Monday, December 28, 2009

கரைவேன் காற்றாய்..



நித்தம் துடித்திருந்தேன் உன்னை காண
மொழி தெரிந்தும் தவித்திருந்தேன் உன்னிடம் பேச

தயக்கம் என்னில் நிலைத்திருந்ததாலோ என்னவோ
என்னை தவிக்க விட்டு சென்ற போதும் தனித்திருந்தேன்

உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன்
நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல

யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று


மாற்றான் தாரத்தை நினைப்பது பாவம் என்று தெரிந்தும்
உன் நினைவுகளில் என் நிஜங்களை மறக்க முயல்கிறேன்


மலர்வதற்கு
முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது


ம்.. என்று ஒரு வார்த்தை சொல் நீ இறப்பதற்கு முன்
உன் கடைசி மூச்சு காற்றில் கலப்பதற்குள்

உன் சுவாசத்திற்காக கரைவேன் காற்றாய்..

Sunday, December 27, 2009

கட்டிங் வித் கிஷோர் - 2

க வி கி இல் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..
-----------------------------------------------------------------------------

இன்னைக்கு நாம பார்க்க போற சப்ஜெக்ட் "ஹியூமன் அனாடமி" அதாவது "மனித உடற்கூறுவியல்" .


உடலின் எல்லா பாகங்களும் , அது செய்ய வேண்டிய செயல்களும் நரம்பு மண்டலங்களின் (neuro system ) வழியாக மூளையின் கட்டுபாட்டின் கீழ் தான் இயங்குகிறது.



இவை அனைத்தும் சரிவர நடைபெற மிக முக்கியமாக தேவைபடுவது.. உடலின் சமசீரான இரத்த ஓட்டம்.

இதயத்தில் இருந்து அழுத்து விசை மூலம் பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்த படும் இரத்தம் ஆனது மீண்டும் இரத்த நாளங்களின் (blood veins )வழியாக இதயத்திற்கு வந்து அடைகிறது.


வெட்டுபடும் இடங்களில் இருந்து வெளிபடும் இரத்தம் சில நிமிடங்களின் உறைவதும் (blood clotting) மீண்டும் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுரபிகள் மூலமாக சுரந்து கொள்வதும் இரத்தத்தின் சிறப்பு.

இந்த உடலை அறுவை சிகிச்சை செய்வது என்பது கசாப்பு கடையில் கறி வெட்டுவது அல்ல.. மாறாக.. கத்தியை மெதுவாக உடலின் வைத்து சீரான அழுத்தம் குடுத்து சருமத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் கிழித்து பின் முழுமையாக வெட்டி போட வேண்டும்.

ok guys.. i hope you understood what you read regarding the human anatomy. To make things more clear, now we will have a small presentation..




அந்த "அறுவை" சிகிச்சையை தான் அருமையாக எந்த வித பதற்றமும் இல்லாமல் செய்து இருக்கிறார் விஜய்.. அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பேயில்ல.


எனக்கு இவ்வளவு இரத்த இழப்பு ஏற்பட்டதற்கு வீணாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை. எவ்ளவோ விமர்சனங்களை பார்த்தும் திருந்தாமல் நானே எனக்கு வைத்து கொண்ட ஆப்பு இது.


ஒருவருக்கு அதிக அளவிலான இரத்த இழப்பு ஏற்படும் போது அதை சரிகட்ட உடலுக்கும் 3 முதல் 6 மாதம் வரை ஆகும்.
இதற்கு தான் ஒருவர் ஒருமுறை இரத்த தானம் செய்த பிறகு அடுத்த முறைக்கு 3 முதல் 6 மாதம் வரை இடைவெளி விட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீண்டும் விஜய் படம் வர ஒரு 6 மாதம் ஆகும்.. அதுக்குள்ள உடம்ப தேத்தனும்..
மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 22, 2009

கட்டிங் வித் கிஷோர் - 1

இந்த பதிவ படிச்சிட்டு அருமைன்னு சொன்னாலும் சரி.. போடா எருமைன்னு சொன்னாலும் சரி.. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரசிச்ச.. என்னை சந்தோசமாய் இருக்க வைத்த .. சில சமயம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திய எனது வாழ்வில் நடந்த.. நடந்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க போற சரியான மொக்கை பதிவு.. (சாரி கண்ணா....)

சரி விஷயத்திற்கு போவோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சி..இதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சா.. ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதுறாங்க.. (அப்போ அவங்க எழுதுறது எல்லாம் மொக்கையான்னு கேக்காதிங்க .. எனக்கு பதில் தெரியாது..ஆனா கண்டிப்பா நான் எழுதுறது மொக்கை தான் )

தலைப்பு வைக்கிறதுலையும் ஒரு நியாய தர்மம் இருக்கனும் இல்லைங்களா?

உலகத்துலயே ஒருத்தன் அனுபவிக்கிற கொடுமையான நிகழ்வு எதுன்னு நினைகிறிங்க..?
காதல் தோல்வி?
நண்பர்கள் பிரிவு?
தனிமை?
தொடர் தோல்விகள் ?

அது எல்லாம் சும்மாங்க..

அதெல்லாம் கூட எதோ ஒரு வகைல தாங்கிக்கலாம். இல்ல இன்னொருத்தர் கிட்ட சொல்லியாச்சும் மனச ஆத்திக்கலாம் ..
ஆனா ஒருத்தன் குடிக்கும் போது அதை வேடிக்கை பார்த்துகிட்டு அவன் திரும்ப திரும்ப சொல்றத குடிக்கிற பழக்கம் இல்லாம வெறும் கடலைய மட்டும் கொறிசிகிட்டு கேக்குறவன் இருக்கான் பாருங்க.. அவன் அனுபவிக்கிற வேதனை.. கஷ்டம்..(அதெல்லாம் என்னை மாதிரி கஷ்டபட்டவங்களுக்கு தான் தெரியும்)

ஹலோ.. ஹலோ .. . எங்க கிளம்புறிங்க? வெயிட்..
இனிமே நீங்க அந்த கஷ்டத்த தான் அனுபிவிக்க போறீங்க..
அதான் "கட்டிங் வித் கிஷோர் "
பேர்லயாவது சரக்கு இருக்கட்டுமேனு தான் "கட்டிங்"ன்னு வச்சேன்..

------------------------------------------------------------------------------------------
இனி மொக்கைகள் ஆ"ரம்பம்" (வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்.. )


கடந்த சனிக்கிழமை "அவதார் " பார்த்தேன்.. அவதாரம் போக வேண்டியது என்னோட பிடிவாதத்தால முதல் தடவை தப்பிச்சிட்டேன்..
பாலா இந்த படத்த "ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு.. எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது .. சின்ன புள்ள தனமான கதைன்னாலும் நல்லா தான் ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க.. என்னா ஒண்ணு.. "நாவி " வேஷத்துல ஹீரோயின் மட்டும் இல்ல எந்த பொன்னை பார்த்தாலும் ஒரு கிளுகிளுப்பு வரல..

உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.. இதுல தியேட்டர் ஒரு "காஞ்சி " போனது அவங்க ரெண்டு பேரும் "கிஸ்"பண்னும் போது விசில் அடிக்கிது..

எப்படியோ கொடுத்த காசுக்கு கலர் கலரா காட்டுனாங்க.

அப்புறம் நேத்து ரெண்டாவது தடவையும் விதி என் வாழ்க்கைல விளையாட பார்த்துச்சி.. திரும்பவும் அவதாரம் போக வேண்டியது..இருந்தாலும் இப்போவும் என்னை கடவுள் கைவிடல..

என் நண்பர்கள்ல ஒரு மகான் .. "கந்த கோட்டை " தான் வருவேன்னு அடம்பிடிக்க.. எனக்கு ஒன்னும் இல்லடா நான் வரேன்.. மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு கேளு அப்படின்னு சொல்லிட்டு அவங்க முகத்த பார்த்தா.. வினோத் கிட்ட நீ துபாய்ல வேலை பார்க்க வேணாம் இந்தியா வந்துடுன்னு சொன்னா அவன் முகம் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை பேரு முகத்துளையும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்..

சரின்னு ஒரு வழியா படத்துக்கு போனோம்..

படத்தை பற்றி ஒரு பார்வை..

"பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..
"நகுல்" பண்ணுற முக சேஷ்டைகள் ரொம்ப கேவலமா இருக்கு..
"சம்பத்" அ முடிஞ்ச அளவுக்கு கேவலபடுத்தி இருக்காங்க.
"கெளதம் "(சண்டை கோழியில் விஷால் நண்பராக வந்தவர் ) குடுத்த ரோல முடிஞ்ச அளவுக்கு நெருடல் இல்லாம பண்ணிட்டு செத்து போறார்..

ஒரே ஆறுதல் சந்தானம் தான்.. அவரும் "செகண்ட் ஆப் "ல ரொம்ப இல்ல..

கதையா ? நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் படங்கள கொஞ்சம் ரீவைண்டு பண்ணிகிங்க..

ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்.
-------------------------------------------------------------------------------------------

இப்போ நான் கடவுள் கிட்ட வேண்டிகிற ஒரே விஷயம்.. சனிக்கிழமை சீக்கிரம் வர கூடாதுன்னு தான்..

எங்க ஊருல ஆறு தியேட்டர்ல மூணு இடிச்சிடாங்க மீதி மூணு தான் இருக்கு.. அதுல ரெண்டு தியேட்டர்ல பார்த்தாச்சி.. மீதி இருக்குறது.. அவதாரம் தான்..

சனிக்கிழமை
ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. அதுக்குள்ள எதாவது ஒரு படம் மாறிட வழி பண்ணுங்கனு தான். இருந்தாலும் இந்த தடவையும் டவுள் கை விடமாட்டார்னு நம்புறேன் ...

சரிங்க.. முதல் மொக்கையே கொஞ்சம் ஓவரா போச்சி.. மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 15, 2009

ஐ.. மீ.. மைசெல்ப்..

ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்னு நெனச்சி தான் பதிவெல்லாம் போட்டு கிளம்புனேன்..( எங்க போனேன்னு கேக்காதிங்க.. சொல்ல மாட்டேன்.)
திரும்பவும் வந்து பதிவு எழுதனும்னு நெனச்சேன்.. நெனச்சேன்.. நெனக்கிறேன்.. ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியுல..உண்மைய சொல்லனும்னா எழுதறதுக்கு சரக்கு இல்ல
(சரக்குன்னு சொன்னதும் குவாட்டர் , ஆப், புல்லு ன்னு லொள்ளு பண்ணாதிங்க)
அதனால அப்படியே அடங்கிட்டேன்.( சரியான முடிவு.. அப்படியே அடக்கமா இருக்கலாம்னு நீங்க சொல்றது காதுல விழுது)

சரி மொக்கையாவது போடுவோம்னு நெனச்சி ப்ளாக் உள்ள வந்தா கண்ணா பதிவு தான் கண்ணுல பட்டுது.. அந்த பதிவ படிச்ச அப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுட்டேன்..

பாலா கூட பேசும் போது சொன்னாரு.. எதாவது ஆங்கில படம் விமர்சனம் எழுதுடான்னு.. ஏற்கனவே நான் ஒரு ஆங்கில படம் விமர்சனம் எழுதி பல பேரு "சூசைடு " அட்டென்ட் பண்ணினது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவரு சொல்லும் போது இந்த மேட்டர் நியாபகம் வர.. நான் படம் பாக்குறதோட மட்டும் நிறுத்திகிறேனு சொல்லிட்டேன்.

அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
( வினோத் and கலை.. இப்போவும் அதே தான் பண்ணுறடானு "கேனத்தனமா" கமெண்ட் பண்ணாதிங்க ).

சரி அப்போ உனக்கு என்ன தான் தெரியும்னு கேட்டா.. என்னோட பதில் "தேடிகிட்டு இருக்கேன்".

பதிவு எழுதி கொடுமை படுத்த வேணாம்.. கமெண்ட்ல இம்சை பண்ணலாம்னு பார்த்தா.. பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. இவங்க ப்ளாக் கமெண்ட் பக்கம் போனா.. select profile ன்னு சொல்லுது.. கூகிள் செலக்ட் பண்ணுனாலும் கமெண்ட் பண்ண முடியல.. எதாவது "செய்வினை " வச்சிடாங்களோ ?
இதுக்கு விளக்கம் கேட்டு ஈரோடு "வால்"மீகி முனிவர்கிட்டயும் , பரிகாரம் கேட்டு "ஹாலிவுட் பாலா"னந்த சாமிகளுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன்.
உங்க யாருக்காவது பதில் தெரிஞ்சாலும் சொல்லுங்க..பதில் வந்ததும் இவர்களுக்கான இம்சை தொடரும்..

Thursday, November 12, 2009

பதிவர்களுக்கு கொண்டாட்டம்

இங்கே அலைகடலென திரண்டு இருக்கும்.. எனது அருமை பிளாக் வாசக வாசகியர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.. எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி.. நான் பிளாக் எழுதுறத நிறுத்திடலாம்னு இருக்கேன்.
(
யாருங்க அது அங்க விசில் அடிச்சி கைதட்றது?)

கொஞ்சம் அமைதியா இருங்க நான் பேசி முடிச்சிடுறேன்..
அதாவது நான் இந்த ப்லோக் எழுத ஆரம்பிச்சி.(என்னது அதுக்குள்ள சந்தன மாலை, பொன்னாடைன்னு..)


நான் எழுத ஆரம்பிச்சி 11 மாசம் தான் ஆகுது..( டேய் யாருப்பா அது கூட்டத்துல எழுந்து டான்ஸ் ஆடுறது?)


ஆனா அதுக்குள்ள நகைசுவை, சீரியஸ்,கதை, கவிதை,அரசியல், சினிமா, நையாண்டி.. மொக்கைனு.. எல்லாத்துலயும் பூந்து விளையாடுனதுல ஒரு ஆத்மதிருப்தி ..( ங்கொய்யால.. எவண்டா செருப்ப வீசுனது?)


கடுமையான வேலை பளுவிற்கு நடுவுல பல புதிய பதிவர்கள் பக்கம் போய் அவங்கள உற்சாகபடுத்தி அவங்கள முன்னுக்கு கொண்டு வந்ததுல முக்கியமான பங்கு என்னு...(அடிங்.. எவண்டா அழுகுன தக்காளிய மூஞ்சில வீசுனது?)


நான் எழுதிய ஆங்கில பட விமர்சனத்த படித்த பின் தான் ஹாலிவுட் பாலா போன்ற சிலர் விமர்சனம் எப்படி எழுதனும்ங்க்ற அடிப்படை விஷயத்தயே தெரிஞ்சிட்டங்க.. அந்த வகையில் திரை விமர்சனத்திற்கு ஒரு புதிய வரைமுறைய வித்திட்டவன் என்ற பெருமை பெற்ற நான்.. ( ஹேய் .. ஆத்தி.. ஆசிட் முட்ட..ஜஸ்ட் எஸ்கேப்..)


இப்படி பல வழிகளில் சிறந்த எழுத்தாளர்களை.. கவிஞர்களை.. விமர்சகர்களை செம்மைபடுத்தி உருவாக்கி கொண்டு இருக்கும் நான். இப்படி திடீர் என்று எழுதுவதை நிறுத்துவதாக முடிவு எடுத்தது ஏன்?.. என்று உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் எழலாம்.. அதை நீங்க என்னிடம் தைரியமாக கேட்கவும் உரிமை உண்டு.. அப்படி நீங்கள் கேட்காவிட்டாலும் காரணத்தை தெள்ள தெளிவாக இந்த கூட்டத்திலே சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.( டேய்.. "சேர " தூக்கி எரியாத மேல பட்டுடபோது.. )


பதிவுலகம் என்னிடம் இருந்து தீரா பசியுடன் எழுத்து உணவை எதிர்பார்த்தாலும்.. பதிவுலகத்திற்கு பின்னால் "ஐட்டம் ".. ச்சே.. சில சொந்த வேலைகள் கோர பசியுடன் தாண்டவம் ஆடுவதால். எனது எழுத்து பணியை நிறுத்தி விட கூடிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன்.( டேய் எவண்டா பேசிகிட்டு இருக்கும் போது அருவா வீசுகிறது? )


எனது உரையை முடிப்பதற்கு முன்னாள் என்னை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியதன் மூலம் தனது வாழ்கையில் ஒரு அழியாத வரலாற்று சம்பவத்தை அரங்கேற்றி கொண்ட என் நண்பன் வினோத்..(அட இருங்கப்பா.. அதுக்குள்ள "மைக்" கழட்டுறிங்க ..)


எனவே.. இந்த.. ( டேய் எவண்டா மேடைக்கு கீழ நெருப்பு வச்சிட்டு ஓடுறது... ஐயோ.. காப்பாத்துங்க.. )


நான் எழுதுனத நிறுத்துனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா? அதை தெரிஞ்சி கிட்ட பின்னாடி உங்கள சந்தோசமா இருக்க விட்டுடுவனா? வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..


கட்டிங்:- பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து பதிவுகளை படிப்பேன்.. அதனால.. 18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும்.

Tuesday, November 3, 2009

தொடராமல் தொடர்கிறேன்..

ஒரு 2 நாளைக்கு முந்தி நம்ம பிரண்டு வினோத்கௌதம் டேய் பன்னாட சொம்மா தான குந்திகினு கீற .. சொம்மா குந்திகினுகீறதுக்கு இந்த "பாரத்த" யாவது ரொப்புடான்னு சொன்னான். நானும் ஏதோ நண்பன் பாங்குல லோன் வாங்கி தர தான் பாரம் தரான் போல இருக்குனு வாங்கி பார்த்தா. அடங்கொய்யா .. நாம சின்ன புள்ளைல விளையாடுவோம்ல அதாங்க.. ஓடி போய் தொட்டுட்டு கொக்கு போடுறது.. எச்சி வுட்டேன் பால் வுட்டேன்.. மாதிரி.. வெள்ளாட்டு பாரம் அது.. இப்போ பய புள்ளைங்க கம்பியுடேர்ல விளையாடுதுங்க.. அதுங்கள சொல்லி குத்தம் இல்ல.. இப்போ எங்க விளையாட நேரம் கிடைகிது.. இப்படி வெள்ளான்டாதான் வுண்டு.. என்ன ஒன்னு கருமம் எல்லாமே இங்கிலிபிஸ்ல எழுதி இருந்துது.

பெயில் ஆனாலும் ரெண்டாங் கிளாஸ் வரைக்கும் வந்து இருக்குறத நெனைக்கும் போது எல்லம் மனசுல ஒரு கெத்து வரும்..தவிர abcd அல்லா எழுத்தும் நமக்கு அத்துபடி தான். ஆனா ஒரு ஒரு எழ்த்துக்கு பக்கத்துலயும் abcd மாத்தி போட்டு இருக்கசொல்லோ கொஞ்சம் கன்பிஸ் ஆய்ட்டேன்..

நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஸ் வாத்தியார் நம்ம கணேசு தான். கணேசு பக்கத்து டூரிங் டாக்கிஸ்ல ஆப்பரேடோர்ஆ இருக்காரு.."பிட்டு"படம் ஓட்ற கொட்டா தானாலும் வெறும் இங்கிலிஸ் பட "பிட்டா" ஓட்றதால கொஞ்சம் இங்கிலிசு வார்த்தைய தெரிஞ்சி வச்சி இருப்பாரு.. அவரு கிட்ட பொய் சொன்னேன் இந்த மாதிரி.. இந்த மாதிரி..மேட்டரு.. கொஞ்சம் ஹெல்பு பண்ணு அப்பாலிகா குவாட்டர் வாங்கி தரேனு சொன்னதும் மடிஞ்சிடிச்சி.. கணேசு பாரத்த படிச்சி பார்த்துட்டு.. டேய் கிசோரு இத ரொப்பனும்னா ரொம்ப இங்கிலிசு அறிவு வேணும்டா.. அதுக்கு முதல்ல நெறைய இங்கிலிசு வார்த்தைய கத்துக்கணும்னு சொல்லிச்சி..நான் எப்படின்னு மண்டைய சொரிய.. டாமல் என் முன்னாடி ஒரு பண்டல எடுத்து போட்டுச்சி.. பார்த்தா அம்புட்டும் பிட்டு பட போஸ்டரு..

இன்னைக்கு எப்படியும் எல்லா வார்த்தையும் கத்துக்கிட்டு பாரத்த ரொப்பிபுடுனும்னு ஒரு முடிவோட பண்டல எடுத்துக்கிட்டு வூட்டுக்கு போய் குப்புற அடிச்சி படுத்துகிட்டு எல்லாத்தையும் படிச்சிபுடனும்னு ஆரம்பிச்சேன்...

A FOR ALEXANDRA
B FOR BAY WATCH
C FOR CALL GIRLS
D FOR DARLING
E FOR ELISA
F FOR FIRST NIGHT
G FOR GIRLS AVAILABLE
H FOR HONEY MOON
I FOR INTENSE LOVE
J FOR JOY OF LOVE
K FOR KISS ME WILD
L FOR LOVE COVER GIRL
M FOR MID NIGHT LUST
N FOR NAUGHTY GIRL
O FOR ORIGINAL SIN
P FOR POINT OF SEDUCTION
Q FOR QUEEN'S LAND
R FOR RIOTOUS DESIRE
S FOR SIRACO
T FOR TWO MOON JUNCTION
U FOR UNFAITHFUL
V FOR VIOLENT LUST
W FOR WITH ME TONIGHT
X FOR X-MAS LOVER
Y FOR YOU AND ME

கருமம் இந்த "Z" எழுத்துக்கு மட்டும் வார்த்த எங்கயும் கிடைகல.. என்னடா பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ.. நம்ம ஏரியா கடைசி ஊட்டு தாத்தா நியாபகத்துக்கு வந்தாரு.. பெரிய படிப்பு படிச்சவரு.. பொண்ணு புள்ளையெல்லாம் வெளி நாட்ல செட்டில் ஆகிடாங்க.. பெர்சும் அவரு பொண்டாட்டியும் மட்டும் தான்.. அந்த ஊட்டுக்கு போறப்ப எல்லாம் தாத்தா பெரிய பெரிய இங்கிலிசு புத்தகம் வச்சி மூஞ்சி மறையுற மாதிரி வச்சி படிச்சிக்கிட்டு இருபாரு. அந்த பொஸ்தகத்து அட்டைய பாக்குறப்ப நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலிசு வார்த்தைய எழுத்து கூட்டி படிச்சி பார்ப்பேன்.. H.. U.. M.. A.. N.. D..I..G..E..S..T.. அப்புறம் P..L..A..Y....B..O..Y.. அப்புறம் S..E..C..R..E..T..S.. இப்படி நெறையா.. அவருகிட்டயும் போய் கேக்கலாம்னு தோணிச்சி. அப்பாலிக்க வேணாம்னு வுட்டுட்டேன்.

பொறவு நம்ம ஏரியா இஸ்கூல்ல ஒன்னாப்பு படிக்கிற அப்பு குட்டிய தாஜா பண்ணி ஒரு பைவ் ஸ்டார் முட்டாய் வாங்கி குடுத்து கேட்டேன்.. அந்தபய புள்ள முட்டாயும் வாங்கிக்கிட்டு கேவலமா ஒரு பார்வை பார்த்து சொல்லுச்சி..

Z FOR ZEBRA.

இருந்தாலும் என்னடா ரொம்ப சின்ன புள்ளைங்க படிக்கிறது எல்லாம் படிக்கிறோம்னு மனசுல ஒரே டர்ரா இருந்துச்சி.. சரி தாத்தா கிட்டயே கேட்டுடுவோம்னு அவரு ஊட்டுக்கு போவசொல்லோ வழக்கம் போல பெரிய பொஸ்தகத்த மூஞ்சிக்கி நேர வச்சி படிச்சிக்கிட்டு இருந்தாரு..
அட்டைய பார்த்தேன் நேர போய் பார்த்த ரொப்பி புடனும்னு திரும்பிட்டேன்..

அட்டைல அப்படி என்னா போட்டு இருந்திச்சின்னு கேக்குறிங்களா..?
அது என்னமோ.. Z..E..N..A..N..A..

எப்படியோ எனக்கு பதில் கிடச்சிடிச்சி..

Z FOR ZENANA.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த வெள்ளாட்டுக்கு இன்னும் சொம்மா உக்கார்ந்து இருக்குற நாலு பேர கூப்புடுனுமாம் ..
அதனால என் சார்பா ரெண்டு பேரு.. பப்பு, ஹாலிவுட் பாலா.. இவங்க ரெண்டு பேரையும் கூப்டுறேன்..
இவங்க ரெண்டு பெரும் ஒரிஜினல் பாரத்த ரொப்புனாலும் சரி.. இல்ல என்னை மாதிரி இங்கிலிசு கத்துகிட்டு அப்பாலிகா ரொப்புனாலும் சரி.. எப்படியோ வெள்லாடுனா சரி தான்.. ஒரிஜினல் பாரம் வேணும்னா இங்க அமுத்துங்க..

மீண்டும் ஒரு...

காலைல எழுந்திரிகிறேன், சாப்பிடுறேன் , வேலைக்கு போறேன்.. ராத்திரி வீட்டுக்கு வரேன், தூங்குறேன்.. தினமும் செய்வது தான் ஆனாலும் அதிலும் இப்பொழுது எல்லாம் சுவாரசியம் இல்லை..

சதா சர்வ காலமும் எதையோ இழந்தது போல ஒரு உணர்வு..

வீட்ல அன்பான அப்பா, அம்மா.. தினமும் போன் செஞ்சி பேசும் பாசமான அக்கா மாமா.. இப்படி என்னை பற்றி அக்கறை பட சுற்றிலும் சொந்தங்கள் இருந்தும் எதோ ஒரு குறை நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடுகிறது..
இது காதலா? ( ஆஹா.. ஆரம்பிசிட்டான்டானு கட்டைய தூக்காதிங்க )
ச்சே.. நிச்சயம் அந்த கருமம் இல்லங்க.

எனக்கு எப்பொழுது மனச்சோர்வு ஏற்பட்டாலும் இறை வழியிலும் தீர்வு காண்பது வழக்கம்.. சில சமயம் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் தீர்வை தீர்மானிக்க கூடிய அமைதியான மனநிலையை கண்டிப்பாக பெற்று வருவேன்.



ஆனால் இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த சோர்விற்கு இறை வழியிலும் தீர்வு காண முடியவில்லை. கோவிலுக்கு சென்றாலும் நினைவுகள் வந்து தொலைகிறது..

யோசித்து பார்த்தால் சில நிகழ்வுகள் நேற்று நடந்தது போல இருக்கு.. ஆனால் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.



கடற்கரையில் சிறு பிள்ளைகளை போல நண்பர்களுடன் மண்ணை எடுத்து அடித்து தலையில் பூசி முதுகில் ஏறி விளையாடியது.


மாலையானால்.. "டேய் மச்சான் எங்க இருக்க நான் வந்துகிட்டே இருக்கேன் ரெடியா இரு வெளில போகணும்" என்று போன் செய்யும் நண்பன்.

"டேய் கிஷோர். வீட்ல இருக்கேன்டா வந்து கூட்டிகிட்டு போ.. "பர்கர்" வாங்கி கொடு " என்று உரிமையுடன் அழைக்கும் நண்பன்.

சிதம்பரம், புதுச்சேரி, வந்தவாசி,திண்டிவனம், தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஏற்காடு இப்படி பல இடங்களில் பைக்ல போகும் போது.. பின்னால உக்கார்ந்து என் முதுகில் சாய்ந்து பாட்டு பாடிக்கொண்டு வரும் நண்பன்.

"நான் சிதம்பரம் வரனும்னா மூர்த்தி ஹோட்டல்ல சிக்கன் வாங்கி தரனும்" என்று கண்டிஷன் போடும் நண்பன்.

"இன்னைக்கு அந்த படம் டிரைலர் பார்த்தேன். செம சீன் மச்சி.. இன்னைக்கு சாயந்திரம் நிச்சயம் போகணும்.. வேற வேலை எதுவும் வச்சிக்காதடா." என்று ஆர்டர் போடும் நண்பன்.

"என்னடா எதாவது பிரச்சனையா ? நான் இருக்கேன்டா கவலை படாதே "என்று தோல் மீது கை போட்டு கட்டியணைத்து ஆறுதல் கொடுக்கும் நண்பன்.

முகம் பார்த்தே என் மனகஷ்டங்களை கண்டுகொண்டு விசாரிக்கும் நண்பன்.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? உன்னால முடியும்டா.."என்று தன்னம்பிக்கை கொடுத்த நண்பன்..

இப்படி
என்னோட வாழ்க்கைல பலவாறாக ஒன்றிவிட்ட நண்பர்கள்.. அவர்களின் நினைவுகள் .. இப்பொழுது அவர்களின் பிரிவு வந்த போது. ஏன் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு போகிறோம் என்ற கவலையும் வந்தது.


இந்த இரண்டு வருடங்களில் அனைவரும் பொறுப்பான பதவிகளில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும்.. முடிந்த வரையில் தொலைபேசியில் உறவுகள் நீடித்தாலும்..

எனது நட்பு வட்டம் சிறிதாயினும்..சந்தோஷ தருணங்களை அள்ளி கொடுத்த என் நண்பர்கள் இப்பொழுது வேலை நிமித்தமாக பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடப்பது வேதனை அளிக்கிறது..
மீண்டும் அதே கவலை இல்லாத..வெகுளித்தனமான.. விளையாட்டுதனமான நிகழ்வுகள் நிகழ மனம் ஏங்குகிறது .. இந்த ஏக்கம் என் நண்பர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் ..
மீண்டும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்..
காத்திருப்பது காதலில் மட்டும் இல்லை .. நல்ல நட்புகளுக்காக காத்திருப்பதும் சுகம் தான்.

Saturday, October 10, 2009

நீயெல்லாம் ஏன்டா எழுதுற ?

இவர் ஒரு பிரபல பதிவர்.. கொடுமையான விஷயம் என்னன்னா இவரை பிரபலம்னு இவர தவிர வேற யாருமே சொன்னது இல்ல. இதுவரைக்கும் ஒரு 50 பதிவு கூட இவரு தாண்டல. எப்படி தான் பிரபலம்னு சொல்லிக்கிட்டு தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு அலையராரோ .. துண்டை ..

இன்று இவரின் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது.. என்னுடைய
விதி.. நெசமாவே எனக்கு நேரம் சரி இல்லங்க..

இவரோட எழுத்து திறமைய பார்த்து பல பேரு பதிவுலகத்த விட்டே ஓடி போய் இருக்காங்க..

இவரு எழுத ஆரம்பிச்சது கடந்த பத்து மாதங்களாக தான்.. அதுக்குள்ளே இவரு பண்ற அலப்பறை இருக்கே ..

எழுத ஆரம்பிச்ச புதுசுல இவரு ஒரு கதை எழுதுனாரு.. அவ்ளோ கேவலமா இருந்துச்சி.. சரி ஆரம்பம் தானே போக போக சரி ஆகிடும்னு.. சில பேரு மனசு இறங்கி வந்து நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் நல்லா எழுத ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க..அது போதாதா இவருக்கு? ஏதோ "ராஜேஷ் குமார்"மாதிரி சொல்ல போனா ராஜேஷ்குமார் கிரைம் கதைய விட தன்னோடது தான் சூப்பர் மாதிரி நெனச்சிகிட்டு ஊரு பூரா சொல்லி தம்பட்டம் அடிச்சிகிட்டாரு.

அதுக்கு அப்பறம் அவரு எழுதுன முக்கால்வாசி பதிவு எல்லாமே கிட்ட தட்ட "பிட்டு" பட கதை தான்.. எல்லாமே பொண்ணுங்கள பத்தி தான் இருக்கும்.. பேசாம இவரு இங்க பதிவு எழுதுறத விட.. எதாவது மஞ்சள் பத்திரிக்கைக்கு "மல்கோவா ஆண்டி" கதை எழுதலாம்..(முன்னாடி அந்த வேலை தான் செஞ்சாரோ என்னவோ யாரு கண்டா ? )

இதெல்லாம் கூட பரவா இல்லங்க.. ஒரு தடவ இங்கிலீஷ் படம் விமர்சனம் எழுதுறேன்னு அவரு பண்ணுன அழும்பு இருக்கே... ஐயோ.. ஐயோ.. மனசுல பெரிய "ஹாலிவுட் பாலா"ன்னு நெனப்பு.. அதை படிச்சிட்டு பதிவுலகமே காரி துப்புச்சி.. இன்கிளுடிங் ஹாலிவுட் பாலா.. அப்போ கூட அவருக்கு சூடு சொரண எதுவுமே வரலங்க..

இப்போ கூட வெளில கிளம்புனா ஒரு "பேனா" கண்டிப்பா அவர் பாக்கெட்ல இருக்குமாம்.. வழில யாரவது பார்த்து "ஆட்டோகிராப்" கேப்பாங்களாம் .. இந்த தகவல ஒரு தடவ "சாட் "பண்ணும் போது அவரே சொன்னது.. அட ங்கொய்யா இவ்ளோ நேரம் ஒரு சைக்கோ கிட்டயா "சாட் " பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனச்சிகிட்டேன்.

எதாவது ஒரு பதிவு போட்டுட்டு.. அதுக்கு யாரவது கமெண்ட் போட மாட்டாங்களான்னுவெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு உக்கார்ந்து இருப்பாரு..
அப்பறம் போய் ஒருத்தர் விடாம கால்ல விழுந்து வோட்டு கேப்பாரு.. அப்போ கூட ஒரு 12 வோட்டுக்கு மேல தேறாது..

அப்பறம் அவரு காமடி பண்ணறேன்னு படுத்துனது .. கவிதை எழுதுறேன்னு காமடி பண்ணுணது .. போட்டோகிராபின்னு போட்டு பிராண்டுனது எல்லாம் சொன்னா இந்த ஒரு பதிவு பத்தாது..

இப்படி ஒரு ஆளு பதிவு எழுதுலன்னு யாரு அழுதா?
என்னங்க நான் கேக்குறது நியாயம் தான?


அட "இவர்" என்ற "அவர் " யாருன்னு தான கேக்குறிங்க?

கில்மா கதை எழுதுனாலும்.. கொஞ்சம் ஷோக்கான ஆளாத்தான் இருக்காரு அவர் ...

Saturday, October 3, 2009

பதிவுலக நட்பு

இணைய தளம் என்றாலே பொண்ணுங்க கூட கடலை போடுறது மட்டும் தான்னு நெனச்சிகிட்டு இருந்த என்னை மடார்னு மண்டைல அடிச்சி இந்த பிளாக்கர் பக்கம் இழுத்துட்டு வந்தவன் வினோத்கெளதம். இவனால தான் நான் இன்னும் பல வெப்சைட்(!?) எல்லாம் தெரிசிகிட்டேன்.. அதை எல்லாம் சொன்னா கலாச்சார காவல்காரங்க "பிட்டு" படத்த பாக்குறத கொஞ்சம் நிறுத்திட்டு சண்டைக்கு வருவாங்க..

பொதுவாகவே யார் கூடவும் உடனே நட்பு பாராட்டுதல் என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. என்னோட நட்பு வட்டம் ரொம்ப சின்னது..
எவ்ளோ தான் பேசி பழகுனாலும் அவங்க கிட்ட என்னோட சொந்த விஷயங்கள பகிர்கிற அளவுக்கு நான் தயாராவதற்கு ரொம்ப நாள் ஆகும்..

முகம் தெரியாதவர்களிடம் நட்பு பாராட்டுவதை விட முதலில் நமது பக்கத்தில் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவது தான் மனிததன்மை என்பது என் எண்ணம்..(கொஞ்சம் உண்மையும் கூட )

அப்படி இருந்த எனக்கு இன்னைக்கு முகம் தெரியாத பலரின் நட்புகள் கூட கிடைச்சி இருக்குன்னா அதற்கு முழு காரணமும் இந்த பிளாக்கர் தான்.

இந்த பிளாக்கர் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாளைக்கு இது ஒரு போதை மருந்து போல தேரிஞ்சாலும் ( இதை வினோத் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் ) இதை சரியான விதத்தில் பயன்படுத்தும் போது மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக இருக்கிறது என்பதே நிஜம்...

சில சமயம் வீட்டிலோ வெளியிலோ பிரச்சனை காரணமாக சோர்ந்து போகும் போது முகம் தெரியாத நட்புகள்.. ஹாய் கிஷோர் எப்படி இருக்க? என்று கேக்கும் போது உண்மையில் மனசு லேசாவதை உணர்ந்து இருக்கிறேன்..
அப்படி எனக்கு கிடைத்த சிலரின் நட்புக்கள் பற்றி இங்கே..

1. ஹாலிவுட் பாலா
சார்.. அண்ணா ... என்று ஆரம்பித்த நட்பு .. இன்று பாலா என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இருக்கிறது.. இவர் என்னிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது நான் அவருக்கு சரியாக பதில் அளிக்க முடியாத இடத்தில் இருந்தேன்.. இத்தனைக்கும் அவர் அவருக்கு வேலை கிடைத்தது பற்றி சொல்வதற்காக வந்த கால் அது..
அதன் பின் அவர் என்னிடம் பேசிய போது நான் நடந்ததை கூறி வருத்தம் தெரிவிக்க. இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல கிஷோர்.. உங்களுக்கு எப்போ பேசனும் என்றாலும் மிஸ்டு கால் குடுங்க நானே பேசுறேன் என்று கூறிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது (இத்தனைக்கும் ISD கால்). அதைவிட என்னை வியக்க செய்த விஷயம் அவர் என்னிடம் பேசும் போது ரொம்ப நாள் பேசி பழகிய நபரிடம் பேசுவது போல ஒரு சகோதர உணர்வு.. வேலை, சினிமா , குடும்பம் என்று எல்லாத்தையும் பத்தி பேசுவார்.. தேங்க்ஸ் பாலா..

2. கலையரசன்

வினோத் கூட வேலை பாக்குறாரு.. வினோத் அறிமுக படுத்தி வச்சதாலோ என்னவோ "என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" பார்முலா வொர்க்அவுட் ஆகிடுச்சி.. முதல் தடவ பேசும்போதே "டா" போட்டு பேசும் அளவிற்கு பழகுவதற்கு இனிமையானவன்.. இந்த மாசம் ஊருக்கு வரான்.
மீட் பண்ணனும் மச்சி..

3. பப்பு @ பிரபு

மதுரைகாரர் .. மதுரை குசும்பு அத்தனயும் அவரின் எழுத்தில் இருக்கும்..
சாட்டில் வந்தால் இரவு 11 மணி வரை கூட பேசுவார்.. எல்லா விஷயத்தையும்..
குறிப்பாக காலேஜ்ல் நடக்கும் அவரின் "சொந்த விஷயத்தையும் " பற்றி சொல்லி கருத்து(!!!???) கேட்பார்.
மனதில் பட்டதை பளிச் என்று சொல்ல கூடியவர்..
மதுரை வந்தா "ஜில் ஜில் ஜிகர்தண்டா " வாங்கி குடுக்கணும் புரிஞ்சிதா..

4 . வினோத் கெளதம்

இவனை பதிவுலக நண்பன் என்று சொல்ல முடியாது.. எனது நீண்ட கால நண்பன்.. எல்லா விஷயத்துலயும் எனக்கு சரியான ஆலோசனை கூறுபவன் ஆறுதலாக இருப்பவன் .
இவனின் நட்பு எனக்கு கிடைத்தது என்னுடைய விதி.. அவனுக்கு கடவுளின் சதி..
(ஹா.. ஹா.. சும்மா தமாசு.. )
ஏற்கனவே சொல்லியது தான் .. "really blessed to have a friend like him"

இன்னும் இருக்காங்க.. சக்கரை சுரேஷ்,பித்தன்,கண்ணா, விஜய், வசந்த், மந்திரன், வால் பையன், இப்படி நிறைய.. பேசி பழகவில்லை என்றாலும் நட்புடன் விசாரிப்புகள் இருக்கும்..
அவர்களை பற்றி விரைவில்..

Friday, October 2, 2009

காதலும் காமமும்


காத்திருக்கிறேன்..
அவளின் கன்னத்தை என் கைகளில் ஏந்த ..
அவளின் இமைகளை என் இமைகளால் மூட..
அவளின் இதழை என் நாவல் சுவைக்க..
அவளின் கைகள் என் கழுத்தை சுற்றி மாலையாக மாற ..
அவளின் கழுத்து என் மூச்சு காற்றை உணர..
அவளின் பற்கள் என் காது மடல்களை கடிக்க..
அவளின் விரல் நகங்கள் என் தேகத்தில் காயம் ஏற்படுத்த..
அவளின் இடையின் ஸ்பரிசத்தை என் கைகளால் உணர..
அவளின் கால்கள் என் கால்களுகிடையே சிக்கி தவிக்க..
அவளின் தேக வெப்பத்தை என் தேகம் எங்கும் உணர..
இதற்கு பெயர் காதலா? என்றான் ஒருவன்
ஆம் என்றேன்..
இது காமத்தின் பிதற்றல் என்றான்..
மடையர்கள்..
காலம்
காலமாக காதலையும் காமத்தையும் பிரித்து பார்கிறார்கள்
காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமம் என்பதை அறியாமலே..
அவளை என் விரல் நகம் கூட தீண்டியது இல்ல இதுவரை...
உலகின் பார்வைக்கு இது
காதலோ.. காமமோ..
என் கண்மணியை கைகளின் ஏந்த காத்திருப்பேன்
என் காலம் முழுதும் ..

-காதலன்





Sunday, September 27, 2009

சினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..

சினிமா..

நான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..

கமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..

கமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .

மோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..

லக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..

அதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..
இது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..

எனக்கு வேறு பிடித்த விஷயம்
சீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..
ஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..
-----------------------------------------------------------------------------------------
சிந்தனை...

எந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..
அதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
இதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..
திரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "
பண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..
----------------------------------------------------------------------------------------------

சிகரட்டு..

சிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..
சிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..
சிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு "சுச்சு" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. "சுச்சு" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..
(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..? )

------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா? அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா?

அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்

Saturday, September 19, 2009

நாங்களும் போட்டோகிராப்பர் தான்..

ரொம்ப நாள் ஆச்சி.. பதிவு எழுதி..
ஏனோ இப்போ எல்லாம் அடுத்தவங்க எழுதினத படிகிறதுல இருக்குற ஆர்வம்.. எழுதுறதுல இருக்க மாட்டுது..
என்ன பண்றது.. ஒரு நாளைக்கு 10 பதிவு எழுதுறவங்கலே ரெண்டு நாள் எழுதாம விட்டா அவங்க ஹிட் லிஸ்ட் பாதிக்கு மேல காணாம போகுது ..
என்னை மாதிரி ஆள எல்லாம் நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..
இருந்தாலும் அதுக்காக உங்கள இம்சை பண்ணாம இருந்துட முடியுமா.. அப்படி அடுத்தவங்கள நிம்மதியா இருக்க விட்டா நான் தமிழன்னு சொல்லிகிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
அதனால இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் ...
விஜய், அஜீத் மாதிரி சக்செஸ் ஆகும்னு நெனச்சி நிறைய படம் குடுத்து பிளாப் ஆகுறத விட..
சிம்பு.. s.j சூர்யா மாதிரி.. ஒரு படம் நடிச்சாலும் கண்டிப்பா பிளாப்னு .. தெரிஞ்சி நடிக்கணும்...
அது மாதிரி ஒரு பதிவு போட்டாலும் இம்சை அதிகமா இருக்கனும்..
என்னோட முதல் இம்சை.. என்னை நானே பெரிய போட்டோகிராப்பர் னு நெனச்சிக்கிட்டு .. சமிபத்தில் விசாகபட்டினம் போனபோது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

ஆஹ்.. ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்.. கீழ உள்ள புகை படங்கள் எல்லாம் என் நண்பன் வினோத்கெளதம் பிரசன்ட் பண்ணுன டிஜிட்டல் கேம் ல எடுத்தது..... சைஸ் பெருசா இருக்குனு ரீசைஸ் பண்ணி போஸ்ட் பண்ணிஇருகேன் ..

(1) போரா குகைக்கு போற வழில ஒரு 8 கிலோ மீட்டர் உள்ள போனா வரும் நீர் விழ்ச்சி.. அங்க போக மெயின் ரோட்ல இருந்து ஜீப் வசதி உண்டு.. ஒரு ஆளுக்கு 70 ருபாய்.. 5 கிலோமீட்டர் வரைக்கும் ஜீப் பயணம்.. அப்பறம் 2 கிலோ மீட் நடராஜா சர்வீஸ் தான் மலை பாதைல.. வயசானவங்களுக்கு சிரமம்..



(2) அரக்கு வேளி ..
போகும் வழி எல்லாம் அழகு.. ஆனா அங்க புதுசா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியுல... ஒரு பார்க் ஒரு மியுஸிஎம் அவ்ளோ தான் .. அதான் பூக்களை மட்டும் எடுத்தேன்..




(3) ஹார்பர்.. லான்ச் பயணம் அருமையா இருக்கும்.. 40 முதல் 60 வரை கட்டணம்..கடலுக்கு உள்ள ஒரு 2 கிலோ மீட்டர் வரைக்கும் அழச்சிக்கிட்டு போவாங்க... கடலுக்குள்ள உள்ள இருந்து கரைய பாக்குறது ஒரு அழகுதான்..

(4) யரடா ஹில்ல்ஸ் அடிவரதுல இருக்குற பீச்.. யரடா பீச் மற்றும் கிரீன் வெளி பீச்னும் சொல்வாங்க பசங்களுக்கு ஏற்ற இடம்.. வீக் எண்டு அன்னிக்கு கூட்டம் வரும் வீக் எண்டு இல்லாம மற்ற நாள் போனா என்னை மாதிரி தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. மலை வழி முழுதும் அவ்ளோ அருமையான அழகு நிறைந்த இடம்..இங்க தான் டால்பின் நோஸ் பாயிண்ட் இருக்கு..





(5) டாபின் நோஸ் பாயிண்ட்


(6 ) யரடா மலை மீது இருந்து கடற்கரை அழகிய தோற்றம் ..(அழகா தான இருக்கு?)


அட இவ்ளோ தூரம் வந்து பார்த்திங்க .. எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க... விசாக ஸ்டீல் பிளானட் உள்ளே திருட்டு தனமாக எடுத்த படங்கள் மற்றும் போரா குகை படங்கள் அடுத்த பதிவில்..

Sunday, August 30, 2009

உணர்வு...

ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...

காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..

இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..

இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..

இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..



தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?









Tuesday, July 28, 2009

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட எனக்கு பிடித்த/பிடிக்காத பத்து..

ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...

என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )

1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..

2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..

3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..

4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...

5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..

6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..

7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.

8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...

9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..

10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..

பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?


10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...



டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...

Tuesday, July 21, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்து..

நான் ஜனிக்க போகும் நேரம்..
கடவுள் உனக்கு உலகில் என்ன வேண்டும்? என்றான்...
எனக்கென்று ஒரு உறவை தா என்றேன் கடவுளிடம்..

முதலில் தாயை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்தை பகிர முடியும் என்றான்..

பின்பு தந்தையை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்துடன் பண்பை உணர முடியும் என்றான்..

அதன்பின் நல்ல ஆசிரியரை தந்தான்..
ஏன் என்றேன்?
பண்புடன் பகுத்தறிவு பெற முடியும் என்றான்..

காதலியாய் ஒரு பெண்ணை தந்தான்..
இவளும் ஏன் என்றேன்?
உலகை புரிந்துகொள்ள முடியும் என்றான்..

நான் என்னை நானாக உணர ஒரு உறவை தா என்றேன்..

என்னை பார்த்து ஒரு புன்னகை செய்த கடவுள்..
காத்திரு ஜூலை 22 வரை என்றான்..
காத்திருந்தேன் ..
காலை கதிரவனாய் உன் ஜனனம்..

ஆம்.. என்னை நான் நானாக உணர கடவுள்
உன் நட்பை தந்தான்..


இன்று ( 22 . 07 . 2009 )
என்
நண்பன் வினோத்கெளதம் க்கு பிறந்தநாள்...

அவன் விரும்பிய அனைத்தும் பெற்று
நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்



எனது உயிர் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

wish you a very happy birthday da machan..










Friday, July 10, 2009

அழிந்து போன கரகம்..

நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி சிகரங்களை தொட்ட பல கலைகள் இன்று காணமல் போவதும் அழிக்கபடுவதும் சர்வ சாதரணமான விஷயமாக ஆகி வருகிறது...

மருத்துவம், இசை, நாட்டியம், கல்வி இப்படி எந்த கலையிலும் சிறந்து விளங்கிய நமது நாட்டில் நம்மவர்களால் அந்த கலைகள் அழிக்கப்படுவது வேதனை.


அதிலும் நாட்டுப்புற கலையான கரகாட்டம் இன்று அடிபட்டு நசுக்கபட்டத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை மல்லாக்கபடுத்து யோசித்தது உண்டு.. ஆனால் நேற்றுவரை எனக்கு அதற்கான விடை தெரியவில்லை...





இன்று
காலை செய்தித்தாளை பார்க்கும் போதுதான் என்னுடைய இத்தனை நாள் கேள்விகளுக்கும், குழபத்திற்கும்.. பதிலும் தெளிவும் கிடைத்தது...
இனி அந்த ஆண்டவனே வந்தாலும் கரகாட்ட கலையை காப்பாற்ற முடியாது... கரகாட்டம் என்பதை இனி கல்வி பாடத்தில் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினர் கண்டு கொள்வார்கள்.









சரி
அப்படி என்ன பதிலை கண்டு பிடிசிட்ட ..? உனக்கு இப்போ என்ன தெளிவு வந்துடுச்சி..?

அப்படின்னு நீங்க கேப்பிங்கன்னு எனக்கு தெரியும்...

சில விஷயங்கள சொல்லி புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள அடிச்சி கூட புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள் கண்ணால பார்த்து அனுபவத்துல உணர்ந்தா தான் புரியும்...

பாருங்க...

அட என்னை இல்லங்க... கீழ பாருங்க...

அட..படுத்தாதிங்க ..

மௌஸ் ஸ்க்ரொல் பண்ணி கீழ பாருங்க...

1



2



3




4




5


6



7



8



9



10



அய்... அஸ்கு புஸ்கு.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவனா ?

10



9



8



7



6



5



4



3



2



1 ....



ரெடி ...



ஸ்டடி ...



ஓப்பன்..





இப்போ சொல்லுங்க இவங்க இப்படி ஆடினால்.. கரகாட்டம்..
நசுங்குமா நசுங்காதா ?

Saturday, June 20, 2009

வறுமையின் விளிம்பு..




இன்று
எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..
வலியும் வேதனையும் மட்டுமே வாழ்க்கையாக தேர்ந்தெடுத்த அவளுக்கு
கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..

வயிற்று பசி தீர்ப்பவரை விழுந்து யாசிக்கும் இந்த உலகம்
அடுத்தவரின் உடல் பசி போக்கும் அவளுக்கு வைத்த பெயர் வேசி...


நான்கு சுவருக்குள் இவர்களின் சுயரூபத்தை கண்டதாலோ என்னவோ
இந்த உலகத்தின் பேச்சுகளை அவள் என்றுமே லட்சியம் செய்தது இல்லை..

இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி போக்க.....

Monday, June 15, 2009

மரணத்தில் ஒரு மஞ்சள் குளியல்

நேற்று முன்தினம் மாலை எனக்கு தெரிந்த ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழந்து விட்டார் ..
சாலையை கடக்கும் போது டூவீலர் மோதி தலையில் அடிபட்டு விழுந்தவரை ... அங்கு சவாரி ஏற்றி வந்த ஆட்டோகாரர் தன் சவாரியை இறக்கி அவர்களை வேறு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிட்டு.. இவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று கண்பித்து இருக்கிறார்.. அவர்கள் இங்கு பார்க்க முடியாது வேறு இடம்செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அனுப்பி விட்டார்கள்.. பிறகு வேறு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் காவல் நிலையத்தில் தகவல் சொல்லி ஒரு போலீஸ்காரரை அழைத்து கொண்டு இன்னொரு மருத்துவமணைக்கு சென்று காட்ட அவர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட பின்பு சட்டரீதியாக அவரது உடலை அரசு மருத்துவமனை பிணவறைஇல் வைத்து விட்டார்கள்.. அவரின் பாக்கெட் இல் இருந்த செல்லில் அவரின் உறவுகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டார்கள்...

கீழே விழுந்தவரை நமக்கு எதுக்குடா வம்பு என்று செல்லாமல் தனது வருமானத்தை இழப்பதை கூட பொருட்படுத்தாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இவரை காப்பாற்ற நினைத்த அந்த ஆட்டோகாரர் உண்மையில் எனக்கு கடவுளாக தெரிந்தார்.

இனி நடந்தது தான் வேதனையில் உச்ச கட்டம்...

விஷயம் கேள்வி பட்டு உறவுகள் அடித்து பிடித்து வர... பணம் என்ற பிசாசு லஞ்சம் என்ற பெயரில் தனது கோரபற்களை காட்டியபடி உதிரத்தை உறிய தொடங்கியது .

பிணவறை உதவியாளர் பிணவறை திறந்து காட்ட ரூபாய் 100 இல் ஆரம்பித்த லஞ்சம்... மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை மருத்துவர் வர மாட்டார் ..(மதியம் வரை வேலை நேரம் உண்டு ) பிரேத பரிசோதனை நடக்காது ஆகவே இறந்தவரின் உடல் கிடைப்பது சற்று சிரமம்.. பணம் குடுத்தால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லி தொடர .. வேறு வழி இல்லாமல் சம்மதம் தெரிவித்து உறவுகள்.

பணம் கைமாறியது தான் தாமதம்...

மருத்துவர் வந்தார்.. உடனே பரிசோதனை ஒரு மணிநேரத்தில் பரிசோதனை முடிவு... எந்தவித சிரமமும் இன்றி காவல் துறை சம்பந்தபட்ட அனைத்து வேலைகள் முடிந்தன , உடலை ஊருக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தி எல்லாம் தயாரானது...

ஒரு வழியாக ஊருக்கு கொண்டு வந்து நல்லபடியாக காரியங்கள் நடந்தன...
ஆனால் இதற்கு லஞ்சமாக மட்டுமே செலவானது ரூபாய் 5000...
இதை தங்களின் குடும்பத்திற்க்காக செலவு செய்யும் போது அவர்களுகே அருவெறுப்பாக இருக்காதா ?

இதில் மிக கேவலமான விஷயம் என்னவென்றால் இவர்களின் கீழ்த்தரமான செயலுக்கு அந்த தொகை பிக்செட் ரேட்டாம்.. அந்த அறையில் மேலும் இரண்டு உடல்கள் இருந்தன.. அதில் ஒன்று மிக மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது ... இவர்களிடமும் அந்த லஞ்ச பிசாசுகள் இதே மாதிரி தான் கேப்பானுங்க என்று நினைக்கும் போது நெஞ்சம் கனத்தது.. கடவுளே இவர்களிடம் இருந்து அவர்களை காப்பாற்று, நல்லபடியாக இவர்களுக்கு அவரின் உடலை பெற்றுதா என்று மானசீகமாக வேண்டிக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது...

அங்கு இறந்தவர்களின் முகத்தில் கூட ஒரு அமைதியை கண்ட எனக்கு மனசாட்சியை கொன்ற இவர்களின் முகம் கொடூரதின் உச்சகட்டமாக மனித உருவில் நடமாடும் பிணத்தை தின்னும் பேய்களாக மட்டுமே தெரிந்தது.

Friday, June 12, 2009

எனது உயிர் நண்பா ...

வினோத்கெளதம்...
பொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும் போதே "$##$^$ " என்று வளர்ந்து நிற்கிறது .

எனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...

சரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம் கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...

அப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...

1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..
கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)

2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..

3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...

4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இவன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..

5. இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)

நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...

Thursday, June 11, 2009

அழைக்காமலே..

பூஜா இளமையான அம்சமான அழகான 16 வயசு பருவ சிட்டு...
இவளுக்கு கொஞ்ச நாளாவே ஒரு பயங்கரமாக கனவு வருது... இவளோட செத்து போன அம்மா இவ கனவுல வந்து இவ கிட்ட எதோ சொல்ல வராங்க ..

இவளுக்கு எப்போ இருந்து பிரச்சனை ?

அன்று ஒரு நாள் தன் காதலன் ரகு கூட பார்டில கலந்து கிட்டு வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு செத்து போன சிறுமி உருவம் அவளை வீட்டுக்கு போக வேணாம்னு எச்சரிக்க ... இருந்தும் வீட்டுக்கு போன போது... அவளோட அப்பா ராஜீவ் .. அவருக்கு வேலைக்கு உதவியா இருக்குற 30 வயசு பெண் சுசீலா கூட வீட்டில் இருக்க... வீட்டுக்கு அருகில் போட் ஹவுஸ் இல் நோயாளியாக இருக்கும் அம்மாவை பார்க்க சென்றாள் ... அப்போ அம்மா இவளை பாத்து எதோ சொல்ல முயற்சிக்க அதை புரியாமல் வீடு நோக்கி வந்த பூஜா கண்ட கடைசி காட்சி... அம்மா வீட்டோடு எரிந்து சாம்பல் ஆனது தான் .. அதன் பிறகு அன்று நடந்தது எதுவும் இவள் நினைவுக்கு வர மாட்டுது .

வெளியூர்இல் இருந்த பூஜா அம்மா இறந்தவுடன் அவள் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவிட.. அம்மா இருந்த இடத்தில் சுசீலா இருப்பது கண்டு மனதுக்குள் குமிறியவாறு அந்த வீட்டில் இருகிறாள்... அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் சகோதரி நிர்மலா தான்... அவளை விட மூத்தவள்... தனது தந்தை செயல்பார்த்து நேரடியாக அவரை எதிர்பவள்.. இருப்பினும் அவளும் அதே வீட்டில் தான் இருகிறாள்.. சில சமயம் அவள் போதை பழக்கங்களை நாடுவதும் உண்டு...

பூஜாவின் காதலன் ரகு.. இவள் வீட்டிற்கு எல்லா வேலையும் செய்பவன்... இவர்களை சந்திக்க விடாமல் சதி செய்கிறாள் சுசீலா.. இருப்பினும் இரு பெண்கள் மீதும் பாசம் இருப்பது போன்றும் இருகிறாள்...

ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... வீட்டிற்கு வந்து பூஜா தான் அறைக்கு வர...அங்கு இருந்தான் ரகு... ஆனால் அவனுள் எதோ மாற்றம்... அவளுடன் பேசி போதே அவன் உடல் நிலை மாற்றம் ஆகிறது... அந்த நிலையிலும் அவன் அவளிடம் சொல்லியது ... "அன்று இரவு பார்ட்டி முடிந்தவுடன் உன் பின்னால் வந்து உன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் பார்த்தேன்... உன் அம்மா அப்போவே சொன்னாங்க நான் தான் கேக்கல " மேலும் அவன் உருவம் மோசமாக ஆனது...
இதனால் பயந்து அறையை விட்டு வந்த பூஜா மீண்டும் அறைக்கு செல்ல அது காலியாக இருந்தது...

மறுநாள் காலையில் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றில் ரகுவின் பிணம்... அவனின் இறுதி சடங்கிற்கு சென்ற பூஜா அங்கே ஒரு சிறுமியை சந்திகிறாள்... அவளை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்...
"! அவள் அன்று பிணமாக வந்த எச்சரிதவள்... "
தன்னை அறியாம அவள் பின்னால் செல்ல அந்த சிறுமி இன்னும் இரு சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.. அவர்களை பின் சென்ற பூஜா ஒரு கல்லறை மேல் சென்று விழுந்தாள்... எழுத்து பார்த்த போது அது ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களின் கல்லறை என்பது புரிகிறது...

தனக்கு வரும் மர்ம கனவை பற்றி ஒரு நாள் பூஜா நிர்மலாவிடம் கூறினாள் .. அம்மாவின் சாவுக்கு காரணம் சுசீலா தான் என்கிறாள் நிர்மலா.
இதை உறுதிபடுத்த சுசீலாவின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் இருவரும்..
அவர்களின் தேடுதல்லில் சுசீலா அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்தவள் என்றும் அவர்களை கொன்று தப்பித்து வந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்கள்... அந்த சிறுமியின் அம்மாவின் கழத்தில் இருந்த முத்து மணி இப்போது சுசீலா கழுத்தில்.. இது ஒன்றே அவர்களின் சந்தேகத்தை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது...
இந்த விஷயத்தை அவரின் அப்பாவிடம் சொல்ல நினைத்தும் ஆனால் அப்பா அவளின் மேல் உள்ள மோகத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்வதை நம்பபோவது இல்லை என்று சொல்லாமல் தவிர்தார்கள்..

இந்த நிலையில் ஒரு நாள் ராஜீவ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல ..
வீட்டில் பூஜா, நிர்மலா, சுசீலா மட்டுமே...
நிர்மலா பூஜாவிடம் நம்பகமான ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவரிடம் உதவி கேட்கலாம் என்று சொல்ல சரி என்றாள் ... இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சுசீலா வீட்டை விட்டு கிளம்பும் போது நிர்மலாவிற்கு போதை ஊசி போட்டு விட்டு பூஜாவை பிடிக்கவும் முயற்சி செய்கிறாள் எனினும் பூஜா தப்பி சென்று அவரை பார்த்தாள் ... அவர் அவளை அமர சொல்லி சுசீலாவை வரவழைத்து பூஜாவிற்கும் போதை ஊசி போட்டுவிடுகிறார்கள்..

சுசீலா பூஜாவை வீட்டிற்கு தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி அவளின் ஆடைகளை கலைத்தாள் .. பாதி மயக்கத்தில் இருக்கும் பூஜா அருகில் இருக்கும் கத்தியை எடுத்து சுசீலாவை தாக்க நினைக்க சுசீலா அந்த கத்தியை எடுத்து கொண்டாள் .. பூஜாவிடம் பேசி கொண்டே அவளின் ஆடைகளை சுசீலா களைந்து கொண்டு இருக்கும் போது மயக்கம் தெளிந்த நிர்மலா பின்னால் இருந்து சுசீலாவை தாக்க வந்தாள் ... இதை கவனித்தபடி பூஜா மயக்கமடைந்தாள் .

மயக்கம் தெளிந்த பூஜா எழுந்து பார்க்க தரை எல்லாம் ஒரே ரத்த கறை... ரத்த கறையை தொடர்ந்த பூஜா அது ஒரு பெரிய பெட்டியில் சென்று முடிவதை பார்த்து பெட்டியை திறக்க அதனுள் பிணமாய் சுசீலா...

பூஜா சுற்றிலும் பார்க்க... அங்கே கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நிர்மலா... இருவரும் செய்வது அறியாமல் நிற்கவும் ராஜீவ் கார் போர்டிகோவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது... காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய ராஜீவ் பூஜாவை நோக்கி ஓடிவந்து "என்ன ஆச்சு ?" என்று கேட்க...
"சுசீலா தான் அம்மாவை கொன்றதாக"சொல்கிறாள் நிர்மலா...
அதை
அவர் காதில் வாங்காமல் பூஜாவிடம் திரும்ப கேட்க...
பூஜாவும் "நிர்மலா சொல்வது சரி "என்று கூறினாள்..
"நான் சொல்வதை அப்பா நம்ப மாட்டார் " என்று கூறுகிறாள் நிர்மலா...
"இல்லை அப்பா... சுசீலா தான் அம்மாவை கொன்றாள் ,என்னையும் நிர்மலாவயும் கூட கொல்லவந்தாள் அதனால் தான் நிர்மலா சுசீலாவை கொன்றாள் " என்று பூஜா கூற
அதிர்ச்சி
அடைந்த ராஜீவ்...
நிர்மலாவா
? என்றார்...
ஆமாம் நிர்மலா சொல்வது உண்மை... நீயே சொல் நிர்மலா என பூஜா கூற...

என்னடி உளர்ற... நிர்மலா செத்து போய் ஒரு வருஷம் ஆகுது என்றார் ராஜீவ்...

அப்போ யாரு சுசீலாவ கொன்னது ?, அம்மாவ யாரு கொன்னது? நிர்மலாவ யாரு கொன்னது? ரகுவ யாரு கொன்னது ? இதுக்கு எல்லாம் பதில் தெரியனும்னா
"the uninvited "
படத்த பாருங்க...
"the uninvited "


































































பூஜாவாக
anna கதாபத்திரத்தில் Emily Browning
நிர்மலாவாக alex கதாபாத்திரத்தில் Arielle Kebbel
சுசீலாவாக rachel கதாபாத்திரத்தில் Elizhabeth Banks
ரகுவாக maat கதாபாத்திரத்தில் Jesse Moss
ராஜீவ்
வாக stephen கதாபாத்திரத்தில் David Strathairn
சாவித்திரியாக mom கதாபாத்திரத்தில் Maya Massar

directed by Guard brothers


இசை மட்டும் அப்போ அப்போ ஓம் சாந்தி ஓம் படத்த நினைவு படுத்துது...
படத்த பத்தி என்னோட பார்வை சொல்லனும்னா திரில்லர் சஸ்பென்ஸ் எதிர் பாக்குறவங்களுக்கு சரியான தீனி... கூடவே இளமை துள்ளும் அழகு பெண்களின் டூ பீஸ் காட்சியும் உண்டு.. ஜொள்ளு விட்டுகிட்டு என்ஜாய் பண்ணலாம்..
இயக்குனருக்கு செய்யும் மரியாதையை காரணமாக சில சம்பவங்களை, காட்சிகளை தவிர்த்து விட்டேன்...

தமிழ் இந்த கதை எதுக்குனா ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இதே கதைய தமிழ் படமா நமக்கு யாரவது சுட்டு தருவாங்க அப்போ படத்துக்கு கதை, தலைப்பு, கதாபாத்திர பெயர் வைக்க மண்டைய பிச்சிக்க கூடாது இல்லையா?

படம் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... படம் பார்த்துட்டு சொல்லுங்க