Sunday, August 30, 2009

உணர்வு...

ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...

காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..

இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..

இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..

இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..



தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?