Wednesday, March 31, 2010

கட்டிங் வித் கிஷோர் - 5

சந்தோசம்

கொஞ்ச நாளா மனசு உண்மையா சந்தோஷபடுற மாதிரி சில சம்பவங்கள் நடந்துகிட்டு வருது.. ஆமாங்க.. என்னோட நண்பர் ஒருத்தருக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருது.. ஏற்கனவே வீட்டுல முடிவு பண்ணிட்டாலும் பொன்னும் பையனும் பேசி புரிஞ்சிக்கிட்டு அவங்க சம்மதம் சொல்லட்டும்ன்னு வெயிட் பண்றாங்க.. எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. எதையும் திடமா முடிவுபண்ணி சொல்ல மாட்டான் (தெரியாது ).. அதனால பையன் என்ன சொன்னாலும் கல்யாணம் நிச்சயம் நடக்கும்.
எப்படியும் நிச்சயமா சரக்கும்,புது டிரஸ்சும் கிடைக்கும்.. சோ மீ வெய்டிங் பார் தட் டே :) .. கண்டிப்பா கல்யாணம் முடிவு ஆனதும் பையன் யாருன்னு சொல்றேன்.. அதுவரைக்கும் வீணா என்னோட நண்பர்கள் பேர இழுத்துடாதிங்க.. :)

கொஞ்சம் கஷ்டம்

என்னோட போன பதிவுல வாங்கிய ஓட்டு எண்ணிக்கை 16.. ஆனா வந்த கமெண்ட் மொத்தம் 5.. அதுவும் அனுப்புனது 3 பேரு. காரணம் நீங்க நினைக்கிறது தான்.. நான் யாரோட பதிவுக்கும் போய் கமெண்ட் பண்றது இல்ல.

ஆனா உண்மை நிலவரம் என்னன்னா.. நான் follow பண்ற எல்லோரோட பதிவையும் படிக்கிறேன்.. ஆனா எனக்கு பிடிச்ச பதிவுகள்ள என்னால கமெண்ட் பண்ண முடியாததற்கு காரணம் அவங்களோட template -ல comment form placement -ல popup window அல்லது embeded ஆக இருப்பது தான். அப்படி இருந்தால் என்னால் comment செய்ய இயலவில்லை.. full page இருந்தால் மட்டுமே comment பண்ண முடிகிறது.. அதே போல தமிலிஷும் வோட்டு போடுவதற்கு குறைந்த பட்சம் 15 முறையாவது கிளிக் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி செய்தும் சில சமயம் வோட்டு விழுவது இல்லை..

இதனாலே நல்ல பதிவுகளுக்கு மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு கூட comment பண்ண முடிவது இல்லை.. குறிப்பாக பப்பு, கீதப்ரியன் போன்றவர்களின் பதிவுகள்..

இந்த பிரச்சனைக்கு ஹாலிபாலி எனக்கு மட்டும் தனியாக comment போட வசதி செய்து உள்ளார்..

அதே முறையை எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கும்.. எனவே இந்த இரு பிரச்சனைகளையும் தீர்க்க வழி இருந்தா சொல்லுங்க..


இது என்ன பீலிங்க்னு புரியலங்க..

எவ்ளோ சொல்லியும் கேக்காம எங்க வீட்லயும் எனக்கு தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சிடாங்க.. பயோடேட்டா மற்றும் போட்டோ கேக்கும் போது எதோ ஒரு ஆர்வத்துல எழுதி குடுத்துடாலும்.. என்னோவோ மனசுல.. சந்தோசம், வெறுமை , பயம் , குருகுறுப்புன்னு எல்லாம் கலந்துகட்டி ஒரு உணர்வு .. இது என்ன பீலிங்க்னே புரியல.. கல்யாணம் ஆனா பெரியவங்க யாரவது இருந்தா இது என்ன பீலிங்க்னு சொல்லுங்க..

மீண்டும் சந்திப்போம் ...

Saturday, March 20, 2010

நான் - நீ - தற்கொலை

ஹலோ எப்படி இருக்கீங்க?
பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..

ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.

ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..
ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..

அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..

என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..

நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..

அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.

அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.

இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழி ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...

இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..

ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்

இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.

Thursday, March 11, 2010

கட்டிங் வித் கிஷோர் - 4

சில வருடங்களுக்கு முன்பு.. என்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி சட்டிஸ்கர் மாநிலம் பச்சேலி என்ற ஊரில் இருந்தார்கள். விடுமுறைக்காக அங்கே சென்று இருந்தேன் .மாமாவிற்கு அடிக்கடி லீவ் போட முடியாத காரணத்தால் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு நாள் 100 கிமீ தொலைவில் இருக்கும் சித்திரகோட் பால்ஸ் போவதென்று முடிவு செய்து.. கிளம்பினோம்..நான்,அக்கா எனது நண்பர்கள் இருவர்..
அழகு கொஞ்சும் மலை காடுகளையும் நீர்விழ்சிகளையும் பற்றி இன்னொரு பதிவில் படங்களுடன் சொல்கிறேன் ..
நாங்கள் போன பாதை மலைவாழ் மக்கள் வசிக்கும் காட்டு பகுதி.. சொல்லி வைத்தார் போல் இரண்டு மலைகளை தாண்டியதும் வண்டி மக்கர் செய்து விட.. மலை சரிவில் தூரத்தில் மலைவாழ் மக்களின் குடிஇருப்புகள் தெரிய.. ரேடியேடற்கு தண்ணி எடுப்பதற்காக நானும் என் நண்பர்களில் ஒருவனும் மட்டும் கேன் எடுத்துக்கொண்டு மலை சரிவில் இருந்த மலைவாழ் மக்களின் ஊருக்குள் சென்றோம் .

போகும் வழியில் நமது அரசு அந்த மலைகளிலும் சாலை வசதி தண்ணீர் வசதி செய்து இருப்பதை பற்றி பெருமையுடன் பேசி கொண்டு சென்றோம்.. ஆனால் அது எந்த ஜென்மத்திலும் ஏழைமக்களுக்கு சென்று அடையாத வசதிகள் தான் என்று ஊருக்குள் நுழைந்ததும் புரிந்தது. யாரும் இல்லாத பகுதியில் சாலை வசதிகளும் மின்சார வசதிகளும் செய்து வைத்திருக்கும் அரசு மக்கள் வாழும் பகுதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஆச்சர்யம் (அலட்சியம் ).

கதைகளில் சினிமாக்களில் பார்ப்பதை போல யாரும் எங்களை சுற்றி வளைக்க வில்லை.. மாறாக குறுகிய தலைகளும் சற்றே உப்பிய வையறுமாய் நீண்ட காது மடல்களில் பெரிய வளையங்களுடன் வெள்ளந்தி சிரிப்புடன் இருந்த மக்கள் புதியதாக எங்களை கண்டதும் ஓடி ஒளிந்தது தான் ஆச்சர்யம் . இன்றும் மேலாடை அணியாத பெண்கள்,வாடி வதங்கிய குழந்தைகள் வறுமையின் வறுமையின் அத்தனை நிலைகளையும் காண முடிந்தது.

அவர்களிடம் தூரத்தில் நின்ற வண்டியை காட்டி வாட்டர் கேனையும் காட்டி தண்ணீர் வேண்டும் என்றோம். எங்களை மாறி மாறி பார்த்தவர்கள் நம்பிக்கை வந்தவர்களாய் தண்ணீர் பிடித்து கொடுத்தார்கள்.

எங்களுக்கும் சற்று பயம் நீங்கி அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். சந்தோசத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதாலோ என்னவோ அவர்களின் நிலையை அவர்களின் புரியாத பாஷைகளிலும் சைகைகளிலும் விளக்க புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை. வாழ்வோ சாவோ எல்லாம் இவர்களுக்குள்ளே பார்த்து கொள்கிறார்கள் . காட்டில் கிடைக்கும் பழங்களை மலைக்கு கீழே இருக்கும் ஊர்களுக்கு சென்று விற்று அந்த பணத்தில் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நேரம் ஆகி விட்ட படியால் அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.. வரும் போது அவர்களிடம் ஒரு கூடை நிறைய நாவல் மற்றும் பலா பழம் வாங்கினோம் அதற்கு அவர்கள் பெற்று கொண்ட தொகை வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டாயபடுத்தி கொடுத்ததும் அதிக பணம் வாங்க மறுத்து விட்டார்கள்..
அந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளி வந்தோம்.. மீண்டும் காதுகளில் அந்த குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பு சத்தம்..
-----------------------------------------------------------------

நித்தியானந்தா ஜி

சாமியார் நடிகையுடன் படுக்கை அறை காட்சிகள் என்று பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் விளம்பரம் செய்து தங்கள் ரேட்டிங்கை உயர்த்தி கொண்டனர்.

உலகையே தனது பேச்சால் மயக்கிய ஒருவன் எதில் கோட்டை விட்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
யாரை குறை சொல்வது?
40 வயது நிரம்பாத ஒருவனை சாமி என்று பின் தொடர்ந்து சென்றவர்களையா ?
அவனை பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியட்ட பத்திரிக்கைகளையா ?
பணமும் புகழும் மரியாதையும் இந்த சமூகத்தில் கிடைத்த பின்பும் அடங்காமல் ஆட்டம் ஆடியவணையா?

யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது.. அரங்கேறிய அசிங்கங்களுக்கு மூவருமே காரணம்.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவன் பேரில் நில அபகரிப்பு மோசடி செய்தி ஒரு நாளிதழில் வந்த போது கண்டு கொள்ளாமல் இப்பொது மட்டும் இதை செய்தியாக போட்டு தங்களை மக்கள் முன் நியாயஸ்தர்களாக கட்டி கொள்ளும் மீடியாக்கள் வாழ்க..

ஒருவேளை புகழ் பெற்ற நடிகையுடன் இல்லாமல் வேறு பெண்களுடன் இருந்த காட்சிகளை பத்திரிகைகளும் மீடியகளும் இவ்வளவு பிரபலபடுத்தி இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ரஞ்சிதாவை புகழ் பெற்ற நடிகை என்ற ஒரே காரணத்திற்காக முகத்தை கூட மறைக்காமல் முன்னிறுத்தி அந்தரங்க ஆபாசங்களை குடும்பங்களில் சிறு பிள்ளைகள் கூட பார்பார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் வீட்டின் நடு கூடம் வரை கொண்டுவந்த மீடியாக்கள் காஞ்சிபுரம் பூசாரியுடன் கருவறையில் விளையாடிய குடும்ப "குத்து " விளக்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ?

நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்.. இப்படி ஓடி ஒளியாம தைரியமா வெளில வந்து மக்கள் கிட்ட செருப்படியோ இல்ல அழுகுன முட்டை வீச்சோ வாங்கிட்டு பாதுகாப்பா ஜெயிலுக்கு போய்டு... நீ ஜெயிலுக்கு போய்டா இந்த மானங்கெட்ட மக்களும் சீக்கிரம் உன்ன மறந்துட்டு வேற எவனாச்சும் புதுசா வருவான் அவன் பின்னாடி போய்டுவானுங்க . நீ அங்க போய் உன்னோட சூப்பர் சீனியர் பிரேம் (பிரேமானந்தா) இருக்காருல்ல அவர பாலோவ் பண்ணி நீயும் ஜெயிலுக்கு பக்கத்துலயே ஒரு ஆசிரமம் வச்சி போலீஸ் பாதுகாப்போட பிசினஸ் பண்ணு.. எவன் என்ன கேப்பானு அப்போ பார்த்துடுவோம்..

எதோ நானும் ஒரு‘வுமனைஸர்’ [பெண்களை நேசிப்பவன் - நன்றி : திரு.சாரு பின் நவீனத்துவ எழுத்தாளர் (என்று ஆள் வைத்து சொல்லிகொள்பவர்) :) ] என்ற முறைல சொல்றேன்.. வீணா பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடாத..
--------------------------------------------------------------------
ரத்த கண்ணீர்.. இந்த படத்தின் காட்சிகளை அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் ஆனால் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு நேற்று அமைந்தது.

M.R.R அந்த காலத்துலயே ஸ்டைல், மானரிசம், டயலாக் டெலிவரி, நக்கல் என்று எல்லாத்துலயும் புகுந்து விளையாடி இருக்கிறார். அம்மாவை கவுன் போட சொல்வதும், மாமாவை வெளியே போக சொல்வதும், இந்திய அரசை கிண்டல் பண்ணுவதுமாய் மனுஷன் பின்னி இருக்கிறார்.
அதிலும் நோய் வந்த பின்பும் அவரின் குசும்பு குறையாத பேச்சை ரொம்பவே ரசிக்க வைத்தார். M.N ராஜம் அவர்களும் தைரியமாக யாரும் நடிக்க தயங்கும் வாய்ப்பை பெற்று அசத்தி இருக்கிறார்..

டேய் நித்தி..உன் படத்த ஊரே பாக்குறது இருக்கட்டும் நீ முதல்ல இந்த படத்த பாரு. you must see this movie..

---------------------------------------
மீண்டும் சநதிப்போம் ..

Tuesday, March 2, 2010

இது தான் காதலா?

அர்ச்சனா ரெஸ்டாராண்ட் ...போன மாதம் கல்யணம் ஆகி இருந்த வினோத்தும் நந்தினியும் வேறு உலகத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு அந்த ஹோட்டல்லின் கடைசி டேபிள்லில் உணவுடன் உணர்வையும் அசைபோட்டு கொண்டு இருந்தனர் . பேசும் போது எதேச்சையாக எதிர்புறம் பார்வையை செலுத்திய நந்தினிக்கு அதற்கு மேல் அவள் கணவன் வினோத்திடம் சகஜமாக பேசமுடிய வில்லை.. காரணம் எதிர் டேபிள்லில் "சிவா".. அவளின் முன்னால் காதலன்..

சிவாவின் விழிகளில் ஏளனம் .. என்ன இருந்தாலும் என் கூட ரெண்டு வருஷம் சுத்துணவ தான என்ற ஒரு அலட்சிய பார்வை.

அவளை பார்த்தபடியே பேரர் கொண்டு வந்த ஜூஸை பருகினான்.. ஜூஸ் இல் இருந்த சில்லிப்பு அவன் மனதில் இருந்த தீக்கு இரையாகி காணாமல் போய் கொண்டு இருந்தது..
எத்தன நாள் இதே மாதிரி என்கூட ஹோட்டல்ல சாப்பிட்டு இருப்பா? இன்னைக்கு அவன் புருஷன் கூட.. பத்தினி மாதிரி..
இவள் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லன்னு நினைச்சிட்டா போல இருக்கு..
பாருடி நான் சந்தோசமா இருக்கேன்.. இன்னைக்கு நான் அன்னைக்கு இருந்ததை விட அதிகம் சம்பாதிக்கிறேன் .. அன்னை நான் இருந்த நிலைமையை காரணம் காட்டி தான என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிகிட்ட? இப்போ நான் சந்தோசமா இருக்கேன்.. ஆனா நிம்மதியா இல்லை . நான் இன்னைக்கு இருக்குற நிலைமைய உங்கிட்ட சொல்லி உன்னை அழவச்சி பார்த்தாதான் எனக்கு நிம்மதி. அந்த சந்தர்ப்பதிற்காக தான் காத்துகிட்டு இருக்கேன்..

சிவா நினைத்தபடியே அவனுக்கு சந்தர்பம் அமைந்தது.. வினோத் எதையோ மறந்தவனாய் அவளிடம் சொல்லி விட்டு காருக்கு திரும்ப.. அவள் எழுந்து கை கழுவ சென்றாள்.. இது தான் சரியான் சந்தர்ப்பம் என்று எண்ணியவனாய் மின்னலாய் அவளை பின் தொடர்ந்தான்..

அந்த அறை கதவை திறந்ததும்.. அவன் எதிர்பார்க்காமல் அந்த குரல் கேட்டது..

எப்படி இருக்கீங்க சிவா?-நந்தினி

பேசினால் பயந்து ஓடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து வந்த கேள்வியால் இன்னும் கோபம் தலைகேறியது.. ..

ச்சே.. கொஞ்சம் கூட வெக்கபடாம பேசுற.. எத்தன நாள் என்கூட இதே மாதிரி சுத்தி இருப்ப.. என்று ஆரம்பித்தவன்.. மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் நெருப்பு துண்டங்களாக கொட்டினான்.

இதெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவளின் இதழ்களில் ஒரு சின்ன புன்சிரிப்பு.. விழிகளில் பரவசம்.. மற்றபடி அவளிடம் எந்த பதிலும் இல்லை..
இதை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் அதிகம் ஆகியது..

ச்சே.. என்ன ஜென்மம் நீ? இவ்ளோ பேசுறேன் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம சிரிக்கிற.. உன்னை போயா ரெண்டு வருஷம் உருகி உருகி காதலித்தேன்? ஒருத்தனுக்கு காதலியா துரோகம் பண்ணிட்டு இப்போ அடுத்தவனுக்கு மனைவியா அதையே செய்யறியே உனக்கு வெக்கமா இல்ல? தயவுசெஞ்சி உன் புருஷனுக்காது இனிமே உண்மையா இரு..

"இனி என் வாழ்நாள் முழுக்க நான் நினைச்சி கூட பார்க்க விரும்பாத ஒரே நபர் நீயா தான் இருக்க போற.." என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் கதவை வேகமாக திறந்து வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றவுடன். அந்த அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று.. மனதிற்குள் பேச தொடங்கினாள் ..
இல்ல சிவா.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணல.. நான் எப்படி சிவா எனக்கே துரோகம் பண்ணிக்க முடியும்?.
சிவா அன்னைக்கு நீங்க இருந்த நிலைமைல.. உங்க சொந்த வாழ்கையை பத்தி கவலைபடல.. என்னை கல்யாணம் செய்யணும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் உங்க மனசுல இருந்துச்சி.
எனக்காக நீங்க உங்களுக்கு வந்த வாழ்கைல உயர போகிற நல்ல சந்தர்பங்களை எல்லாம் உதறி தள்ள தயாரா இருந்திங்க..

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாழ்கை இருக்கு.. நிதர்சன வாழ்கை.. அதற்கு காதல் மட்டும் பத்தாது சிவா.. கல்யாணத்துக்கு பின்னாடி நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சினைகளை கூட என்னால தாங்கிக்க முடியாது சிவா.

நான் ரசித்து ரசித்து உருகி உருகி காதலித்த.. காதலை மட்டுமே எனக்கு தந்த என் சிவா முகம் திருப்பி போறத என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது..

என்னோட சிவா வாழ்நாள் முழுக்க நல்லா இருக்கனும்.. என்னோட சிவா வாழ்கைய கெடுக்குற எந்த விஷயத்தையும் எதிர்க்க நந்தினி தயங்கமாட்டா..
அதுக்காக இந்த நந்தினி எதுவானாலும் செய்வா..
அவளையே விட்டு கொடுக்கறத கூட..
இதற்கு இந்த உலகம் என்னை ஆயரம் பேர் சொல்லி அழைக்கலாம்.. எனக்கு கவலை இல்லை ..
என்னை பார்த்து "இது தான் காதலா?" என்று கேட்கலாம்.
ஆம்.. என்னை பொறுத்தவரை "இதுவும் காதல் தான்".