Thursday, November 12, 2009

பதிவர்களுக்கு கொண்டாட்டம்

இங்கே அலைகடலென திரண்டு இருக்கும்.. எனது அருமை பிளாக் வாசக வாசகியர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.. எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி.. நான் பிளாக் எழுதுறத நிறுத்திடலாம்னு இருக்கேன்.
(
யாருங்க அது அங்க விசில் அடிச்சி கைதட்றது?)

கொஞ்சம் அமைதியா இருங்க நான் பேசி முடிச்சிடுறேன்..
அதாவது நான் இந்த ப்லோக் எழுத ஆரம்பிச்சி.(என்னது அதுக்குள்ள சந்தன மாலை, பொன்னாடைன்னு..)


நான் எழுத ஆரம்பிச்சி 11 மாசம் தான் ஆகுது..( டேய் யாருப்பா அது கூட்டத்துல எழுந்து டான்ஸ் ஆடுறது?)


ஆனா அதுக்குள்ள நகைசுவை, சீரியஸ்,கதை, கவிதை,அரசியல், சினிமா, நையாண்டி.. மொக்கைனு.. எல்லாத்துலயும் பூந்து விளையாடுனதுல ஒரு ஆத்மதிருப்தி ..( ங்கொய்யால.. எவண்டா செருப்ப வீசுனது?)


கடுமையான வேலை பளுவிற்கு நடுவுல பல புதிய பதிவர்கள் பக்கம் போய் அவங்கள உற்சாகபடுத்தி அவங்கள முன்னுக்கு கொண்டு வந்ததுல முக்கியமான பங்கு என்னு...(அடிங்.. எவண்டா அழுகுன தக்காளிய மூஞ்சில வீசுனது?)


நான் எழுதிய ஆங்கில பட விமர்சனத்த படித்த பின் தான் ஹாலிவுட் பாலா போன்ற சிலர் விமர்சனம் எப்படி எழுதனும்ங்க்ற அடிப்படை விஷயத்தயே தெரிஞ்சிட்டங்க.. அந்த வகையில் திரை விமர்சனத்திற்கு ஒரு புதிய வரைமுறைய வித்திட்டவன் என்ற பெருமை பெற்ற நான்.. ( ஹேய் .. ஆத்தி.. ஆசிட் முட்ட..ஜஸ்ட் எஸ்கேப்..)


இப்படி பல வழிகளில் சிறந்த எழுத்தாளர்களை.. கவிஞர்களை.. விமர்சகர்களை செம்மைபடுத்தி உருவாக்கி கொண்டு இருக்கும் நான். இப்படி திடீர் என்று எழுதுவதை நிறுத்துவதாக முடிவு எடுத்தது ஏன்?.. என்று உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் எழலாம்.. அதை நீங்க என்னிடம் தைரியமாக கேட்கவும் உரிமை உண்டு.. அப்படி நீங்கள் கேட்காவிட்டாலும் காரணத்தை தெள்ள தெளிவாக இந்த கூட்டத்திலே சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.( டேய்.. "சேர " தூக்கி எரியாத மேல பட்டுடபோது.. )


பதிவுலகம் என்னிடம் இருந்து தீரா பசியுடன் எழுத்து உணவை எதிர்பார்த்தாலும்.. பதிவுலகத்திற்கு பின்னால் "ஐட்டம் ".. ச்சே.. சில சொந்த வேலைகள் கோர பசியுடன் தாண்டவம் ஆடுவதால். எனது எழுத்து பணியை நிறுத்தி விட கூடிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன்.( டேய் எவண்டா பேசிகிட்டு இருக்கும் போது அருவா வீசுகிறது? )


எனது உரையை முடிப்பதற்கு முன்னாள் என்னை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியதன் மூலம் தனது வாழ்கையில் ஒரு அழியாத வரலாற்று சம்பவத்தை அரங்கேற்றி கொண்ட என் நண்பன் வினோத்..(அட இருங்கப்பா.. அதுக்குள்ள "மைக்" கழட்டுறிங்க ..)


எனவே.. இந்த.. ( டேய் எவண்டா மேடைக்கு கீழ நெருப்பு வச்சிட்டு ஓடுறது... ஐயோ.. காப்பாத்துங்க.. )


நான் எழுதுனத நிறுத்துனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா? அதை தெரிஞ்சி கிட்ட பின்னாடி உங்கள சந்தோசமா இருக்க விட்டுடுவனா? வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..


கட்டிங்:- பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து பதிவுகளை படிப்பேன்.. அதனால.. 18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும்.

Tuesday, November 3, 2009

தொடராமல் தொடர்கிறேன்..

ஒரு 2 நாளைக்கு முந்தி நம்ம பிரண்டு வினோத்கௌதம் டேய் பன்னாட சொம்மா தான குந்திகினு கீற .. சொம்மா குந்திகினுகீறதுக்கு இந்த "பாரத்த" யாவது ரொப்புடான்னு சொன்னான். நானும் ஏதோ நண்பன் பாங்குல லோன் வாங்கி தர தான் பாரம் தரான் போல இருக்குனு வாங்கி பார்த்தா. அடங்கொய்யா .. நாம சின்ன புள்ளைல விளையாடுவோம்ல அதாங்க.. ஓடி போய் தொட்டுட்டு கொக்கு போடுறது.. எச்சி வுட்டேன் பால் வுட்டேன்.. மாதிரி.. வெள்ளாட்டு பாரம் அது.. இப்போ பய புள்ளைங்க கம்பியுடேர்ல விளையாடுதுங்க.. அதுங்கள சொல்லி குத்தம் இல்ல.. இப்போ எங்க விளையாட நேரம் கிடைகிது.. இப்படி வெள்ளான்டாதான் வுண்டு.. என்ன ஒன்னு கருமம் எல்லாமே இங்கிலிபிஸ்ல எழுதி இருந்துது.

பெயில் ஆனாலும் ரெண்டாங் கிளாஸ் வரைக்கும் வந்து இருக்குறத நெனைக்கும் போது எல்லம் மனசுல ஒரு கெத்து வரும்..தவிர abcd அல்லா எழுத்தும் நமக்கு அத்துபடி தான். ஆனா ஒரு ஒரு எழ்த்துக்கு பக்கத்துலயும் abcd மாத்தி போட்டு இருக்கசொல்லோ கொஞ்சம் கன்பிஸ் ஆய்ட்டேன்..

நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஸ் வாத்தியார் நம்ம கணேசு தான். கணேசு பக்கத்து டூரிங் டாக்கிஸ்ல ஆப்பரேடோர்ஆ இருக்காரு.."பிட்டு"படம் ஓட்ற கொட்டா தானாலும் வெறும் இங்கிலிஸ் பட "பிட்டா" ஓட்றதால கொஞ்சம் இங்கிலிசு வார்த்தைய தெரிஞ்சி வச்சி இருப்பாரு.. அவரு கிட்ட பொய் சொன்னேன் இந்த மாதிரி.. இந்த மாதிரி..மேட்டரு.. கொஞ்சம் ஹெல்பு பண்ணு அப்பாலிகா குவாட்டர் வாங்கி தரேனு சொன்னதும் மடிஞ்சிடிச்சி.. கணேசு பாரத்த படிச்சி பார்த்துட்டு.. டேய் கிசோரு இத ரொப்பனும்னா ரொம்ப இங்கிலிசு அறிவு வேணும்டா.. அதுக்கு முதல்ல நெறைய இங்கிலிசு வார்த்தைய கத்துக்கணும்னு சொல்லிச்சி..நான் எப்படின்னு மண்டைய சொரிய.. டாமல் என் முன்னாடி ஒரு பண்டல எடுத்து போட்டுச்சி.. பார்த்தா அம்புட்டும் பிட்டு பட போஸ்டரு..

இன்னைக்கு எப்படியும் எல்லா வார்த்தையும் கத்துக்கிட்டு பாரத்த ரொப்பிபுடுனும்னு ஒரு முடிவோட பண்டல எடுத்துக்கிட்டு வூட்டுக்கு போய் குப்புற அடிச்சி படுத்துகிட்டு எல்லாத்தையும் படிச்சிபுடனும்னு ஆரம்பிச்சேன்...

A FOR ALEXANDRA
B FOR BAY WATCH
C FOR CALL GIRLS
D FOR DARLING
E FOR ELISA
F FOR FIRST NIGHT
G FOR GIRLS AVAILABLE
H FOR HONEY MOON
I FOR INTENSE LOVE
J FOR JOY OF LOVE
K FOR KISS ME WILD
L FOR LOVE COVER GIRL
M FOR MID NIGHT LUST
N FOR NAUGHTY GIRL
O FOR ORIGINAL SIN
P FOR POINT OF SEDUCTION
Q FOR QUEEN'S LAND
R FOR RIOTOUS DESIRE
S FOR SIRACO
T FOR TWO MOON JUNCTION
U FOR UNFAITHFUL
V FOR VIOLENT LUST
W FOR WITH ME TONIGHT
X FOR X-MAS LOVER
Y FOR YOU AND ME

கருமம் இந்த "Z" எழுத்துக்கு மட்டும் வார்த்த எங்கயும் கிடைகல.. என்னடா பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ.. நம்ம ஏரியா கடைசி ஊட்டு தாத்தா நியாபகத்துக்கு வந்தாரு.. பெரிய படிப்பு படிச்சவரு.. பொண்ணு புள்ளையெல்லாம் வெளி நாட்ல செட்டில் ஆகிடாங்க.. பெர்சும் அவரு பொண்டாட்டியும் மட்டும் தான்.. அந்த ஊட்டுக்கு போறப்ப எல்லாம் தாத்தா பெரிய பெரிய இங்கிலிசு புத்தகம் வச்சி மூஞ்சி மறையுற மாதிரி வச்சி படிச்சிக்கிட்டு இருபாரு. அந்த பொஸ்தகத்து அட்டைய பாக்குறப்ப நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலிசு வார்த்தைய எழுத்து கூட்டி படிச்சி பார்ப்பேன்.. H.. U.. M.. A.. N.. D..I..G..E..S..T.. அப்புறம் P..L..A..Y....B..O..Y.. அப்புறம் S..E..C..R..E..T..S.. இப்படி நெறையா.. அவருகிட்டயும் போய் கேக்கலாம்னு தோணிச்சி. அப்பாலிக்க வேணாம்னு வுட்டுட்டேன்.

பொறவு நம்ம ஏரியா இஸ்கூல்ல ஒன்னாப்பு படிக்கிற அப்பு குட்டிய தாஜா பண்ணி ஒரு பைவ் ஸ்டார் முட்டாய் வாங்கி குடுத்து கேட்டேன்.. அந்தபய புள்ள முட்டாயும் வாங்கிக்கிட்டு கேவலமா ஒரு பார்வை பார்த்து சொல்லுச்சி..

Z FOR ZEBRA.

இருந்தாலும் என்னடா ரொம்ப சின்ன புள்ளைங்க படிக்கிறது எல்லாம் படிக்கிறோம்னு மனசுல ஒரே டர்ரா இருந்துச்சி.. சரி தாத்தா கிட்டயே கேட்டுடுவோம்னு அவரு ஊட்டுக்கு போவசொல்லோ வழக்கம் போல பெரிய பொஸ்தகத்த மூஞ்சிக்கி நேர வச்சி படிச்சிக்கிட்டு இருந்தாரு..
அட்டைய பார்த்தேன் நேர போய் பார்த்த ரொப்பி புடனும்னு திரும்பிட்டேன்..

அட்டைல அப்படி என்னா போட்டு இருந்திச்சின்னு கேக்குறிங்களா..?
அது என்னமோ.. Z..E..N..A..N..A..

எப்படியோ எனக்கு பதில் கிடச்சிடிச்சி..

Z FOR ZENANA.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த வெள்ளாட்டுக்கு இன்னும் சொம்மா உக்கார்ந்து இருக்குற நாலு பேர கூப்புடுனுமாம் ..
அதனால என் சார்பா ரெண்டு பேரு.. பப்பு, ஹாலிவுட் பாலா.. இவங்க ரெண்டு பேரையும் கூப்டுறேன்..
இவங்க ரெண்டு பெரும் ஒரிஜினல் பாரத்த ரொப்புனாலும் சரி.. இல்ல என்னை மாதிரி இங்கிலிசு கத்துகிட்டு அப்பாலிகா ரொப்புனாலும் சரி.. எப்படியோ வெள்லாடுனா சரி தான்.. ஒரிஜினல் பாரம் வேணும்னா இங்க அமுத்துங்க..

மீண்டும் ஒரு...

காலைல எழுந்திரிகிறேன், சாப்பிடுறேன் , வேலைக்கு போறேன்.. ராத்திரி வீட்டுக்கு வரேன், தூங்குறேன்.. தினமும் செய்வது தான் ஆனாலும் அதிலும் இப்பொழுது எல்லாம் சுவாரசியம் இல்லை..

சதா சர்வ காலமும் எதையோ இழந்தது போல ஒரு உணர்வு..

வீட்ல அன்பான அப்பா, அம்மா.. தினமும் போன் செஞ்சி பேசும் பாசமான அக்கா மாமா.. இப்படி என்னை பற்றி அக்கறை பட சுற்றிலும் சொந்தங்கள் இருந்தும் எதோ ஒரு குறை நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடுகிறது..
இது காதலா? ( ஆஹா.. ஆரம்பிசிட்டான்டானு கட்டைய தூக்காதிங்க )
ச்சே.. நிச்சயம் அந்த கருமம் இல்லங்க.

எனக்கு எப்பொழுது மனச்சோர்வு ஏற்பட்டாலும் இறை வழியிலும் தீர்வு காண்பது வழக்கம்.. சில சமயம் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் தீர்வை தீர்மானிக்க கூடிய அமைதியான மனநிலையை கண்டிப்பாக பெற்று வருவேன்.



ஆனால் இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த சோர்விற்கு இறை வழியிலும் தீர்வு காண முடியவில்லை. கோவிலுக்கு சென்றாலும் நினைவுகள் வந்து தொலைகிறது..

யோசித்து பார்த்தால் சில நிகழ்வுகள் நேற்று நடந்தது போல இருக்கு.. ஆனால் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.



கடற்கரையில் சிறு பிள்ளைகளை போல நண்பர்களுடன் மண்ணை எடுத்து அடித்து தலையில் பூசி முதுகில் ஏறி விளையாடியது.


மாலையானால்.. "டேய் மச்சான் எங்க இருக்க நான் வந்துகிட்டே இருக்கேன் ரெடியா இரு வெளில போகணும்" என்று போன் செய்யும் நண்பன்.

"டேய் கிஷோர். வீட்ல இருக்கேன்டா வந்து கூட்டிகிட்டு போ.. "பர்கர்" வாங்கி கொடு " என்று உரிமையுடன் அழைக்கும் நண்பன்.

சிதம்பரம், புதுச்சேரி, வந்தவாசி,திண்டிவனம், தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஏற்காடு இப்படி பல இடங்களில் பைக்ல போகும் போது.. பின்னால உக்கார்ந்து என் முதுகில் சாய்ந்து பாட்டு பாடிக்கொண்டு வரும் நண்பன்.

"நான் சிதம்பரம் வரனும்னா மூர்த்தி ஹோட்டல்ல சிக்கன் வாங்கி தரனும்" என்று கண்டிஷன் போடும் நண்பன்.

"இன்னைக்கு அந்த படம் டிரைலர் பார்த்தேன். செம சீன் மச்சி.. இன்னைக்கு சாயந்திரம் நிச்சயம் போகணும்.. வேற வேலை எதுவும் வச்சிக்காதடா." என்று ஆர்டர் போடும் நண்பன்.

"என்னடா எதாவது பிரச்சனையா ? நான் இருக்கேன்டா கவலை படாதே "என்று தோல் மீது கை போட்டு கட்டியணைத்து ஆறுதல் கொடுக்கும் நண்பன்.

முகம் பார்த்தே என் மனகஷ்டங்களை கண்டுகொண்டு விசாரிக்கும் நண்பன்.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? உன்னால முடியும்டா.."என்று தன்னம்பிக்கை கொடுத்த நண்பன்..

இப்படி
என்னோட வாழ்க்கைல பலவாறாக ஒன்றிவிட்ட நண்பர்கள்.. அவர்களின் நினைவுகள் .. இப்பொழுது அவர்களின் பிரிவு வந்த போது. ஏன் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு போகிறோம் என்ற கவலையும் வந்தது.


இந்த இரண்டு வருடங்களில் அனைவரும் பொறுப்பான பதவிகளில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும்.. முடிந்த வரையில் தொலைபேசியில் உறவுகள் நீடித்தாலும்..

எனது நட்பு வட்டம் சிறிதாயினும்..சந்தோஷ தருணங்களை அள்ளி கொடுத்த என் நண்பர்கள் இப்பொழுது வேலை நிமித்தமாக பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடப்பது வேதனை அளிக்கிறது..
மீண்டும் அதே கவலை இல்லாத..வெகுளித்தனமான.. விளையாட்டுதனமான நிகழ்வுகள் நிகழ மனம் ஏங்குகிறது .. இந்த ஏக்கம் என் நண்பர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் ..
மீண்டும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்..
காத்திருப்பது காதலில் மட்டும் இல்லை .. நல்ல நட்புகளுக்காக காத்திருப்பதும் சுகம் தான்.