Tamilers


"

Monday, December 28, 2009

கரைவேன் காற்றாய்..



நித்தம் துடித்திருந்தேன் உன்னை காண
மொழி தெரிந்தும் தவித்திருந்தேன் உன்னிடம் பேச

தயக்கம் என்னில் நிலைத்திருந்ததாலோ என்னவோ
என்னை தவிக்க விட்டு சென்ற போதும் தனித்திருந்தேன்

உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன்
நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல

யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று


மாற்றான் தாரத்தை நினைப்பது பாவம் என்று தெரிந்தும்
உன் நினைவுகளில் என் நிஜங்களை மறக்க முயல்கிறேன்


மலர்வதற்கு
முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது


ம்.. என்று ஒரு வார்த்தை சொல் நீ இறப்பதற்கு முன்
உன் கடைசி மூச்சு காற்றில் கலப்பதற்குள்

உன் சுவாசத்திற்காக கரைவேன் காற்றாய்..

Sunday, December 27, 2009

கட்டிங் வித் கிஷோர் - 2

க வி கி இல் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..
-----------------------------------------------------------------------------

இன்னைக்கு நாம பார்க்க போற சப்ஜெக்ட் "ஹியூமன் அனாடமி" அதாவது "மனித உடற்கூறுவியல்" .


உடலின் எல்லா பாகங்களும் , அது செய்ய வேண்டிய செயல்களும் நரம்பு மண்டலங்களின் (neuro system ) வழியாக மூளையின் கட்டுபாட்டின் கீழ் தான் இயங்குகிறது.



இவை அனைத்தும் சரிவர நடைபெற மிக முக்கியமாக தேவைபடுவது.. உடலின் சமசீரான இரத்த ஓட்டம்.

இதயத்தில் இருந்து அழுத்து விசை மூலம் பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்த படும் இரத்தம் ஆனது மீண்டும் இரத்த நாளங்களின் (blood veins )வழியாக இதயத்திற்கு வந்து அடைகிறது.


வெட்டுபடும் இடங்களில் இருந்து வெளிபடும் இரத்தம் சில நிமிடங்களின் உறைவதும் (blood clotting) மீண்டும் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுரபிகள் மூலமாக சுரந்து கொள்வதும் இரத்தத்தின் சிறப்பு.

இந்த உடலை அறுவை சிகிச்சை செய்வது என்பது கசாப்பு கடையில் கறி வெட்டுவது அல்ல.. மாறாக.. கத்தியை மெதுவாக உடலின் வைத்து சீரான அழுத்தம் குடுத்து சருமத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் கிழித்து பின் முழுமையாக வெட்டி போட வேண்டும்.

ok guys.. i hope you understood what you read regarding the human anatomy. To make things more clear, now we will have a small presentation..




அந்த "அறுவை" சிகிச்சையை தான் அருமையாக எந்த வித பதற்றமும் இல்லாமல் செய்து இருக்கிறார் விஜய்.. அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பேயில்ல.


எனக்கு இவ்வளவு இரத்த இழப்பு ஏற்பட்டதற்கு வீணாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை. எவ்ளவோ விமர்சனங்களை பார்த்தும் திருந்தாமல் நானே எனக்கு வைத்து கொண்ட ஆப்பு இது.


ஒருவருக்கு அதிக அளவிலான இரத்த இழப்பு ஏற்படும் போது அதை சரிகட்ட உடலுக்கும் 3 முதல் 6 மாதம் வரை ஆகும்.
இதற்கு தான் ஒருவர் ஒருமுறை இரத்த தானம் செய்த பிறகு அடுத்த முறைக்கு 3 முதல் 6 மாதம் வரை இடைவெளி விட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீண்டும் விஜய் படம் வர ஒரு 6 மாதம் ஆகும்.. அதுக்குள்ள உடம்ப தேத்தனும்..
மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 22, 2009

கட்டிங் வித் கிஷோர் - 1

இந்த பதிவ படிச்சிட்டு அருமைன்னு சொன்னாலும் சரி.. போடா எருமைன்னு சொன்னாலும் சரி.. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரசிச்ச.. என்னை சந்தோசமாய் இருக்க வைத்த .. சில சமயம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திய எனது வாழ்வில் நடந்த.. நடந்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க போற சரியான மொக்கை பதிவு.. (சாரி கண்ணா....)

சரி விஷயத்திற்கு போவோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சி..இதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சா.. ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதுறாங்க.. (அப்போ அவங்க எழுதுறது எல்லாம் மொக்கையான்னு கேக்காதிங்க .. எனக்கு பதில் தெரியாது..ஆனா கண்டிப்பா நான் எழுதுறது மொக்கை தான் )

தலைப்பு வைக்கிறதுலையும் ஒரு நியாய தர்மம் இருக்கனும் இல்லைங்களா?

உலகத்துலயே ஒருத்தன் அனுபவிக்கிற கொடுமையான நிகழ்வு எதுன்னு நினைகிறிங்க..?
காதல் தோல்வி?
நண்பர்கள் பிரிவு?
தனிமை?
தொடர் தோல்விகள் ?

அது எல்லாம் சும்மாங்க..

அதெல்லாம் கூட எதோ ஒரு வகைல தாங்கிக்கலாம். இல்ல இன்னொருத்தர் கிட்ட சொல்லியாச்சும் மனச ஆத்திக்கலாம் ..
ஆனா ஒருத்தன் குடிக்கும் போது அதை வேடிக்கை பார்த்துகிட்டு அவன் திரும்ப திரும்ப சொல்றத குடிக்கிற பழக்கம் இல்லாம வெறும் கடலைய மட்டும் கொறிசிகிட்டு கேக்குறவன் இருக்கான் பாருங்க.. அவன் அனுபவிக்கிற வேதனை.. கஷ்டம்..(அதெல்லாம் என்னை மாதிரி கஷ்டபட்டவங்களுக்கு தான் தெரியும்)

ஹலோ.. ஹலோ .. . எங்க கிளம்புறிங்க? வெயிட்..
இனிமே நீங்க அந்த கஷ்டத்த தான் அனுபிவிக்க போறீங்க..
அதான் "கட்டிங் வித் கிஷோர் "
பேர்லயாவது சரக்கு இருக்கட்டுமேனு தான் "கட்டிங்"ன்னு வச்சேன்..

------------------------------------------------------------------------------------------
இனி மொக்கைகள் ஆ"ரம்பம்" (வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்.. )


கடந்த சனிக்கிழமை "அவதார் " பார்த்தேன்.. அவதாரம் போக வேண்டியது என்னோட பிடிவாதத்தால முதல் தடவை தப்பிச்சிட்டேன்..
பாலா இந்த படத்த "ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு.. எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது .. சின்ன புள்ள தனமான கதைன்னாலும் நல்லா தான் ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க.. என்னா ஒண்ணு.. "நாவி " வேஷத்துல ஹீரோயின் மட்டும் இல்ல எந்த பொன்னை பார்த்தாலும் ஒரு கிளுகிளுப்பு வரல..

உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.. இதுல தியேட்டர் ஒரு "காஞ்சி " போனது அவங்க ரெண்டு பேரும் "கிஸ்"பண்னும் போது விசில் அடிக்கிது..

எப்படியோ கொடுத்த காசுக்கு கலர் கலரா காட்டுனாங்க.

அப்புறம் நேத்து ரெண்டாவது தடவையும் விதி என் வாழ்க்கைல விளையாட பார்த்துச்சி.. திரும்பவும் அவதாரம் போக வேண்டியது..இருந்தாலும் இப்போவும் என்னை கடவுள் கைவிடல..

என் நண்பர்கள்ல ஒரு மகான் .. "கந்த கோட்டை " தான் வருவேன்னு அடம்பிடிக்க.. எனக்கு ஒன்னும் இல்லடா நான் வரேன்.. மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு கேளு அப்படின்னு சொல்லிட்டு அவங்க முகத்த பார்த்தா.. வினோத் கிட்ட நீ துபாய்ல வேலை பார்க்க வேணாம் இந்தியா வந்துடுன்னு சொன்னா அவன் முகம் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை பேரு முகத்துளையும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்..

சரின்னு ஒரு வழியா படத்துக்கு போனோம்..

படத்தை பற்றி ஒரு பார்வை..

"பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..
"நகுல்" பண்ணுற முக சேஷ்டைகள் ரொம்ப கேவலமா இருக்கு..
"சம்பத்" அ முடிஞ்ச அளவுக்கு கேவலபடுத்தி இருக்காங்க.
"கெளதம் "(சண்டை கோழியில் விஷால் நண்பராக வந்தவர் ) குடுத்த ரோல முடிஞ்ச அளவுக்கு நெருடல் இல்லாம பண்ணிட்டு செத்து போறார்..

ஒரே ஆறுதல் சந்தானம் தான்.. அவரும் "செகண்ட் ஆப் "ல ரொம்ப இல்ல..

கதையா ? நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் படங்கள கொஞ்சம் ரீவைண்டு பண்ணிகிங்க..

ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்.
-------------------------------------------------------------------------------------------

இப்போ நான் கடவுள் கிட்ட வேண்டிகிற ஒரே விஷயம்.. சனிக்கிழமை சீக்கிரம் வர கூடாதுன்னு தான்..

எங்க ஊருல ஆறு தியேட்டர்ல மூணு இடிச்சிடாங்க மீதி மூணு தான் இருக்கு.. அதுல ரெண்டு தியேட்டர்ல பார்த்தாச்சி.. மீதி இருக்குறது.. அவதாரம் தான்..

சனிக்கிழமை
ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. அதுக்குள்ள எதாவது ஒரு படம் மாறிட வழி பண்ணுங்கனு தான். இருந்தாலும் இந்த தடவையும் டவுள் கை விடமாட்டார்னு நம்புறேன் ...

சரிங்க.. முதல் மொக்கையே கொஞ்சம் ஓவரா போச்சி.. மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 15, 2009

ஐ.. மீ.. மைசெல்ப்..

ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்னு நெனச்சி தான் பதிவெல்லாம் போட்டு கிளம்புனேன்..( எங்க போனேன்னு கேக்காதிங்க.. சொல்ல மாட்டேன்.)
திரும்பவும் வந்து பதிவு எழுதனும்னு நெனச்சேன்.. நெனச்சேன்.. நெனக்கிறேன்.. ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியுல..உண்மைய சொல்லனும்னா எழுதறதுக்கு சரக்கு இல்ல
(சரக்குன்னு சொன்னதும் குவாட்டர் , ஆப், புல்லு ன்னு லொள்ளு பண்ணாதிங்க)
அதனால அப்படியே அடங்கிட்டேன்.( சரியான முடிவு.. அப்படியே அடக்கமா இருக்கலாம்னு நீங்க சொல்றது காதுல விழுது)

சரி மொக்கையாவது போடுவோம்னு நெனச்சி ப்ளாக் உள்ள வந்தா கண்ணா பதிவு தான் கண்ணுல பட்டுது.. அந்த பதிவ படிச்ச அப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுட்டேன்..

பாலா கூட பேசும் போது சொன்னாரு.. எதாவது ஆங்கில படம் விமர்சனம் எழுதுடான்னு.. ஏற்கனவே நான் ஒரு ஆங்கில படம் விமர்சனம் எழுதி பல பேரு "சூசைடு " அட்டென்ட் பண்ணினது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவரு சொல்லும் போது இந்த மேட்டர் நியாபகம் வர.. நான் படம் பாக்குறதோட மட்டும் நிறுத்திகிறேனு சொல்லிட்டேன்.

அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
( வினோத் and கலை.. இப்போவும் அதே தான் பண்ணுறடானு "கேனத்தனமா" கமெண்ட் பண்ணாதிங்க ).

சரி அப்போ உனக்கு என்ன தான் தெரியும்னு கேட்டா.. என்னோட பதில் "தேடிகிட்டு இருக்கேன்".

பதிவு எழுதி கொடுமை படுத்த வேணாம்.. கமெண்ட்ல இம்சை பண்ணலாம்னு பார்த்தா.. பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. இவங்க ப்ளாக் கமெண்ட் பக்கம் போனா.. select profile ன்னு சொல்லுது.. கூகிள் செலக்ட் பண்ணுனாலும் கமெண்ட் பண்ண முடியல.. எதாவது "செய்வினை " வச்சிடாங்களோ ?
இதுக்கு விளக்கம் கேட்டு ஈரோடு "வால்"மீகி முனிவர்கிட்டயும் , பரிகாரம் கேட்டு "ஹாலிவுட் பாலா"னந்த சாமிகளுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன்.
உங்க யாருக்காவது பதில் தெரிஞ்சாலும் சொல்லுங்க..பதில் வந்ததும் இவர்களுக்கான இம்சை தொடரும்..

Thursday, November 12, 2009

பதிவர்களுக்கு கொண்டாட்டம்

இங்கே அலைகடலென திரண்டு இருக்கும்.. எனது அருமை பிளாக் வாசக வாசகியர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.. எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி.. நான் பிளாக் எழுதுறத நிறுத்திடலாம்னு இருக்கேன்.
(
யாருங்க அது அங்க விசில் அடிச்சி கைதட்றது?)

கொஞ்சம் அமைதியா இருங்க நான் பேசி முடிச்சிடுறேன்..
அதாவது நான் இந்த ப்லோக் எழுத ஆரம்பிச்சி.(என்னது அதுக்குள்ள சந்தன மாலை, பொன்னாடைன்னு..)


நான் எழுத ஆரம்பிச்சி 11 மாசம் தான் ஆகுது..( டேய் யாருப்பா அது கூட்டத்துல எழுந்து டான்ஸ் ஆடுறது?)


ஆனா அதுக்குள்ள நகைசுவை, சீரியஸ்,கதை, கவிதை,அரசியல், சினிமா, நையாண்டி.. மொக்கைனு.. எல்லாத்துலயும் பூந்து விளையாடுனதுல ஒரு ஆத்மதிருப்தி ..( ங்கொய்யால.. எவண்டா செருப்ப வீசுனது?)


கடுமையான வேலை பளுவிற்கு நடுவுல பல புதிய பதிவர்கள் பக்கம் போய் அவங்கள உற்சாகபடுத்தி அவங்கள முன்னுக்கு கொண்டு வந்ததுல முக்கியமான பங்கு என்னு...(அடிங்.. எவண்டா அழுகுன தக்காளிய மூஞ்சில வீசுனது?)


நான் எழுதிய ஆங்கில பட விமர்சனத்த படித்த பின் தான் ஹாலிவுட் பாலா போன்ற சிலர் விமர்சனம் எப்படி எழுதனும்ங்க்ற அடிப்படை விஷயத்தயே தெரிஞ்சிட்டங்க.. அந்த வகையில் திரை விமர்சனத்திற்கு ஒரு புதிய வரைமுறைய வித்திட்டவன் என்ற பெருமை பெற்ற நான்.. ( ஹேய் .. ஆத்தி.. ஆசிட் முட்ட..ஜஸ்ட் எஸ்கேப்..)


இப்படி பல வழிகளில் சிறந்த எழுத்தாளர்களை.. கவிஞர்களை.. விமர்சகர்களை செம்மைபடுத்தி உருவாக்கி கொண்டு இருக்கும் நான். இப்படி திடீர் என்று எழுதுவதை நிறுத்துவதாக முடிவு எடுத்தது ஏன்?.. என்று உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் எழலாம்.. அதை நீங்க என்னிடம் தைரியமாக கேட்கவும் உரிமை உண்டு.. அப்படி நீங்கள் கேட்காவிட்டாலும் காரணத்தை தெள்ள தெளிவாக இந்த கூட்டத்திலே சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.( டேய்.. "சேர " தூக்கி எரியாத மேல பட்டுடபோது.. )


பதிவுலகம் என்னிடம் இருந்து தீரா பசியுடன் எழுத்து உணவை எதிர்பார்த்தாலும்.. பதிவுலகத்திற்கு பின்னால் "ஐட்டம் ".. ச்சே.. சில சொந்த வேலைகள் கோர பசியுடன் தாண்டவம் ஆடுவதால். எனது எழுத்து பணியை நிறுத்தி விட கூடிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன்.( டேய் எவண்டா பேசிகிட்டு இருக்கும் போது அருவா வீசுகிறது? )


எனது உரையை முடிப்பதற்கு முன்னாள் என்னை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியதன் மூலம் தனது வாழ்கையில் ஒரு அழியாத வரலாற்று சம்பவத்தை அரங்கேற்றி கொண்ட என் நண்பன் வினோத்..(அட இருங்கப்பா.. அதுக்குள்ள "மைக்" கழட்டுறிங்க ..)


எனவே.. இந்த.. ( டேய் எவண்டா மேடைக்கு கீழ நெருப்பு வச்சிட்டு ஓடுறது... ஐயோ.. காப்பாத்துங்க.. )


நான் எழுதுனத நிறுத்துனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா? அதை தெரிஞ்சி கிட்ட பின்னாடி உங்கள சந்தோசமா இருக்க விட்டுடுவனா? வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..


கட்டிங்:- பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து பதிவுகளை படிப்பேன்.. அதனால.. 18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும்.

Tuesday, November 3, 2009

தொடராமல் தொடர்கிறேன்..

ஒரு 2 நாளைக்கு முந்தி நம்ம பிரண்டு வினோத்கௌதம் டேய் பன்னாட சொம்மா தான குந்திகினு கீற .. சொம்மா குந்திகினுகீறதுக்கு இந்த "பாரத்த" யாவது ரொப்புடான்னு சொன்னான். நானும் ஏதோ நண்பன் பாங்குல லோன் வாங்கி தர தான் பாரம் தரான் போல இருக்குனு வாங்கி பார்த்தா. அடங்கொய்யா .. நாம சின்ன புள்ளைல விளையாடுவோம்ல அதாங்க.. ஓடி போய் தொட்டுட்டு கொக்கு போடுறது.. எச்சி வுட்டேன் பால் வுட்டேன்.. மாதிரி.. வெள்ளாட்டு பாரம் அது.. இப்போ பய புள்ளைங்க கம்பியுடேர்ல விளையாடுதுங்க.. அதுங்கள சொல்லி குத்தம் இல்ல.. இப்போ எங்க விளையாட நேரம் கிடைகிது.. இப்படி வெள்ளான்டாதான் வுண்டு.. என்ன ஒன்னு கருமம் எல்லாமே இங்கிலிபிஸ்ல எழுதி இருந்துது.

பெயில் ஆனாலும் ரெண்டாங் கிளாஸ் வரைக்கும் வந்து இருக்குறத நெனைக்கும் போது எல்லம் மனசுல ஒரு கெத்து வரும்..தவிர abcd அல்லா எழுத்தும் நமக்கு அத்துபடி தான். ஆனா ஒரு ஒரு எழ்த்துக்கு பக்கத்துலயும் abcd மாத்தி போட்டு இருக்கசொல்லோ கொஞ்சம் கன்பிஸ் ஆய்ட்டேன்..

நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஸ் வாத்தியார் நம்ம கணேசு தான். கணேசு பக்கத்து டூரிங் டாக்கிஸ்ல ஆப்பரேடோர்ஆ இருக்காரு.."பிட்டு"படம் ஓட்ற கொட்டா தானாலும் வெறும் இங்கிலிஸ் பட "பிட்டா" ஓட்றதால கொஞ்சம் இங்கிலிசு வார்த்தைய தெரிஞ்சி வச்சி இருப்பாரு.. அவரு கிட்ட பொய் சொன்னேன் இந்த மாதிரி.. இந்த மாதிரி..மேட்டரு.. கொஞ்சம் ஹெல்பு பண்ணு அப்பாலிகா குவாட்டர் வாங்கி தரேனு சொன்னதும் மடிஞ்சிடிச்சி.. கணேசு பாரத்த படிச்சி பார்த்துட்டு.. டேய் கிசோரு இத ரொப்பனும்னா ரொம்ப இங்கிலிசு அறிவு வேணும்டா.. அதுக்கு முதல்ல நெறைய இங்கிலிசு வார்த்தைய கத்துக்கணும்னு சொல்லிச்சி..நான் எப்படின்னு மண்டைய சொரிய.. டாமல் என் முன்னாடி ஒரு பண்டல எடுத்து போட்டுச்சி.. பார்த்தா அம்புட்டும் பிட்டு பட போஸ்டரு..

இன்னைக்கு எப்படியும் எல்லா வார்த்தையும் கத்துக்கிட்டு பாரத்த ரொப்பிபுடுனும்னு ஒரு முடிவோட பண்டல எடுத்துக்கிட்டு வூட்டுக்கு போய் குப்புற அடிச்சி படுத்துகிட்டு எல்லாத்தையும் படிச்சிபுடனும்னு ஆரம்பிச்சேன்...

A FOR ALEXANDRA
B FOR BAY WATCH
C FOR CALL GIRLS
D FOR DARLING
E FOR ELISA
F FOR FIRST NIGHT
G FOR GIRLS AVAILABLE
H FOR HONEY MOON
I FOR INTENSE LOVE
J FOR JOY OF LOVE
K FOR KISS ME WILD
L FOR LOVE COVER GIRL
M FOR MID NIGHT LUST
N FOR NAUGHTY GIRL
O FOR ORIGINAL SIN
P FOR POINT OF SEDUCTION
Q FOR QUEEN'S LAND
R FOR RIOTOUS DESIRE
S FOR SIRACO
T FOR TWO MOON JUNCTION
U FOR UNFAITHFUL
V FOR VIOLENT LUST
W FOR WITH ME TONIGHT
X FOR X-MAS LOVER
Y FOR YOU AND ME

கருமம் இந்த "Z" எழுத்துக்கு மட்டும் வார்த்த எங்கயும் கிடைகல.. என்னடா பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ.. நம்ம ஏரியா கடைசி ஊட்டு தாத்தா நியாபகத்துக்கு வந்தாரு.. பெரிய படிப்பு படிச்சவரு.. பொண்ணு புள்ளையெல்லாம் வெளி நாட்ல செட்டில் ஆகிடாங்க.. பெர்சும் அவரு பொண்டாட்டியும் மட்டும் தான்.. அந்த ஊட்டுக்கு போறப்ப எல்லாம் தாத்தா பெரிய பெரிய இங்கிலிசு புத்தகம் வச்சி மூஞ்சி மறையுற மாதிரி வச்சி படிச்சிக்கிட்டு இருபாரு. அந்த பொஸ்தகத்து அட்டைய பாக்குறப்ப நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலிசு வார்த்தைய எழுத்து கூட்டி படிச்சி பார்ப்பேன்.. H.. U.. M.. A.. N.. D..I..G..E..S..T.. அப்புறம் P..L..A..Y....B..O..Y.. அப்புறம் S..E..C..R..E..T..S.. இப்படி நெறையா.. அவருகிட்டயும் போய் கேக்கலாம்னு தோணிச்சி. அப்பாலிக்க வேணாம்னு வுட்டுட்டேன்.

பொறவு நம்ம ஏரியா இஸ்கூல்ல ஒன்னாப்பு படிக்கிற அப்பு குட்டிய தாஜா பண்ணி ஒரு பைவ் ஸ்டார் முட்டாய் வாங்கி குடுத்து கேட்டேன்.. அந்தபய புள்ள முட்டாயும் வாங்கிக்கிட்டு கேவலமா ஒரு பார்வை பார்த்து சொல்லுச்சி..

Z FOR ZEBRA.

இருந்தாலும் என்னடா ரொம்ப சின்ன புள்ளைங்க படிக்கிறது எல்லாம் படிக்கிறோம்னு மனசுல ஒரே டர்ரா இருந்துச்சி.. சரி தாத்தா கிட்டயே கேட்டுடுவோம்னு அவரு ஊட்டுக்கு போவசொல்லோ வழக்கம் போல பெரிய பொஸ்தகத்த மூஞ்சிக்கி நேர வச்சி படிச்சிக்கிட்டு இருந்தாரு..
அட்டைய பார்த்தேன் நேர போய் பார்த்த ரொப்பி புடனும்னு திரும்பிட்டேன்..

அட்டைல அப்படி என்னா போட்டு இருந்திச்சின்னு கேக்குறிங்களா..?
அது என்னமோ.. Z..E..N..A..N..A..

எப்படியோ எனக்கு பதில் கிடச்சிடிச்சி..

Z FOR ZENANA.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த வெள்ளாட்டுக்கு இன்னும் சொம்மா உக்கார்ந்து இருக்குற நாலு பேர கூப்புடுனுமாம் ..
அதனால என் சார்பா ரெண்டு பேரு.. பப்பு, ஹாலிவுட் பாலா.. இவங்க ரெண்டு பேரையும் கூப்டுறேன்..
இவங்க ரெண்டு பெரும் ஒரிஜினல் பாரத்த ரொப்புனாலும் சரி.. இல்ல என்னை மாதிரி இங்கிலிசு கத்துகிட்டு அப்பாலிகா ரொப்புனாலும் சரி.. எப்படியோ வெள்லாடுனா சரி தான்.. ஒரிஜினல் பாரம் வேணும்னா இங்க அமுத்துங்க..

மீண்டும் ஒரு...

காலைல எழுந்திரிகிறேன், சாப்பிடுறேன் , வேலைக்கு போறேன்.. ராத்திரி வீட்டுக்கு வரேன், தூங்குறேன்.. தினமும் செய்வது தான் ஆனாலும் அதிலும் இப்பொழுது எல்லாம் சுவாரசியம் இல்லை..

சதா சர்வ காலமும் எதையோ இழந்தது போல ஒரு உணர்வு..

வீட்ல அன்பான அப்பா, அம்மா.. தினமும் போன் செஞ்சி பேசும் பாசமான அக்கா மாமா.. இப்படி என்னை பற்றி அக்கறை பட சுற்றிலும் சொந்தங்கள் இருந்தும் எதோ ஒரு குறை நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடுகிறது..
இது காதலா? ( ஆஹா.. ஆரம்பிசிட்டான்டானு கட்டைய தூக்காதிங்க )
ச்சே.. நிச்சயம் அந்த கருமம் இல்லங்க.

எனக்கு எப்பொழுது மனச்சோர்வு ஏற்பட்டாலும் இறை வழியிலும் தீர்வு காண்பது வழக்கம்.. சில சமயம் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் தீர்வை தீர்மானிக்க கூடிய அமைதியான மனநிலையை கண்டிப்பாக பெற்று வருவேன்.



ஆனால் இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த சோர்விற்கு இறை வழியிலும் தீர்வு காண முடியவில்லை. கோவிலுக்கு சென்றாலும் நினைவுகள் வந்து தொலைகிறது..

யோசித்து பார்த்தால் சில நிகழ்வுகள் நேற்று நடந்தது போல இருக்கு.. ஆனால் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.



கடற்கரையில் சிறு பிள்ளைகளை போல நண்பர்களுடன் மண்ணை எடுத்து அடித்து தலையில் பூசி முதுகில் ஏறி விளையாடியது.


மாலையானால்.. "டேய் மச்சான் எங்க இருக்க நான் வந்துகிட்டே இருக்கேன் ரெடியா இரு வெளில போகணும்" என்று போன் செய்யும் நண்பன்.

"டேய் கிஷோர். வீட்ல இருக்கேன்டா வந்து கூட்டிகிட்டு போ.. "பர்கர்" வாங்கி கொடு " என்று உரிமையுடன் அழைக்கும் நண்பன்.

சிதம்பரம், புதுச்சேரி, வந்தவாசி,திண்டிவனம், தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஏற்காடு இப்படி பல இடங்களில் பைக்ல போகும் போது.. பின்னால உக்கார்ந்து என் முதுகில் சாய்ந்து பாட்டு பாடிக்கொண்டு வரும் நண்பன்.

"நான் சிதம்பரம் வரனும்னா மூர்த்தி ஹோட்டல்ல சிக்கன் வாங்கி தரனும்" என்று கண்டிஷன் போடும் நண்பன்.

"இன்னைக்கு அந்த படம் டிரைலர் பார்த்தேன். செம சீன் மச்சி.. இன்னைக்கு சாயந்திரம் நிச்சயம் போகணும்.. வேற வேலை எதுவும் வச்சிக்காதடா." என்று ஆர்டர் போடும் நண்பன்.

"என்னடா எதாவது பிரச்சனையா ? நான் இருக்கேன்டா கவலை படாதே "என்று தோல் மீது கை போட்டு கட்டியணைத்து ஆறுதல் கொடுக்கும் நண்பன்.

முகம் பார்த்தே என் மனகஷ்டங்களை கண்டுகொண்டு விசாரிக்கும் நண்பன்.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? உன்னால முடியும்டா.."என்று தன்னம்பிக்கை கொடுத்த நண்பன்..

இப்படி
என்னோட வாழ்க்கைல பலவாறாக ஒன்றிவிட்ட நண்பர்கள்.. அவர்களின் நினைவுகள் .. இப்பொழுது அவர்களின் பிரிவு வந்த போது. ஏன் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு போகிறோம் என்ற கவலையும் வந்தது.


இந்த இரண்டு வருடங்களில் அனைவரும் பொறுப்பான பதவிகளில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும்.. முடிந்த வரையில் தொலைபேசியில் உறவுகள் நீடித்தாலும்..

எனது நட்பு வட்டம் சிறிதாயினும்..சந்தோஷ தருணங்களை அள்ளி கொடுத்த என் நண்பர்கள் இப்பொழுது வேலை நிமித்தமாக பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடப்பது வேதனை அளிக்கிறது..
மீண்டும் அதே கவலை இல்லாத..வெகுளித்தனமான.. விளையாட்டுதனமான நிகழ்வுகள் நிகழ மனம் ஏங்குகிறது .. இந்த ஏக்கம் என் நண்பர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் ..
மீண்டும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்..
காத்திருப்பது காதலில் மட்டும் இல்லை .. நல்ல நட்புகளுக்காக காத்திருப்பதும் சுகம் தான்.