Sunday, September 27, 2009

சினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..

சினிமா..

நான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..

கமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..

கமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .

மோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..

லக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..

அதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..
இது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..

எனக்கு வேறு பிடித்த விஷயம்
சீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..
ஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..
-----------------------------------------------------------------------------------------
சிந்தனை...

எந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..
அதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
இதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..
திரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "
பண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..
----------------------------------------------------------------------------------------------

சிகரட்டு..

சிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..
சிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..
சிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு "சுச்சு" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. "சுச்சு" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..
(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..? )

------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா? அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா?

அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்

Saturday, September 19, 2009

நாங்களும் போட்டோகிராப்பர் தான்..

ரொம்ப நாள் ஆச்சி.. பதிவு எழுதி..
ஏனோ இப்போ எல்லாம் அடுத்தவங்க எழுதினத படிகிறதுல இருக்குற ஆர்வம்.. எழுதுறதுல இருக்க மாட்டுது..
என்ன பண்றது.. ஒரு நாளைக்கு 10 பதிவு எழுதுறவங்கலே ரெண்டு நாள் எழுதாம விட்டா அவங்க ஹிட் லிஸ்ட் பாதிக்கு மேல காணாம போகுது ..
என்னை மாதிரி ஆள எல்லாம் நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..
இருந்தாலும் அதுக்காக உங்கள இம்சை பண்ணாம இருந்துட முடியுமா.. அப்படி அடுத்தவங்கள நிம்மதியா இருக்க விட்டா நான் தமிழன்னு சொல்லிகிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
அதனால இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் ...
விஜய், அஜீத் மாதிரி சக்செஸ் ஆகும்னு நெனச்சி நிறைய படம் குடுத்து பிளாப் ஆகுறத விட..
சிம்பு.. s.j சூர்யா மாதிரி.. ஒரு படம் நடிச்சாலும் கண்டிப்பா பிளாப்னு .. தெரிஞ்சி நடிக்கணும்...
அது மாதிரி ஒரு பதிவு போட்டாலும் இம்சை அதிகமா இருக்கனும்..
என்னோட முதல் இம்சை.. என்னை நானே பெரிய போட்டோகிராப்பர் னு நெனச்சிக்கிட்டு .. சமிபத்தில் விசாகபட்டினம் போனபோது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

ஆஹ்.. ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்.. கீழ உள்ள புகை படங்கள் எல்லாம் என் நண்பன் வினோத்கெளதம் பிரசன்ட் பண்ணுன டிஜிட்டல் கேம் ல எடுத்தது..... சைஸ் பெருசா இருக்குனு ரீசைஸ் பண்ணி போஸ்ட் பண்ணிஇருகேன் ..

(1) போரா குகைக்கு போற வழில ஒரு 8 கிலோ மீட்டர் உள்ள போனா வரும் நீர் விழ்ச்சி.. அங்க போக மெயின் ரோட்ல இருந்து ஜீப் வசதி உண்டு.. ஒரு ஆளுக்கு 70 ருபாய்.. 5 கிலோமீட்டர் வரைக்கும் ஜீப் பயணம்.. அப்பறம் 2 கிலோ மீட் நடராஜா சர்வீஸ் தான் மலை பாதைல.. வயசானவங்களுக்கு சிரமம்..



(2) அரக்கு வேளி ..
போகும் வழி எல்லாம் அழகு.. ஆனா அங்க புதுசா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியுல... ஒரு பார்க் ஒரு மியுஸிஎம் அவ்ளோ தான் .. அதான் பூக்களை மட்டும் எடுத்தேன்..




(3) ஹார்பர்.. லான்ச் பயணம் அருமையா இருக்கும்.. 40 முதல் 60 வரை கட்டணம்..கடலுக்கு உள்ள ஒரு 2 கிலோ மீட்டர் வரைக்கும் அழச்சிக்கிட்டு போவாங்க... கடலுக்குள்ள உள்ள இருந்து கரைய பாக்குறது ஒரு அழகுதான்..

(4) யரடா ஹில்ல்ஸ் அடிவரதுல இருக்குற பீச்.. யரடா பீச் மற்றும் கிரீன் வெளி பீச்னும் சொல்வாங்க பசங்களுக்கு ஏற்ற இடம்.. வீக் எண்டு அன்னிக்கு கூட்டம் வரும் வீக் எண்டு இல்லாம மற்ற நாள் போனா என்னை மாதிரி தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. மலை வழி முழுதும் அவ்ளோ அருமையான அழகு நிறைந்த இடம்..இங்க தான் டால்பின் நோஸ் பாயிண்ட் இருக்கு..





(5) டாபின் நோஸ் பாயிண்ட்


(6 ) யரடா மலை மீது இருந்து கடற்கரை அழகிய தோற்றம் ..(அழகா தான இருக்கு?)


அட இவ்ளோ தூரம் வந்து பார்த்திங்க .. எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க... விசாக ஸ்டீல் பிளானட் உள்ளே திருட்டு தனமாக எடுத்த படங்கள் மற்றும் போரா குகை படங்கள் அடுத்த பதிவில்..