Tuesday, June 7, 2011

UNKNOWN - திரை விமர்சனம்


ஒருவன் தன் அழகான மனைவியோடு 'பயோ டெக்னாலஜி' கான்பிரன்சில் கலந்து கொள்ள வெளிநாடு செல்கிறான். ஏர்போர்டில் இருந்து நேராக ஹோட்டல் சென்று இறங்குகிறார்கள். மனைவி ஹோட்டல் உள்ளே செல்ல இவன் எடுத்து வந்த பொருட்களை சரி பார்க்கும் போது ஒரு பெட்டியை மாத்திரம் ஏர்போர்டில் விட்டு விட்டு வந்தது தெரியவர மனைவியிடம் கூட சொல்ல நேரம் இல்லாமல் வேறு ஒரு டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் நோக்கி செல்கிறான்.

வழியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு டாக்ஸி ஆற்றில் விழுகிறது. விழும் பொழுது இவன் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு செல்கிறான். காருக்குள் இருந்த பெண் டாக்ஸி டிரைவர் இவனையும் காப்பாற்றி கரையில் கொண்டு வந்து சேர்க்கிறாள்.

நான்கு நாட்கள் கழித்து நினைவு திரும்புகையில், மனைவியை தனியே ஹோட்டலில் விட்டு வந்தது நினைவு வர.. பரிதவிப்போடு செல்கிறான்.

ஹோட்டல் ஊழியர்களிடம் தான் Dr.மார்டின் ஹாரிஸ் என்பதையும் தான் இங்கு ஒரு கான்ப்ரன்ஸ்ல் கலந்து கொள்ள வந்ததாகவும், தனக்கு விபத்து நேர்ந்ததையும், தன் மனைவி ஹோட்டல் உள்ளே இருப்பதையும் தான் அவளிடம் பேச வேண்டும் என்றும் சொல்கிறான். ஊழியர்கள் இவனிடம் அடையாள அட்டையை கேட்க தன்னிடம் ஒன்றும் இல்லை என் மனைவியுடன் பேசினால் உங்களுக்கு புரியும் எனவே என் மனைவியுடன் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டு அனுமதி பெறுகிறான்.

அவன் ஊழியர்களுடன் சென்று அவன் மனைவியை பார்த்து ஆசையுடன் அவள் அருகே செல்ல அவள் பின் வாங்கி நீங்கள் யார் என்று கேட்கிறாள்.மேலும் நீங்கள் வேறு யாரையோ நான் என்று நினைத்து கொண்டு பேசுவதாகும் சொல்கிறாள். இவர் யார் என்று எனக்கு தெரியாது என்று ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்கிறாள்.

இவன் குழப்பத்தின் உச்சிக்கு சென்று கத்தும் போது அவளுடைய கணவன் Dr.மார்டின் ஹாரிஸ் நான் தான் என இன்னொருவன் வந்து நிற்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இவன் வெளியேற்றபடுகிறான்.

இவன் பயணம் செய்த டாக்ஸியின் பெண் டிரைவர், முகம் பார்க்காமல் தொலைபேசி மற்றும் இணையத்தின் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு இவனை இந்த கான்பிரன்ஸ்க்கு அழைத்த ப்ரொபசர் என்று சிலரை சந்தித்தும் Dr.மார்டின்ஹாரிஸ் நான் தான் என்று நிருபிக்க இவன் எடுக்கும் அணைத்து முயற்சிகளும் தோல்வி அடைகிறது.

நடுவே இவனை கொல்லவும் ஒருவன் துரத்த.. நான் Dr. மார்டின் ஹாரிஸ் தானா? இல்லையா? என்று அவனுக்கே தெரியாத மனநிலையில் அவன் சந்திக்கும் போரட்டங்கள் உண்மையை அறிய அவன் எடுக்கும் முயற்சிகளும் தான் "UNKNOWN" திரைபடத்தின் பரபரப்பான கதை.

இது போன்று அவுட்லைன் உள்ள கதைகள் சில ஏற்கனவே வந்து இருந்தாலும் அதை ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் ஜெயித்து இருகிறார்கள். ரொம்ப நாள் ஆகி விட்டது இப்படி ஒரு பரபரப்பான கதைஅம்சம் உள்ள திரை படத்தை பார்த்து.

Dr. மார்டின் ஹாரிஸ் வேடம் ஏற்று இருக்கும் நடிகர் Liam Neeson கதாபாத்திரத்தின் ஆழம் உணர்ந்து வாழ்ந்து இருக்கிறார் . அவருக்கு அடையும் நம்பிக்கைகளையும்,ஏமாற்றங்களையும் படம் பார்க்கும் நம்மையும் உணர வைப்பது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வது தான் சரி .




அவர் மனைவியாக வரும் நடிகை january jones மற்றும் பெண் டாக்ஸி டிரைவர் ஆக வரும் நடிகை Diane Kruger ஆகியோர் அவரவர் பாத்திரம் உணர்ந்து செய்து இருகிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.. 1.30 மணி நேர என்டர்டயின்மென்ட்க்கு கேரன்ட்டி குடுக்கும் படம்.



Monday, March 7, 2011

"நடுநிசி நரிகள்" - இவன் அதில் ஒருவன் .




வணக்கம் நண்பர்களே..

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. (அடிங்க .. வந்துட்டாண்டான்னு சொல்றது கேக்குது)

ரொம்ப நாள் கழிச்சி ப்ளாக் பக்கம் வந்தா ஒன்னும் புதுசா இல்ல.. அதே.... அவன் என்னை மூக்குல குத்திட்டான்... இவன் என்னை பின்னாடி கடிசிட்டான் ... தைரியம் இருந்த எங்க அண்ணன் மூஞ்சில துப்பி பாரு... டேய் எவன்டா என் தலைவன் தலைல தக்காளிய வச்சி தேய்ச்சது? நீ அந்த சாதிகாரன் என்பதால் தான என்னைய திட்டுன.. எங்க சாதிகாரன விட்டு உனக்கு எதிர் பதிவு போட சொல்றேன் பாருடா.... அதே.. அதே.. அதே.... சாமி முடியல..

தோழமையோட ஒருத்தர ஒருத்தர் கலாய்கிறதும்.. அதை பெருந்தன்மையோடு ஏற்று கொண்டு நட்பு பாராட்டுவதும்.. மனமொத்த புரிதல்களும் ,முகமறியா நட்புகளும் இப்பொழுது இணையத்தில் காணவில்லை பட்டியலில் சேர்ந்து விட்டது போலும்.

என்னத்த சொல்றது.. பெட்ரோல் விலை ஏறி போச்சுன்னு மண்ணெண்ணெய் ஊத்துனேன். மண்ணெண்ணெய் விலை ஏறி போச்சுன்னு குருடாயில் ஊத்துனேன் அப்படிங்குற கதையா.. ஜி -டாக் ல சண்ட போட முடியலுனு ஆர்குட் வந்தோம் அப்பறம் ஆர்குட்ல சண்ட போட முடியலன்னு ப்லோக்க்கு வந்தோம் இப்போ லேட்டஸ்ட் BUZZ வரைக்கும் வந்தாச்சு.. அதுலயும் இவங்க சண்ட நின்ன பாடு இல்ல.


இந்த ஹிட் லிஸ்ட் ஹிட் லிஸ்ட்னு ஒன்னு இருக்குங்க அதை கண்டு பிடிச்சவன் கண்ணுல கம்பிய காச்சி குத்தனும் . அந்த ஹிட் லிஸ்ட நக்குறதுக்கு சில பேரு படுற பாடு.

கொஞ்ச நாளா நடுநிசி நாய்கள் என்கிற ஒரு உலக படத்த பத்திதான் காரசாரமான விவாதம் ஆனால் உப்புக்கு தேறாத விவாதங்கள்.

இவர்களின் விவாதங்களை கொஞ்சம் நேரம் ஒதுக்கி முழுசா படிச்சா... வடிவேலு சொல்ற மாதிரி கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிப்பீங்க சார், அப்படி ஒரு காமெடி .

ஒருத்தர் சொல்றாரு கௌதம் மேனன் தன்னோட அரிப்ப தீர்த்துக்க இப்படி ஒரு படம் எடுத்து இருக்காருன்னு ..
இல்ல நாட்டுல நடக்காததையா அவரு சொல்லிடாருனு இன்னொருத்தர் சொல்றாரு.


இந்த மாதிரி படம் பார்த்து தான் பசங்க கேட்டு போறங்கனு ஒரு தரப்பு..
படம் பார்த்து தான் கெட்டு போறாங்கனா இந்நேரம் நாடு நாறி இருக்கும் இன்னொரு தரப்பு.

வன்புணர்ச்சி செய்யவும் தகாத உறவுகளில் ஈடுபடவும் தூண்டுவதாக ஒரு குற்றசாட்டு ஒருபுறம்.
இணையத்தில் கிடைக்கும் தகாத உறவுகள் மற்றும் வன்புணர்ச்சி காட்சிகள் பார்த்து படாதவர்களா இந்த மாதிரியான படங்களை பார்த்து தூண்ட படுவார்கள் என்று குற்றசாட்டை மறுப்பது மறுபுறம் .

இந்த மாதிரி படம் தான் ஒருத்தனை வன்புணர்ச்சி மற்றும் கொலை செய்ய தூண்டியது என்று பத்திரிகை ஆதரத்துடன் ஒரு வாதம்.
அப்படி என்றால் வெளி நாடுகளில் இப்படி ஏன் நடப்பது இல்லை என்று எதிர் வாதம் ( சில இடங்களில் நடந்ததுண்டு.)

நடுவே திட்டமிட்ட குற்றங்களுக்கும் உணர்ச்சி விளிம்பில் நடக்கும் குற்றங்களுக்கும் உள்ள வேறு பாடு குறித்து ஒரு அலசல்.( நிச்சயம் வேறுபாடு உண்டு என்று கூறிய பதிவரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.)

இப்படி செல்லும் இந்த காமெடி விவாதத்தில் நடுவில் சிலர் புகுந்து செம நக்கல் விடுவதும் அதையும் இவர்கள் சீரியஸ் விஷயமாக எடுத்துக்கொண்டு பேசுவதும் ... ஹையோ ஹையோ.. முடியல போங்க.

நானும் அந்த படத்துக்கு போனேன்ங்க..உலக அதிசியமா எங்க ஊர்ல டிக்கெட் விலை கம்மி பண்ணி வித்தாங்க...
அப்பறம் சரியான நேரத்துக்கு படம் போடாங்க.. ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன் இண்டர்வெல்ல கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பாப்கார்ன் சாப்பிட்டேன் ( நண்பன் செலவுல) சரியா பத்து நிமிஷத்துல திரும்பவும் படம் ஆரம்பிச்சிடாங்க. அப்பறம் என்ன வாங்குன பாப்கார்ன்ன கொறிசிகிட்டே மீதி படமும் பார்த்துட்டு வந்துட்டேன்.


என்னது படத்த பத்தி என்னோட கருத்தா ?

அட போங்க பாஸ்..

என்னால எதிர் பதிவு எல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது.

வர்ர்ர்டா......

குறிப்பு: இப்போ எல்லாம் நடுநிசில தன் இணையத்துக்கு வரமுடியுது அதை நினைசிகிட்டே நம்ம கேரக்டர்ரையும் சேர்த்து யோசிச்சா தலைப்பு ரெடி ஆகிடுச்சி .(இது தலைப்பை பற்றி கேட்பவர்களுக்கு மட்டும்)

Wednesday, October 6, 2010

வாருங்கள்... வாழ்த்துங்கள்..









நண்பர்களே வருகின்ற 11.10.2010 அன்று நண்பர் வினோத்கெளதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் சுற்றும் நட்பும் சூழ வந்து மணமக்களை வாழ்த்த வருமாறு எனது சார்பாகவும் நண்பர் வினோத்கெளதம் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.

கல்யாண நாள் : அக்டோபர் 11 திங்கட்கிழமை
(11- 10 -2010 )
நேரம்: காலை 6-00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வரவேற்பு : அக்டோபர் 10
இரவு 7 மணிக்குமேல் 9:30 க்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வேலூர் வரவேற்பு : அக்டோபர் 12 மாலை 5 மணிக்குமேல்
இடம்: ரயில்வே இன்ஸ்டியுட், குடியாத்தம் ரோடு, காட்பாடி.


மாப்ள தான் பத்திரிகை வைக்கணும்னு அடம் புடிக்கிறவங்க வினோத்கெளதம் கிட்ட பேசுங்க..

நட்புடன்

-கிஷோர்