட்டு நசுக்கபட்டத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை மல்லாக்கபடுத்து யோசித்தது உண்டு.. ஆனால் நேற்றுவரை எனக்கு அதற்கான விடை தெரியவில்லை...





இன்று
காலை செய்தித்தாளை பார்க்கும் போதுதான் என்னுடைய இத்தனை நாள் கேள்விகளுக்கும், குழபத்திற்கும்.. பதிலும் தெளிவும் கிடைத்தது...
இனி அந்த ஆண்டவனே வந்தாலும் கரகாட்ட கலையை காப்பாற்ற முடியாது... கரகாட்டம் என்பதை இனி கல்வி பாடத்தில் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினர் கண்டு கொள்வார்கள்.









சரி
அப்படி என்ன பதிலை கண்டு பிடிசிட்ட ..? உனக்கு இப்போ என்ன தெளிவு வந்துடுச்சி..?

அப்படின்னு நீங்க கேப்பிங்கன்னு எனக்கு தெரியும்...

சில விஷயங்கள சொல்லி புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள அடிச்சி கூட புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள் கண்ணால பார்த்து அனுபவத்துல உணர்ந்தா தான் புரியும்...

பாருங்க...

அட என்னை இல்லங்க... கீழ பாருங்க...

அட..படுத்தாதிங்க ..

மௌஸ் ஸ்க்ரொல் பண்ணி கீழ பாருங்க...

1



2



3




4




5


6



7



8



9



10



அய்... அஸ்கு புஸ்கு.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவனா ?

10



9



8



7



6



5



4



3



2



1 ....



ரெடி ...



ஸ்டடி ...



ஓப்பன்..





இப்போ சொல்லுங்க இவங்க இப்படி ஆடினால்.. கரகாட்டம்..
நசுங்குமா நசுங்காதா ?