Saturday, October 10, 2009

நீயெல்லாம் ஏன்டா எழுதுற ?

இவர் ஒரு பிரபல பதிவர்.. கொடுமையான விஷயம் என்னன்னா இவரை பிரபலம்னு இவர தவிர வேற யாருமே சொன்னது இல்ல. இதுவரைக்கும் ஒரு 50 பதிவு கூட இவரு தாண்டல. எப்படி தான் பிரபலம்னு சொல்லிக்கிட்டு தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு அலையராரோ .. துண்டை ..

இன்று இவரின் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது.. என்னுடைய
விதி.. நெசமாவே எனக்கு நேரம் சரி இல்லங்க..

இவரோட எழுத்து திறமைய பார்த்து பல பேரு பதிவுலகத்த விட்டே ஓடி போய் இருக்காங்க..

இவரு எழுத ஆரம்பிச்சது கடந்த பத்து மாதங்களாக தான்.. அதுக்குள்ளே இவரு பண்ற அலப்பறை இருக்கே ..

எழுத ஆரம்பிச்ச புதுசுல இவரு ஒரு கதை எழுதுனாரு.. அவ்ளோ கேவலமா இருந்துச்சி.. சரி ஆரம்பம் தானே போக போக சரி ஆகிடும்னு.. சில பேரு மனசு இறங்கி வந்து நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் நல்லா எழுத ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க..அது போதாதா இவருக்கு? ஏதோ "ராஜேஷ் குமார்"மாதிரி சொல்ல போனா ராஜேஷ்குமார் கிரைம் கதைய விட தன்னோடது தான் சூப்பர் மாதிரி நெனச்சிகிட்டு ஊரு பூரா சொல்லி தம்பட்டம் அடிச்சிகிட்டாரு.

அதுக்கு அப்பறம் அவரு எழுதுன முக்கால்வாசி பதிவு எல்லாமே கிட்ட தட்ட "பிட்டு" பட கதை தான்.. எல்லாமே பொண்ணுங்கள பத்தி தான் இருக்கும்.. பேசாம இவரு இங்க பதிவு எழுதுறத விட.. எதாவது மஞ்சள் பத்திரிக்கைக்கு "மல்கோவா ஆண்டி" கதை எழுதலாம்..(முன்னாடி அந்த வேலை தான் செஞ்சாரோ என்னவோ யாரு கண்டா ? )

இதெல்லாம் கூட பரவா இல்லங்க.. ஒரு தடவ இங்கிலீஷ் படம் விமர்சனம் எழுதுறேன்னு அவரு பண்ணுன அழும்பு இருக்கே... ஐயோ.. ஐயோ.. மனசுல பெரிய "ஹாலிவுட் பாலா"ன்னு நெனப்பு.. அதை படிச்சிட்டு பதிவுலகமே காரி துப்புச்சி.. இன்கிளுடிங் ஹாலிவுட் பாலா.. அப்போ கூட அவருக்கு சூடு சொரண எதுவுமே வரலங்க..

இப்போ கூட வெளில கிளம்புனா ஒரு "பேனா" கண்டிப்பா அவர் பாக்கெட்ல இருக்குமாம்.. வழில யாரவது பார்த்து "ஆட்டோகிராப்" கேப்பாங்களாம் .. இந்த தகவல ஒரு தடவ "சாட் "பண்ணும் போது அவரே சொன்னது.. அட ங்கொய்யா இவ்ளோ நேரம் ஒரு சைக்கோ கிட்டயா "சாட் " பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனச்சிகிட்டேன்.

எதாவது ஒரு பதிவு போட்டுட்டு.. அதுக்கு யாரவது கமெண்ட் போட மாட்டாங்களான்னுவெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு உக்கார்ந்து இருப்பாரு..
அப்பறம் போய் ஒருத்தர் விடாம கால்ல விழுந்து வோட்டு கேப்பாரு.. அப்போ கூட ஒரு 12 வோட்டுக்கு மேல தேறாது..

அப்பறம் அவரு காமடி பண்ணறேன்னு படுத்துனது .. கவிதை எழுதுறேன்னு காமடி பண்ணுணது .. போட்டோகிராபின்னு போட்டு பிராண்டுனது எல்லாம் சொன்னா இந்த ஒரு பதிவு பத்தாது..

இப்படி ஒரு ஆளு பதிவு எழுதுலன்னு யாரு அழுதா?
என்னங்க நான் கேக்குறது நியாயம் தான?


அட "இவர்" என்ற "அவர் " யாருன்னு தான கேக்குறிங்க?

கில்மா கதை எழுதுனாலும்.. கொஞ்சம் ஷோக்கான ஆளாத்தான் இருக்காரு அவர் ...

Saturday, October 3, 2009

பதிவுலக நட்பு

இணைய தளம் என்றாலே பொண்ணுங்க கூட கடலை போடுறது மட்டும் தான்னு நெனச்சிகிட்டு இருந்த என்னை மடார்னு மண்டைல அடிச்சி இந்த பிளாக்கர் பக்கம் இழுத்துட்டு வந்தவன் வினோத்கெளதம். இவனால தான் நான் இன்னும் பல வெப்சைட்(!?) எல்லாம் தெரிசிகிட்டேன்.. அதை எல்லாம் சொன்னா கலாச்சார காவல்காரங்க "பிட்டு" படத்த பாக்குறத கொஞ்சம் நிறுத்திட்டு சண்டைக்கு வருவாங்க..

பொதுவாகவே யார் கூடவும் உடனே நட்பு பாராட்டுதல் என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. என்னோட நட்பு வட்டம் ரொம்ப சின்னது..
எவ்ளோ தான் பேசி பழகுனாலும் அவங்க கிட்ட என்னோட சொந்த விஷயங்கள பகிர்கிற அளவுக்கு நான் தயாராவதற்கு ரொம்ப நாள் ஆகும்..

முகம் தெரியாதவர்களிடம் நட்பு பாராட்டுவதை விட முதலில் நமது பக்கத்தில் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவது தான் மனிததன்மை என்பது என் எண்ணம்..(கொஞ்சம் உண்மையும் கூட )

அப்படி இருந்த எனக்கு இன்னைக்கு முகம் தெரியாத பலரின் நட்புகள் கூட கிடைச்சி இருக்குன்னா அதற்கு முழு காரணமும் இந்த பிளாக்கர் தான்.

இந்த பிளாக்கர் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாளைக்கு இது ஒரு போதை மருந்து போல தேரிஞ்சாலும் ( இதை வினோத் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் ) இதை சரியான விதத்தில் பயன்படுத்தும் போது மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக இருக்கிறது என்பதே நிஜம்...

சில சமயம் வீட்டிலோ வெளியிலோ பிரச்சனை காரணமாக சோர்ந்து போகும் போது முகம் தெரியாத நட்புகள்.. ஹாய் கிஷோர் எப்படி இருக்க? என்று கேக்கும் போது உண்மையில் மனசு லேசாவதை உணர்ந்து இருக்கிறேன்..
அப்படி எனக்கு கிடைத்த சிலரின் நட்புக்கள் பற்றி இங்கே..

1. ஹாலிவுட் பாலா
சார்.. அண்ணா ... என்று ஆரம்பித்த நட்பு .. இன்று பாலா என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இருக்கிறது.. இவர் என்னிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது நான் அவருக்கு சரியாக பதில் அளிக்க முடியாத இடத்தில் இருந்தேன்.. இத்தனைக்கும் அவர் அவருக்கு வேலை கிடைத்தது பற்றி சொல்வதற்காக வந்த கால் அது..
அதன் பின் அவர் என்னிடம் பேசிய போது நான் நடந்ததை கூறி வருத்தம் தெரிவிக்க. இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல கிஷோர்.. உங்களுக்கு எப்போ பேசனும் என்றாலும் மிஸ்டு கால் குடுங்க நானே பேசுறேன் என்று கூறிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது (இத்தனைக்கும் ISD கால்). அதைவிட என்னை வியக்க செய்த விஷயம் அவர் என்னிடம் பேசும் போது ரொம்ப நாள் பேசி பழகிய நபரிடம் பேசுவது போல ஒரு சகோதர உணர்வு.. வேலை, சினிமா , குடும்பம் என்று எல்லாத்தையும் பத்தி பேசுவார்.. தேங்க்ஸ் பாலா..

2. கலையரசன்

வினோத் கூட வேலை பாக்குறாரு.. வினோத் அறிமுக படுத்தி வச்சதாலோ என்னவோ "என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" பார்முலா வொர்க்அவுட் ஆகிடுச்சி.. முதல் தடவ பேசும்போதே "டா" போட்டு பேசும் அளவிற்கு பழகுவதற்கு இனிமையானவன்.. இந்த மாசம் ஊருக்கு வரான்.
மீட் பண்ணனும் மச்சி..

3. பப்பு @ பிரபு

மதுரைகாரர் .. மதுரை குசும்பு அத்தனயும் அவரின் எழுத்தில் இருக்கும்..
சாட்டில் வந்தால் இரவு 11 மணி வரை கூட பேசுவார்.. எல்லா விஷயத்தையும்..
குறிப்பாக காலேஜ்ல் நடக்கும் அவரின் "சொந்த விஷயத்தையும் " பற்றி சொல்லி கருத்து(!!!???) கேட்பார்.
மனதில் பட்டதை பளிச் என்று சொல்ல கூடியவர்..
மதுரை வந்தா "ஜில் ஜில் ஜிகர்தண்டா " வாங்கி குடுக்கணும் புரிஞ்சிதா..

4 . வினோத் கெளதம்

இவனை பதிவுலக நண்பன் என்று சொல்ல முடியாது.. எனது நீண்ட கால நண்பன்.. எல்லா விஷயத்துலயும் எனக்கு சரியான ஆலோசனை கூறுபவன் ஆறுதலாக இருப்பவன் .
இவனின் நட்பு எனக்கு கிடைத்தது என்னுடைய விதி.. அவனுக்கு கடவுளின் சதி..
(ஹா.. ஹா.. சும்மா தமாசு.. )
ஏற்கனவே சொல்லியது தான் .. "really blessed to have a friend like him"

இன்னும் இருக்காங்க.. சக்கரை சுரேஷ்,பித்தன்,கண்ணா, விஜய், வசந்த், மந்திரன், வால் பையன், இப்படி நிறைய.. பேசி பழகவில்லை என்றாலும் நட்புடன் விசாரிப்புகள் இருக்கும்..
அவர்களை பற்றி விரைவில்..

Friday, October 2, 2009

காதலும் காமமும்


காத்திருக்கிறேன்..
அவளின் கன்னத்தை என் கைகளில் ஏந்த ..
அவளின் இமைகளை என் இமைகளால் மூட..
அவளின் இதழை என் நாவல் சுவைக்க..
அவளின் கைகள் என் கழுத்தை சுற்றி மாலையாக மாற ..
அவளின் கழுத்து என் மூச்சு காற்றை உணர..
அவளின் பற்கள் என் காது மடல்களை கடிக்க..
அவளின் விரல் நகங்கள் என் தேகத்தில் காயம் ஏற்படுத்த..
அவளின் இடையின் ஸ்பரிசத்தை என் கைகளால் உணர..
அவளின் கால்கள் என் கால்களுகிடையே சிக்கி தவிக்க..
அவளின் தேக வெப்பத்தை என் தேகம் எங்கும் உணர..
இதற்கு பெயர் காதலா? என்றான் ஒருவன்
ஆம் என்றேன்..
இது காமத்தின் பிதற்றல் என்றான்..
மடையர்கள்..
காலம்
காலமாக காதலையும் காமத்தையும் பிரித்து பார்கிறார்கள்
காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமம் என்பதை அறியாமலே..
அவளை என் விரல் நகம் கூட தீண்டியது இல்ல இதுவரை...
உலகின் பார்வைக்கு இது
காதலோ.. காமமோ..
என் கண்மணியை கைகளின் ஏந்த காத்திருப்பேன்
என் காலம் முழுதும் ..

-காதலன்





Sunday, September 27, 2009

சினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..

சினிமா..

நான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..

கமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..

கமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .

மோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..

லக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..

அதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..
இது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..

எனக்கு வேறு பிடித்த விஷயம்
சீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..
ஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..
-----------------------------------------------------------------------------------------
சிந்தனை...

எந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..
அதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
இதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..
திரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "
பண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..
----------------------------------------------------------------------------------------------

சிகரட்டு..

சிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..
சிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..
சிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு "சுச்சு" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. "சுச்சு" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..
(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..? )

------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா? அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா?

அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்

Saturday, September 19, 2009

நாங்களும் போட்டோகிராப்பர் தான்..

ரொம்ப நாள் ஆச்சி.. பதிவு எழுதி..
ஏனோ இப்போ எல்லாம் அடுத்தவங்க எழுதினத படிகிறதுல இருக்குற ஆர்வம்.. எழுதுறதுல இருக்க மாட்டுது..
என்ன பண்றது.. ஒரு நாளைக்கு 10 பதிவு எழுதுறவங்கலே ரெண்டு நாள் எழுதாம விட்டா அவங்க ஹிட் லிஸ்ட் பாதிக்கு மேல காணாம போகுது ..
என்னை மாதிரி ஆள எல்லாம் நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..
இருந்தாலும் அதுக்காக உங்கள இம்சை பண்ணாம இருந்துட முடியுமா.. அப்படி அடுத்தவங்கள நிம்மதியா இருக்க விட்டா நான் தமிழன்னு சொல்லிகிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
அதனால இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் ...
விஜய், அஜீத் மாதிரி சக்செஸ் ஆகும்னு நெனச்சி நிறைய படம் குடுத்து பிளாப் ஆகுறத விட..
சிம்பு.. s.j சூர்யா மாதிரி.. ஒரு படம் நடிச்சாலும் கண்டிப்பா பிளாப்னு .. தெரிஞ்சி நடிக்கணும்...
அது மாதிரி ஒரு பதிவு போட்டாலும் இம்சை அதிகமா இருக்கனும்..
என்னோட முதல் இம்சை.. என்னை நானே பெரிய போட்டோகிராப்பர் னு நெனச்சிக்கிட்டு .. சமிபத்தில் விசாகபட்டினம் போனபோது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

ஆஹ்.. ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்.. கீழ உள்ள புகை படங்கள் எல்லாம் என் நண்பன் வினோத்கெளதம் பிரசன்ட் பண்ணுன டிஜிட்டல் கேம் ல எடுத்தது..... சைஸ் பெருசா இருக்குனு ரீசைஸ் பண்ணி போஸ்ட் பண்ணிஇருகேன் ..

(1) போரா குகைக்கு போற வழில ஒரு 8 கிலோ மீட்டர் உள்ள போனா வரும் நீர் விழ்ச்சி.. அங்க போக மெயின் ரோட்ல இருந்து ஜீப் வசதி உண்டு.. ஒரு ஆளுக்கு 70 ருபாய்.. 5 கிலோமீட்டர் வரைக்கும் ஜீப் பயணம்.. அப்பறம் 2 கிலோ மீட் நடராஜா சர்வீஸ் தான் மலை பாதைல.. வயசானவங்களுக்கு சிரமம்..



(2) அரக்கு வேளி ..
போகும் வழி எல்லாம் அழகு.. ஆனா அங்க புதுசா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியுல... ஒரு பார்க் ஒரு மியுஸிஎம் அவ்ளோ தான் .. அதான் பூக்களை மட்டும் எடுத்தேன்..




(3) ஹார்பர்.. லான்ச் பயணம் அருமையா இருக்கும்.. 40 முதல் 60 வரை கட்டணம்..கடலுக்கு உள்ள ஒரு 2 கிலோ மீட்டர் வரைக்கும் அழச்சிக்கிட்டு போவாங்க... கடலுக்குள்ள உள்ள இருந்து கரைய பாக்குறது ஒரு அழகுதான்..

(4) யரடா ஹில்ல்ஸ் அடிவரதுல இருக்குற பீச்.. யரடா பீச் மற்றும் கிரீன் வெளி பீச்னும் சொல்வாங்க பசங்களுக்கு ஏற்ற இடம்.. வீக் எண்டு அன்னிக்கு கூட்டம் வரும் வீக் எண்டு இல்லாம மற்ற நாள் போனா என்னை மாதிரி தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. மலை வழி முழுதும் அவ்ளோ அருமையான அழகு நிறைந்த இடம்..இங்க தான் டால்பின் நோஸ் பாயிண்ட் இருக்கு..





(5) டாபின் நோஸ் பாயிண்ட்


(6 ) யரடா மலை மீது இருந்து கடற்கரை அழகிய தோற்றம் ..(அழகா தான இருக்கு?)


அட இவ்ளோ தூரம் வந்து பார்த்திங்க .. எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க... விசாக ஸ்டீல் பிளானட் உள்ளே திருட்டு தனமாக எடுத்த படங்கள் மற்றும் போரா குகை படங்கள் அடுத்த பதிவில்..

Sunday, August 30, 2009

உணர்வு...

ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...

காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..

இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..

இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..

இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..



தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?









Tuesday, July 28, 2009

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட எனக்கு பிடித்த/பிடிக்காத பத்து..

ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...

என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )

1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..

2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..

3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..

4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...

5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..

6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..

7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.

8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...

9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..

10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..

பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?


10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...



டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...