Saturday, June 26, 2010

நான் ஒன்னுமே பண்ணலடா..

"டேய் நான் ஒன்னுமே பண்ணலடா" என்றான் பாலா பரிதாபமாக..

மொபைல் போன்- பிட்டு படம் பார்பதற்காகவே கண்டுபிடிக்க பட்ட ஒரு பொருளாய் நினைத்து அதில் கவனம் செலுத்தி கொண்டு இருந்த பிரபுவிடம் நூறாவது முறையாக நச்சரித்து கொண்டு இருந்தான் பாலா..

திரும்பவும் அவன் நச்சரிக்க ..

"டேய் நீ ஒன்னும் தான் பண்ணல விடு" என்றான் சற்று கடுப்புடன் பிரபு.


"சரி கோச்சிகாதடா நீ எத்தன பொண்ணுங்க நம்பர் வச்சி இருக்க அதுல ஒரு பொண்ண எனக்கு லைன் மாத்திவிடுடா எனக்கும் ஆசையா இருக்குடா"என்றான் விடாமல் .

"டேய் பாலா உனக்கு இதெல்லாம் செட் ஆகாதுடா .. ஒன்னு முழுசா நல்லவனா இருக்கனும் இல்ல முழுசா கெட்டவனா இருக்கனும். நீ மனசுல ஆசையா வச்சிக்கிட்டு அதே மனசாட்சிக்கு பயப்படுறவன் .. இப்படி தான் போன தடவ நீ ரொம்ப டார்ச்சர் பண்ணுன்னு ஒரு பிகர் கிட்ட கூட்டிகிட்டு போனேன் ஆனா நீ என்ன பண்ணுன?" - பிரபு

"நான் ஒன்னுமே பண்ணலடா... "- பாலா

"அதை தான்டா நானும் சொல்றேன் நீ ஒன்னுமே பண்ணல .. அந்தபொண்ணு ரொம்ப டையர்ட் இருக்குன்னு தூங்கட்டும்ன்னு சும்மா வந்தவன் தான நீ?"-பிரபு

"டேய் பாவம்டா அந்த பொண்ணு காசுக்காக அன்னைக்கு யார் கூடவோ போய்ட்டு வந்து திரும்பவும் நம்ம கிட்ட வந்துச்சி.. அது கண்ணுலயும் முகத்துலையும் ஒரு அசதி தெரிஞ்சிதுடா .. இருந்தாலும் அந்த பொண்ணு பரவா இல்லன்னு தான் சொன்னிச்சி .. எனக்கு தான் பார்க்க பாவமா இருந்துச்சி அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன் அது தப்பா ?" - பாலா

"டேய் அவளே பரவா இல்லன்னு சொல்லும் போது நீ ஏன்டா சும்மா இருந்த? டேய் நீ செய்யலைனா கூட பரவ இல்ல என்னையும் இல்ல செய்ய விடல.. அதை எங்க போய் சொல்றது? ராத்திரி பூரா தூங்க வச்சி காவல் காத்தது தான் மிச்சம்.." - பிரபு

"டேய் அது முடிஞ்சி போன விஷயம்.. நீ இன்னொரு நம்பர் குடு.. அதுக்கு அப்புறம் பாரு நான் யாருன்னு தெரியும்... "- பாலா

"சரி இந்தா இந்த பொண்ணு பேரு சஞ்சனா கோயம்புத்தூர்ல வேலை செய்யுறா.. நல்லா பேசுவா கரெக்ட் பண்ணிகிறது உன் சாமர்த்தியம் .. நான் வேலை விஷயமா சென்னை கிளம்புறேன்.. என்னை ஆள விடு.. இதையும் சொதபிடாதடா.."

"சரிடா நான் பார்த்துக்குறேன்.." என்ற பாலா பிரபுவை வழி அனுப்பி விட்டு சஞ்சனாவிற்கு டயல் செய்ய தொடங்கினான்..


சில நொடிகளில்..

"ஹலோ.. "

"ஹலோ சஞ்சனாவா ?"

"ஆமா நான் சஞ்சனா தான் பேசுறேன்... நீங்க?"

"நான் பாலா.. பிரபுவோட பிரண்ட் ..."

"எந்த பாலா? எந்த பிரபு..?"

"பிரபுங்க.. பாண்டிச்சேரில இருக்கான்ல .. அவன் தான் உங்க நம்பர் குடுத்தான்."

"ஓ.. பாண்டி பிரபு வா?"

"ஏன் வேற யாரையாவது உங்களுக்கு பிரபு என்ற பேருல தெரியுமா?"

"அது எதுக்கு உங்களுக்கு? என்ன விஷயம் சொல்லுங்க"

"இல்ல உங்க கிட்ட பேசலாம்னு தான்.. "

"என்கிட்ட என்ன பேசணும்?"

"பிரபு தான் சொன்னான்.. நீங்க ரொம்ப ஜாலியா பேசுவிங்கன்னு..."

"அதுக்கு? "

"நாம ரெண்டு பேரும் ஜாலிய பேசலாமா?"

"ஹலோ என்ன விளயாடுறிங்களா ? நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? யார கேட்டு பிரபு உங்க கிட்ட நம்பர் குடுத்தான்?"- சற்று கோபத்துடன் இருந்தது அவள் குரல்.


"என்னங்க இப்படி பேசுறிங்க.. நீங்க ரொம்ப ப்ரீ டைப் ன்னு சொன்னானே.."-பாலா

"ப்ரீ டைப்னா?"

"அதாங்க பசங்க எங்க கூப்டாலும் போவிங்கலாம்.."

"ஹலோ என்ன பேசுறிங்க ?"

"இல்லங்க பசங்க கூட நல்லா என்ஜாய் பண்ணுவிங்கலாம்.."

"ஹலோ மிஸ்டர் புதுசா ஒரு பொண்ணு கிட்ட பேசுறா மாதிரியா பேசுறிங்க? மரியாதையா பேசுங்க.."

"என்னங்க இப்படி பிகு பண்ணிக்கிறிங்க ... சரி நான் விஷயத்துக்கு வரேன்.. நீங்க அந்த மாதிரி பொண்ணு தான?"

"டேய் விட்டா என்னடா ரொம்ப ஓவரா பேசுற ?" ஒருமைக்கு தாவினாள் சஞ்சனா

"நீ தாண்டி ஓவரா நடிக்கிற.. நேரடிய கேக்குறேன் உன் ரேட் எவ்வளவு ?" என்றான் விடாமல் பாலா..

"அடிங்... ^$#^@%&@ போலீஸ்ல சொல்லிடுவேன்.. மரியாதையா நிறுத்து.."

"அடிங்கோயால.. @#$%&*^@$#%#$ என்னடி லோக்கல் மாதிரி பேசுற... நாங்களும் பேசுவோம்.. காசு கூட வேணும்னா கேட்டு வாங்கிக்க.. அதை விட்டுட்டு ஏன் இப்படி நடிக்கிற?"

"டேய் உனக்கு யாரு நம்பர் குடுத்தா? பிரபு தான முதல்ல அவன கிழிக்கிறேன்... நீ போன வை.." என்றவள் தொடர்பை துண்டித்தாள்..

மறுநாள்..

"டேய் நான் உங்கிட்ட என்னடா சொன்னேன்.. நல்லா பேசுவானு தான சொன்னேன்.. நேத்து அவ பேசுன பேச்சுல மொபைல் வெடிச்சி காது கிழிஞ்சிடிச்சி...அப்படி என்ன தாண்டா பண்ணுன ?" - பிரபு

"நான் ஒன்னுமே பண்ணலடா" என்றான் பாலா ஏதும் நடக்காத மாதிரி குழந்தைதனமான முகத்தோடு....

"டேய்.. உன்னை.... " கோபத்துடன் பிரபு பாலாவை பார்க்க..

அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல்..

"சரி மச்சி அதை விடு.. வேற நம்பர் இருக்கா?"- பாலா

ஏது வேற நம்பர் ஆஆஆஆஅ ...........?

பாலா நிமிர்ந்து பார்பதுக்குள் தலைதெறிக்க ஓடி கொண்டு இருந்தான் பிரபு.

பிட்டு..
இது மாதிரி கேரக்டர் எல்லாம் நாம் தினமும் சந்திக்கிற நபர்கள் தான். நான் தினமும் சந்திக்கிற நண்பர்களிடம் எடுத்த லீட் இது.. மற்றபடி கதை முழுதும் கற்பனையே.. கதைக்கும் என் நண்பர்களுக்கும் எந்த வித பிட்டும் இல்லை..

9 comments:

Swengnr said...

நான் நம்பிட்டேன்!

kishore said...

நம்பிதான் ஆகணும் .. நன்றி :)

வினோத் கெளதம் said...

இது ஒரு கதை..இதுக்கு கீழ முன்குறிப்பு ,பின்குறிப்பு வேற..

பாலா said...

பொதுவா " பாலா" னு பேர் கொண்டவங்க rommmmmmmmmmmmmpa நல்லவங்களாத்தான் இருப்பாங்க . அப்படிதானே கிஷோர் ???

kishore said...

@ வினோத் கெளதம்
டேய் எழுதுன நானே அதை திரும்ப படிக்கல நீ ஏன்?

kishore said...

@ பாலா
இல்லையா பின்ன.. எனக்கு தெரிஞ்சி நீங்க, ஹாலிவுட் பாலா எல்லோருமே ரெம்ம்ப... நல்லவங்க தான் :)
அப்புறம் என்னோட பிரண்ட் பாலா ன்னு ஒருத்தன் இருக்கான்.. அவனும் நெம்ம்ம்ப நல்லவன் தான்..

பாலா said...

இன்னா மேன் நடக்குது இங்க?? பதிவு போட்டா.. வந்து போஸ்டர் ஒட்ட வேணாமா?

யாரு மேன் இந்த பாலா? சரியான லூசுப் பைய்னா இருப்பான் போல கீது??

அதைவிட லூசு அந்த பிரபு!! இன்னா நான் சொல்றது?

கதையில் கௌதம் எங்க மேன் காணாம்?

பாலா said...

பாலா-ன்னு யாருமே கமெண்ட் போடத போது.. யாருக்கு மேன் ரிப்ளை??

kishore said...

@ ஹாலி பாலி..
நீங்க சொன்னா சரிதாங்கண்ணா ...