Saturday, April 4, 2009

எங்க இருக்கா என் பொண்டாட்டி... ?

சொல்லறதுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு...

இந்த மாசமும் அடுத்த மாசமும் ஏகபட்ட கல்யாண பத்திரிகை வந்திருக்கு .. நண்பர்கள், கூட வேலை பாக்குறவங்க, சொந்த காரங்க அப்படின்னு ஏகபட்ட கல்யாணம்...

நான் என்ன சொல்ல வரன்னு கேக்குறிங்க அதானா...?

நிச்சயம் ஆன உடனே இவனுங்க பண்ற அழும்பு இருக்கே... அந்த பொண்ணு நம்பர் நிச்சயம் நடக்கும் போதே கால்ல விழுந்து கெஞ்சி கூதாடி வாங்கிட்டு வந்துடுரானுங்க.. முக்கியமான விஷயம் பேசும் போதெல்லாம் நம்ம கிட்ட ஓசி வாங்கி பேசுரவனுங்க... இப்போ 500,1000 னு டாப் அப் பண்ணி மணி கணக்குல கடலை போடுறானுங்க..( அந்த பக்கம் விதியேனு அட்டென்ட் பண்ணிட்டு இருக்கும் அந்த பொண்ணு...)

ஒரு பொண்ணு இவனுங்க பேசுரத கேக்குதுன்னு இவனுங்க பண்றது இருக்கே... காந்தி , புத்தர் எல்லாம் இவனுங்க கிட்ட வந்து எப்படி நல்லவனா இருக்குறதுனு கேட்டுகிட்டு போகணும்... அப்படி ஒரு பிட்டு... அட இவனுங்கள விடுங்க... ஏதோ காஞ்சி கிடந்தவனுங்க ஒரு பொண்ணு மாட்டிகிட்டதும் மேயுரானுங்கனு விட்டுடலாம்..

புதுசா கல்யாணம் பண்ணிட்டு ரவுசு பன்றவனுங்க இருக்கானுங்க பாருங்க... ஐயோ... நம்ம வைத்தெரிச்சல கொட்டிகிறதுகுன்னே நம்ம முன்னாடி வருவானுங்க... மச்சான் இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்ரமா போகணும் wife வெளில அழச்சிக்கிட்டு போகணும்... அட்ஜஸ்ட் பண்ணிகடா ..சரி போய் தொலைன்னு சொன்னாலும்... நைட் புல்லா தூக்கம் இல்லடா நாளைக்கும் லீவ் போடலாம்னு இருக்கேனு வெறுபேதுவானுங்க ..

அட இது கூட பரவா இல்லைங்க... பொண்டாட்டிய வெளிய அழச்சிட்டு போகும் போது இவனுங்க பண்றது இருக்கே.. எவ்ளோ இடைஞ்சல் பண்ணுவானுங்க தெரியுமா?
அட.. கல்யாணம் ஆகாத பசங்க ரோட்ல போவங்கலே ... அவங்க கண்ணுக்கு அப்படி இப்படி தெரியாம நடந்துக்கணும் ... அவங்க வைத்தெரிச்சல் பட்டா உருப்பட முடியாதுன்னு.. அறிவு வேணம்...? பைக்ல கட்டி புடிச்சிகிட்டு போறது... தியேட்டர்ல படத்த (தவிர) பாக்குறது... தேவை இல்லாதது எல்லாம் சிரிச்சி சிரிச்சி பேசுறது... ஒரே ஐஸ் கிரீம் வாங்கி பல்லு கூட விளக்காம நக்கி நக்கி சாப்டுறது... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....................

நான் பல சமயங்கள மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சது உண்டு... இப்படி காலத்துக்கும் அடுத்தவனுக்கு மொய் வச்சே நம்ம வாழ்கை ஓடிடுமோனு...?

டேய் நிறுத்து உன் வைத்தெரிச்சல ... தீயுற வாசம் வருதுன்னு சொல்றது காதுல விழுது ...

இத விட ஒரு வயசு பையன் நேரடியா எப்படிங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்குறது...?

இதனால பொண்ணு பாத்துட்டு வந்தவன்.. நிச்சயம் ஆனவன்... புதுசா கல்யாணம் ஆனவன் இவனுங்களுக்கெல்லாம் நான் சொல்லிகிறது ஒன்னு தான்... நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...

என்ன ஒன்னு எனக்குனு பொறந்தவ.. அந்த தேவதை.. எங்க இருக்கானு தான் தெரியுல...

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

எங்க இருக்கா என் பொண்டாட்டி...?
சொல்லிட்டு அப்படியே ஓட்ட குத்திட்டு போங்க...

41 comments:

Prabhu said...

enna senior, nan ungakita edavathu uthavi kekkalamnu patha nenga engatta keekkuringale!

kishore said...

enna panrathu pappu... vithi...

Prabhu said...

சீனியர், எந்த ஊரா இருந்தாலும் கூச்சப்படாம ஒரு நல்ல பொண்ணாப் பாத்து, அவ கிட்ட நம்பர் வாங்கி...... தம்பிக்கு குடுங்க!

நாணல் said...

:))

வினோத் கெளதம் said...

//எங்க இருக்கா என் பொண்டாட்டி...?//

மச்சான் நான் சொல்லிடுவேன் ஆனா நீ கமெண்ட் Delete பண்ணிடுவியே..

kishore said...

பாத்துடலாம் பப்பு... அது ஒன்னு தான் இன்னும் நான் செய்யுல அதையும் செய்ய சொல்ற...

kishore said...

நன்றி நாணல்

kishore said...

//மச்சான் நான் சொல்லிடுவேன் ஆனா நீ கமெண்ட் Delete பண்ணிடுவியே..//

தெரிஞ்சா சரி

பாலா said...

//நைட் புல்லா தூக்கம் இல்லடா நாளைக்கும் லீவ் போடலாம்னு இருக்கேனு வெறுபேதுவானுங்க ..//

ஹா.. ஹா... பதிவையே காப்பி பண்ணி போடனும். வரிக்கு வரி சிரிச்சேன். :) :) சிரிச்சிகிட்டே இருக்கேன்.

கல்யாணம் ஆன உடனே.. வேற மாதிரி பதிவு போடுவீங்க.. அதையும் நாங்க பாக்கத்தான் போறோம் தம்பி..!!!! வெயிட்.. வெயிட்! :)

வரப்போற பொண்ணு தலையில நங்குன்னு கொட்டும்போது, ‘நக்கல்’ வராது சாமி... ‘நாக்கு’தான் வெளிய வரும்!

பார்க்கத்தானே போறோம். எங்க போகப்போறீங்க! :)
---------

[இனிமே இப்படி நடக்காது. :( :( ]

வினோத் கெளதம் said...

அப்படியே வண்டிய எடுத்துக்கிட்டு போய் பஸ் ஸ்டாண்டில் பார்க் செய்து விட்டு..
இல்லை வண்டியுலையும் போலாம்..அது உன் இஷ்டம்..

நேர் பஸ் கிடைசிச்சுன பிரச்சினை இல்லை..இல்ல மூணு பஸ் மாறனும்..
தனிய போறியோ இல்லை உன் கூட இதே மாதிரி விஷயுத்துக்கு எல்லாம கூட ஒரு இளிச்சவயன் இருப்பானே அவன வேனாலும் கூபிட்டுக்கோ..

என்ன அவன் இப்ப அங்க இல்லை..வந்தாலும் நிறைய தண்டம் அழுவ வேண்டியது வரும்..

அப்புறம் போய்டு சீக்கிரம் வந்துடு..
படம், பார்னு..சுத்ததா..

என்னடா தலைப்புக்கு சுத்தமா சம்பந்தம் இல்லாம பேசுறான்னு பாக்குறியா..
எல்லாம் அப்படி தான்..

kishore said...

//வரப்போற பொண்ணு தலையில நங்குன்னு கொட்டும்போது, ‘நக்கல்’ வராது சாமி... ‘நாக்கு’தான் வெளிய வரும்!//
நாங்க எல்லாம் உள்ளார தலைல பூரி கட்டையால அடிவாங்குனாலும் வெளில வந்து சீன் போடுற பார்டிங்க

kishore said...

//பார்க்கத்தானே போறோம். எங்க போகப்போறீங்க! :)//
பாருங்க பாருங்க... பார்த்துகிட்டே இருங்க... என்ன பத்தி உங்களுக்கு தெரியாது பாலா அண்ணா... நானெல்லாம் மாடர்னு அவ கால்ல விழுந்துடுவேன்

kishore said...

//அப்படியே வண்டிய எடுத்துக்கிட்டு போய் பஸ் ஸ்டாண்டில் பார்க் செய்து விட்டு..
இல்லை வண்டியுலையும் போலாம்..அது உன் இஷ்டம்..

நேர் பஸ் கிடைசிச்சுன பிரச்சினை இல்லை..இல்ல மூணு பஸ் மாறனும்.....//


எங்க போக சொல்றிங்க வினோத் ?

kishore said...

//தனிய போறியோ இல்லை உன் கூட இதே மாதிரி விஷயுத்துக்கு எல்லாம கூட ஒரு இளிச்சவயன் இருப்பானே அவன வேனாலும் கூபிட்டுக்கோ..//

அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு டீலிங் வினோத்... நான் கேவல படும் பொது அவன் கூட வருவான்... அவன் ரொம்ப கேவல படும்போது நான் கூட போவேன்...

//என்ன அவன் இப்ப அங்க இல்லை..வந்தாலும் நிறைய தண்டம் அழுவ வேண்டியது வரும்..//

அவன் எங்க இருந்தாலும் என்னை இடைஞ்சல் பண்ணாம இருக்க முடியாது அவனுக்கு... தண்டம் சொனிங்கலே அது ரொம்ப கரெக்ட்.. 4 bottle (water bottle) இல்லாம அவன் வர மாட்டன்... அப்படி ஒரு தண்ணி வண்டி அது..

kishore said...

//அப்புறம் போய்டு சீக்கிரம் வந்துடு..
படம், பார்னு..சுத்ததா..//

படம் சரி... அது என்ன பார் ? அப்படினா ?

kishore said...

//என்னடா தலைப்புக்கு சுத்தமா சம்பந்தம் இல்லாம பேசுறான்னு பாக்குறியா..
எல்லாம் அப்படி தான்..//

நீங்க பேசுறத நேத்து இன்னைக்கா கேக்குறேன் ? எனக்கு தெரியாதா ?

வினோத் கெளதம் said...

//எங்க போக சொல்றிங்க வினோத் ?//

Unakku onnumey teriyatha..

வினோத் கெளதம் said...

//அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு டீலிங் வினோத்... நான் கேவல படும் பொது அவன் கூட வருவான்... அவன் ரொம்ப கேவல படும்போது நான் கூட போவேன்...//

Appadiyaa. avan kavari Maan paramparai aachey..

வினோத் கெளதம் said...

//4 bottle (water bottle) இல்லாம அவன் வர மாட்டன்... அப்படி ஒரு தண்ணி வண்டி அது..//

U mean Aquafina & Bisleri..

வினோத் கெளதம் said...

//படம் சரி... அது என்ன பார் ? அப்படினா ?//

Naan sonnathu Lawyers Bar association..

பாலா said...

இதென்ன.. தலைப்பே இல்லாம, Posted By-ன்னு ஒரு அப்டேட் வருது? நாங்கல்லாம் கரெக்டா வர்றோமான்னு செக் பண்ணுறீங்களா.? :) :)

kishore said...

SORRY ... COMMENT TYPE PANNEN POST AAGIDUCHI sorry bala anna

Suresh said...

Machan super post ha ha oru linkum eluthuran comment

Suresh said...

//ஏதோ காஞ்சி கிடந்தவனுங்க ஒரு பொண்ணு மாட்டிகிட்டதும் மேயுரானுங்கனு விட்டுடலாம்..//

ha ha unaku romba periya manasu than po

Suresh said...

//புதுசா கல்யாணம் பண்ணிட்டு ரவுசு பன்றவனுங்க இருக்கானுங்க பாருங்க... ஐயோ... நம்ம வைத்தெரிச்சல கொட்டிகிறதுகுன்னே நம்ம முன்னாடி வருவானுங்க...//

itha thaan nanum puthu mana thambi pathivula sonna ora ravusu uduranga

Suresh said...

இப்போ 500,1000 னு டாப் அப் பண்ணி மணி கணக்குல கடலை போடுறானுங்க.

post paid mari oru naal fulla ellam kadali poduvanga pa ...

Suresh said...

//அட.. கல்யாணம் ஆகாத பசங்க ரோட்ல போவங்கலே ... அவங்க கண்ணுக்கு அப்படி இப்படி தெரியாம நடந்துக்கணும் ... அவங்க வைத்தெரிச்சல் பட்டா உருப்பட முடியாதுன்னு.. அறிவு வேணம்...? பைக்ல கட்டி புடிச்சிகிட்டு போறது... தியேட்டர்ல படத்த (தவிர) பாக்குறது... தேவை இல்லாதது எல்லாம் சிரிச்சி சிரிச்சி பேசுறது... ஒரே ஐஸ் கிரீம் வாங்கி பல்லு கூட விளக்காம நக்கி நக்கி சாப்டுறது...//

vairu full fire pola
hha ha kalyanam anatha vida kalyanam aga pick panitum itha mari panuvanga.. set panau mothala

Suresh said...

//டேய் நிறுத்து உன் வைத்தெரிச்சல ... தீயுற வாசம் வருதுன்னு சொல்றது காதுல விழுது ...//

ha ha purinchiducha

//இத விட ஒரு வயசு பையன் நேரடியா எப்படிங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்குறது...?//

uunga vitu number kodu phone pani soliduraen

Suresh said...

//நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்.../

appo innoru kishore pathivu poduvan pathivu poduvan :-)

Suresh said...

//நைட் புல்லா தூக்கம் இல்லடா நாளைக்கும் லீவ் போடலாம்னு இருக்கேனு வெறுபேதுவானுங்க ..//

ora comedy than .. avan cricket match pathu irupan nee eppovum thapap edutha enna seiya

ha ha but nallaa sirichan very good post

Suresh said...

unaku ponu koduka pora antha mama va intha post padikka solanum ha ha koduthutalum ha ha

sari send this post to youthfulvikatan email id in their website u may selected for vit pirivu

kishore said...

தேங்க்ஸ் மச்சான்... எனக்கு பொண்ணு குடுகபோர அப்பாவியா தான் நானும் தேடிகிட்டு இருக்கேன்..

வால்பையன் said...

//எங்க இருக்கா என் பொண்டாட்டி...?//

பின்னாடி திரும்பி பாரப்பா!

மந்திரன் said...

//நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...//
இந்த நாங்களும் உள்ள எதனை பேரு ?
//பைக்ல கட்டி புடிச்சிகிட்டு போறது... தியேட்டர்ல படத்த (தவிர) பாக்குறது...//
அட நீங்களும் படத்தை தவிர மற்றதை ரொம்ப பார்க்குறீங்க ...
தப்பு , தப்பு ..ரொம்ப தப்பு ....
கொடுத்த காசுக்கு ரெண்டு படம் பார்க்கக்கூடாது ....சரியா ?
//ஏதோ காஞ்சி கிடந்தவனுங்க ஒரு பொண்ணு மாட்டிகிட்டதும் மேயுரானுங்கனு விட்டுடலாம்..//
என்ன ஒரு பெருந்தன்மை ..!
//அந்த பக்கம் விதியேனு அட்டென்ட் பண்ணிட்டு இருக்கும் அந்த பொண்ணு..//
மீதி வாழ்கை முழுவதும் அந்த பொண்ணுதான் பேச போகுது ....பசங்க ரொம்ப பாவம் ..
பேசிகிட்டும் , பேசிகிட்டும் ..

kishore said...

நீங்க சொன்னிங்கன்னு திரும்பி பார்த்தேன் வால் ... ஐயோ சாமி எனக்கு கல்யாணம் வேண்டாம்...

kishore said...

//மீதி வாழ்கை முழுவதும் அந்த பொண்ணுதான் பேச போகுது ....பசங்க ரொம்ப பாவம் ..
பேசிகிட்டும் , பேசிகிட்டும்//
kalakkal manthiran sir..

மந்திரன் said...

//manthiran sir..//
என்ன இது சின்ன புள்ளத் தனமா இருக்கு ..
அட நாங்களும் யூத்.... யூத் .....
ஆமாம் சொல்லி புட்டேன் .....

kishore said...

சரிடா மந்திரன் நீ யூத் தான் .... நீ யூத் தான் ... நீ யூத் தான் ...போதுமா?

மந்திரன் said...

இந்த அப்ப்ரோச் ரொம்ப புதுசா இருக்கு ...
பொது வாழ்க்கைல இது எல்லாம் ரொம்ப சகஜம்டா ....
மீசைல மண் ஓட்டுல மந்திரா... அப்படியே maintain பண்ணிக்கோ (அப்பாடா! யாரும் பார்க்க வில்லை )

kishore said...

//இந்த அப்ப்ரோச் ரொம்ப புதுசா இருக்கு ...
பொது வாழ்க்கைல இது எல்லாம் ரொம்ப சகஜம்டா ....
மீசைல மண் ஓட்டுல மந்திரா... அப்படியே maintain பண்ணிக்கோ (அப்பாடா! யாரும் பார்க்க வில்லை )//

என் இனம்மடா நீ...

மணிஅரசன் said...

நாளைக்கே வந்து உங்க அப்பாகிட்ட பேசுறேன்