Sunday, August 30, 2009

உணர்வு...

ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...

காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..

இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..

இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..

இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..



தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?









Tuesday, July 28, 2009

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட எனக்கு பிடித்த/பிடிக்காத பத்து..

ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...

என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )

1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..

2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..

3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..

4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...

5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..

6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..

7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.

8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...

9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..

10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..

பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?


10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...



டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...

Tuesday, July 21, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்து..

நான் ஜனிக்க போகும் நேரம்..
கடவுள் உனக்கு உலகில் என்ன வேண்டும்? என்றான்...
எனக்கென்று ஒரு உறவை தா என்றேன் கடவுளிடம்..

முதலில் தாயை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்தை பகிர முடியும் என்றான்..

பின்பு தந்தையை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்துடன் பண்பை உணர முடியும் என்றான்..

அதன்பின் நல்ல ஆசிரியரை தந்தான்..
ஏன் என்றேன்?
பண்புடன் பகுத்தறிவு பெற முடியும் என்றான்..

காதலியாய் ஒரு பெண்ணை தந்தான்..
இவளும் ஏன் என்றேன்?
உலகை புரிந்துகொள்ள முடியும் என்றான்..

நான் என்னை நானாக உணர ஒரு உறவை தா என்றேன்..

என்னை பார்த்து ஒரு புன்னகை செய்த கடவுள்..
காத்திரு ஜூலை 22 வரை என்றான்..
காத்திருந்தேன் ..
காலை கதிரவனாய் உன் ஜனனம்..

ஆம்.. என்னை நான் நானாக உணர கடவுள்
உன் நட்பை தந்தான்..


இன்று ( 22 . 07 . 2009 )
என்
நண்பன் வினோத்கெளதம் க்கு பிறந்தநாள்...

அவன் விரும்பிய அனைத்தும் பெற்று
நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்



எனது உயிர் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

wish you a very happy birthday da machan..










Friday, July 10, 2009

அழிந்து போன கரகம்..

நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி சிகரங்களை தொட்ட பல கலைகள் இன்று காணமல் போவதும் அழிக்கபடுவதும் சர்வ சாதரணமான விஷயமாக ஆகி வருகிறது...

மருத்துவம், இசை, நாட்டியம், கல்வி இப்படி எந்த கலையிலும் சிறந்து விளங்கிய நமது நாட்டில் நம்மவர்களால் அந்த கலைகள் அழிக்கப்படுவது வேதனை.


அதிலும் நாட்டுப்புற கலையான கரகாட்டம் இன்று அடிபட்டு நசுக்கபட்டத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை மல்லாக்கபடுத்து யோசித்தது உண்டு.. ஆனால் நேற்றுவரை எனக்கு அதற்கான விடை தெரியவில்லை...





இன்று
காலை செய்தித்தாளை பார்க்கும் போதுதான் என்னுடைய இத்தனை நாள் கேள்விகளுக்கும், குழபத்திற்கும்.. பதிலும் தெளிவும் கிடைத்தது...
இனி அந்த ஆண்டவனே வந்தாலும் கரகாட்ட கலையை காப்பாற்ற முடியாது... கரகாட்டம் என்பதை இனி கல்வி பாடத்தில் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினர் கண்டு கொள்வார்கள்.









சரி
அப்படி என்ன பதிலை கண்டு பிடிசிட்ட ..? உனக்கு இப்போ என்ன தெளிவு வந்துடுச்சி..?

அப்படின்னு நீங்க கேப்பிங்கன்னு எனக்கு தெரியும்...

சில விஷயங்கள சொல்லி புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள அடிச்சி கூட புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள் கண்ணால பார்த்து அனுபவத்துல உணர்ந்தா தான் புரியும்...

பாருங்க...

அட என்னை இல்லங்க... கீழ பாருங்க...

அட..படுத்தாதிங்க ..

மௌஸ் ஸ்க்ரொல் பண்ணி கீழ பாருங்க...

1



2



3




4




5


6



7



8



9



10



அய்... அஸ்கு புஸ்கு.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவனா ?

10



9



8



7



6



5



4



3



2



1 ....



ரெடி ...



ஸ்டடி ...



ஓப்பன்..





இப்போ சொல்லுங்க இவங்க இப்படி ஆடினால்.. கரகாட்டம்..
நசுங்குமா நசுங்காதா ?

Saturday, June 20, 2009

வறுமையின் விளிம்பு..




இன்று
எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..
வலியும் வேதனையும் மட்டுமே வாழ்க்கையாக தேர்ந்தெடுத்த அவளுக்கு
கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..

வயிற்று பசி தீர்ப்பவரை விழுந்து யாசிக்கும் இந்த உலகம்
அடுத்தவரின் உடல் பசி போக்கும் அவளுக்கு வைத்த பெயர் வேசி...


நான்கு சுவருக்குள் இவர்களின் சுயரூபத்தை கண்டதாலோ என்னவோ
இந்த உலகத்தின் பேச்சுகளை அவள் என்றுமே லட்சியம் செய்தது இல்லை..

இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி போக்க.....

Monday, June 15, 2009

மரணத்தில் ஒரு மஞ்சள் குளியல்

நேற்று முன்தினம் மாலை எனக்கு தெரிந்த ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழந்து விட்டார் ..
சாலையை கடக்கும் போது டூவீலர் மோதி தலையில் அடிபட்டு விழுந்தவரை ... அங்கு சவாரி ஏற்றி வந்த ஆட்டோகாரர் தன் சவாரியை இறக்கி அவர்களை வேறு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிட்டு.. இவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று கண்பித்து இருக்கிறார்.. அவர்கள் இங்கு பார்க்க முடியாது வேறு இடம்செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அனுப்பி விட்டார்கள்.. பிறகு வேறு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் காவல் நிலையத்தில் தகவல் சொல்லி ஒரு போலீஸ்காரரை அழைத்து கொண்டு இன்னொரு மருத்துவமணைக்கு சென்று காட்ட அவர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட பின்பு சட்டரீதியாக அவரது உடலை அரசு மருத்துவமனை பிணவறைஇல் வைத்து விட்டார்கள்.. அவரின் பாக்கெட் இல் இருந்த செல்லில் அவரின் உறவுகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டார்கள்...

கீழே விழுந்தவரை நமக்கு எதுக்குடா வம்பு என்று செல்லாமல் தனது வருமானத்தை இழப்பதை கூட பொருட்படுத்தாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இவரை காப்பாற்ற நினைத்த அந்த ஆட்டோகாரர் உண்மையில் எனக்கு கடவுளாக தெரிந்தார்.

இனி நடந்தது தான் வேதனையில் உச்ச கட்டம்...

விஷயம் கேள்வி பட்டு உறவுகள் அடித்து பிடித்து வர... பணம் என்ற பிசாசு லஞ்சம் என்ற பெயரில் தனது கோரபற்களை காட்டியபடி உதிரத்தை உறிய தொடங்கியது .

பிணவறை உதவியாளர் பிணவறை திறந்து காட்ட ரூபாய் 100 இல் ஆரம்பித்த லஞ்சம்... மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை மருத்துவர் வர மாட்டார் ..(மதியம் வரை வேலை நேரம் உண்டு ) பிரேத பரிசோதனை நடக்காது ஆகவே இறந்தவரின் உடல் கிடைப்பது சற்று சிரமம்.. பணம் குடுத்தால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லி தொடர .. வேறு வழி இல்லாமல் சம்மதம் தெரிவித்து உறவுகள்.

பணம் கைமாறியது தான் தாமதம்...

மருத்துவர் வந்தார்.. உடனே பரிசோதனை ஒரு மணிநேரத்தில் பரிசோதனை முடிவு... எந்தவித சிரமமும் இன்றி காவல் துறை சம்பந்தபட்ட அனைத்து வேலைகள் முடிந்தன , உடலை ஊருக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தி எல்லாம் தயாரானது...

ஒரு வழியாக ஊருக்கு கொண்டு வந்து நல்லபடியாக காரியங்கள் நடந்தன...
ஆனால் இதற்கு லஞ்சமாக மட்டுமே செலவானது ரூபாய் 5000...
இதை தங்களின் குடும்பத்திற்க்காக செலவு செய்யும் போது அவர்களுகே அருவெறுப்பாக இருக்காதா ?

இதில் மிக கேவலமான விஷயம் என்னவென்றால் இவர்களின் கீழ்த்தரமான செயலுக்கு அந்த தொகை பிக்செட் ரேட்டாம்.. அந்த அறையில் மேலும் இரண்டு உடல்கள் இருந்தன.. அதில் ஒன்று மிக மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது ... இவர்களிடமும் அந்த லஞ்ச பிசாசுகள் இதே மாதிரி தான் கேப்பானுங்க என்று நினைக்கும் போது நெஞ்சம் கனத்தது.. கடவுளே இவர்களிடம் இருந்து அவர்களை காப்பாற்று, நல்லபடியாக இவர்களுக்கு அவரின் உடலை பெற்றுதா என்று மானசீகமாக வேண்டிக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது...

அங்கு இறந்தவர்களின் முகத்தில் கூட ஒரு அமைதியை கண்ட எனக்கு மனசாட்சியை கொன்ற இவர்களின் முகம் கொடூரதின் உச்சகட்டமாக மனித உருவில் நடமாடும் பிணத்தை தின்னும் பேய்களாக மட்டுமே தெரிந்தது.

Friday, June 12, 2009

எனது உயிர் நண்பா ...

வினோத்கெளதம்...
பொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும் போதே "$##$^$ " என்று வளர்ந்து நிற்கிறது .

எனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...

சரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம் கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...

அப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...

1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..
கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)

2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..

3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...

4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இவன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..

5. இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)

நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...