அப்படி இருந்தும் சில சமயங்களில் என் மனதுக்கு பிடித்த அல்லது மனதை பாதித்த திரைப்படங்களை பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் சில பதிவுகளில் சொல்லியதுண்டு.. அதை சிலர் தலைகீழாக தொங்கி கொண்டு பார்த்தாயா என்று கேட்டதும் அந்த கேள்வியை இன்னும் சிலர் ஆமோதித்து இன்னும் உயிரோடு இருக்கிறாயா என்று பின்னூட்டம் எழுதியதும் வரலாற்றில் செதுக்கபட்டவை.
சரி விஷயத்திற்கு வருவோம்..
இன்னைக்கு சாயந்திரம் நண்பர் ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு.. மாஸ்கோவின் காவிரி படம் போகலாம் என்று.. சரி ஓசில தானான்னு கிளம்பி போய்டேன்..
தியேட்டர்ரில் மொத்தம் என் கண்ணில் பட்டவர்கள் 14 பேரு.. அதுல இருவர் டிக்கெட் கொடுப்பவர்கள் , இருவர் டிக்கெட் கிழிப்பவர்கள்.. ஆக மீதி படம் பார்த்தது 10 பேரு.. சாட்டிலைட் டெலிகாஸ்ட் என்பதால் படம் சரியான நேரத்திற்கு போட்டார்கள்.
படத்தின் ஸ்டில்களை பார்த்து எதோ நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு படத்தின் முதல் காட்சியில் பார்த்திபன் குரலில் ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சிலயே படத்தை பற்றிய ஒரு கணிப்பு மனக்கண்ணு முன்னாடி தெரிய ஆரம்பிச்சது.

அதாவது.. அந்த ஹீரோ சனியன் பேரு "மாஸ்கோ"வாம் அப்புறம் அந்த ஹீரோயின் மூதேவி பேரு "காவிரி "யாம்.
இதுங்க ரெண்டு பேரும் சந்திச்சி.. லவ் பண்ணி..சண்டை போட்டு.. பிரிஞ்சி.. ஒன்னு சேர்ந்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ.
என்னோட பேராசிரியர் ஒருத்தர் செமினார் எடுக்கும் சொல்வாரு.. கிஷோர் நீ உனக்கு தெரிஞ்ச எதை வேண்டுமானாலும் பலபேர் முன்னால் தைரியமா தயக்கம் இல்லாம சொல்லு. அந்த விஷயத்த பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருக்கலாம். ஆனாலும் அந்த விஷயத்த நீ எப்படி சொல்ற என்பது தான் முக்கியம்.
அதாவது மேட்டர் எதுவா இருந்தாலும் உன்னோட ப்ரெசென்ட்டேஷன் எப்படி இருக்குனு தான் பார்ப்பாங்க. அது தான் முக்கியம்னு சொல்லுவாரு. அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் இன்னைக்கு வரைக்கும் நான் ஒவ்வொரு முறை ப்ரெசென்ட்டேஷன் பண்ணும் போதும் மனசுல வச்சிக்கிட்டு தொடங்குவேன்.
ஒருவேளை எனக்கு ஒரு பேராசிரியர் சொல்லி தந்த மாதிரி டைரக்டர் ரவிவர்மனுக்கு யாரும் சொல்லல போல இருக்கு. அப்படி சொல்லி இருந்தா படம் பார்த்த எனக்கும் இப்போ படிக்கிற உங்களுக்கும் கஷ்டம் இல்லாம போய் இருக்கும்.
சரி படத்தோட கதை என்ன?
அன்பே ஆருயிரே , குஷி, அலைபாயுதே, படங்களை போல பையனுக்கும் பொண்ணுக்கும் காதலுக்கு அப்புறம் வரும் மிஸ்அண்டர்ஸ்டான்டிங் மற்றும் ஈகோ தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் மாஸ்கோவின் காவேரி சென்னையின் கூவமாக மாறிவிட்டது.
இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானம்.. இதை விட மொக்கை காமெடியை இனி எந்த படத்திலும் அவர் செய்ய போவது கிடையாது..
படத்தில் உண்மையான காமெடி.. "நீயா? நானா ?" கோபிநாத் கெட்அப்பில் வரும் சீமான் தான். அதுவும் அவர் போட்டு இருக்கும் சிகப்பு கலர் கோட் சூட். அதை போட்டு கொண்டு வாழ்கையை பற்றி அவர் சீரியஸ் ஆக பேசும் காட்சி சான்சே இல்லை தாரளமாக இரண்டு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கலாம்..சரியான விஷுவல் ட்ரீட்.
படத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம் ரெண்டு மணிநேரம் ஓட கூடிய சின்ன படமாக இருப்பது தான்.
மொத்தத்தில்...
மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ..