Thursday, June 11, 2009

அழைக்காமலே..

பூஜா இளமையான அம்சமான அழகான 16 வயசு பருவ சிட்டு...
இவளுக்கு கொஞ்ச நாளாவே ஒரு பயங்கரமாக கனவு வருது... இவளோட செத்து போன அம்மா இவ கனவுல வந்து இவ கிட்ட எதோ சொல்ல வராங்க ..

இவளுக்கு எப்போ இருந்து பிரச்சனை ?

அன்று ஒரு நாள் தன் காதலன் ரகு கூட பார்டில கலந்து கிட்டு வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு செத்து போன சிறுமி உருவம் அவளை வீட்டுக்கு போக வேணாம்னு எச்சரிக்க ... இருந்தும் வீட்டுக்கு போன போது... அவளோட அப்பா ராஜீவ் .. அவருக்கு வேலைக்கு உதவியா இருக்குற 30 வயசு பெண் சுசீலா கூட வீட்டில் இருக்க... வீட்டுக்கு அருகில் போட் ஹவுஸ் இல் நோயாளியாக இருக்கும் அம்மாவை பார்க்க சென்றாள் ... அப்போ அம்மா இவளை பாத்து எதோ சொல்ல முயற்சிக்க அதை புரியாமல் வீடு நோக்கி வந்த பூஜா கண்ட கடைசி காட்சி... அம்மா வீட்டோடு எரிந்து சாம்பல் ஆனது தான் .. அதன் பிறகு அன்று நடந்தது எதுவும் இவள் நினைவுக்கு வர மாட்டுது .

வெளியூர்இல் இருந்த பூஜா அம்மா இறந்தவுடன் அவள் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவிட.. அம்மா இருந்த இடத்தில் சுசீலா இருப்பது கண்டு மனதுக்குள் குமிறியவாறு அந்த வீட்டில் இருகிறாள்... அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் சகோதரி நிர்மலா தான்... அவளை விட மூத்தவள்... தனது தந்தை செயல்பார்த்து நேரடியாக அவரை எதிர்பவள்.. இருப்பினும் அவளும் அதே வீட்டில் தான் இருகிறாள்.. சில சமயம் அவள் போதை பழக்கங்களை நாடுவதும் உண்டு...

பூஜாவின் காதலன் ரகு.. இவள் வீட்டிற்கு எல்லா வேலையும் செய்பவன்... இவர்களை சந்திக்க விடாமல் சதி செய்கிறாள் சுசீலா.. இருப்பினும் இரு பெண்கள் மீதும் பாசம் இருப்பது போன்றும் இருகிறாள்...

ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... வீட்டிற்கு வந்து பூஜா தான் அறைக்கு வர...அங்கு இருந்தான் ரகு... ஆனால் அவனுள் எதோ மாற்றம்... அவளுடன் பேசி போதே அவன் உடல் நிலை மாற்றம் ஆகிறது... அந்த நிலையிலும் அவன் அவளிடம் சொல்லியது ... "அன்று இரவு பார்ட்டி முடிந்தவுடன் உன் பின்னால் வந்து உன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் பார்த்தேன்... உன் அம்மா அப்போவே சொன்னாங்க நான் தான் கேக்கல " மேலும் அவன் உருவம் மோசமாக ஆனது...
இதனால் பயந்து அறையை விட்டு வந்த பூஜா மீண்டும் அறைக்கு செல்ல அது காலியாக இருந்தது...

மறுநாள் காலையில் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றில் ரகுவின் பிணம்... அவனின் இறுதி சடங்கிற்கு சென்ற பூஜா அங்கே ஒரு சிறுமியை சந்திகிறாள்... அவளை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்...
"! அவள் அன்று பிணமாக வந்த எச்சரிதவள்... "
தன்னை அறியாம அவள் பின்னால் செல்ல அந்த சிறுமி இன்னும் இரு சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.. அவர்களை பின் சென்ற பூஜா ஒரு கல்லறை மேல் சென்று விழுந்தாள்... எழுத்து பார்த்த போது அது ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களின் கல்லறை என்பது புரிகிறது...

தனக்கு வரும் மர்ம கனவை பற்றி ஒரு நாள் பூஜா நிர்மலாவிடம் கூறினாள் .. அம்மாவின் சாவுக்கு காரணம் சுசீலா தான் என்கிறாள் நிர்மலா.
இதை உறுதிபடுத்த சுசீலாவின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் இருவரும்..
அவர்களின் தேடுதல்லில் சுசீலா அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்தவள் என்றும் அவர்களை கொன்று தப்பித்து வந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்கள்... அந்த சிறுமியின் அம்மாவின் கழத்தில் இருந்த முத்து மணி இப்போது சுசீலா கழுத்தில்.. இது ஒன்றே அவர்களின் சந்தேகத்தை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது...
இந்த விஷயத்தை அவரின் அப்பாவிடம் சொல்ல நினைத்தும் ஆனால் அப்பா அவளின் மேல் உள்ள மோகத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்வதை நம்பபோவது இல்லை என்று சொல்லாமல் தவிர்தார்கள்..

இந்த நிலையில் ஒரு நாள் ராஜீவ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல ..
வீட்டில் பூஜா, நிர்மலா, சுசீலா மட்டுமே...
நிர்மலா பூஜாவிடம் நம்பகமான ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவரிடம் உதவி கேட்கலாம் என்று சொல்ல சரி என்றாள் ... இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சுசீலா வீட்டை விட்டு கிளம்பும் போது நிர்மலாவிற்கு போதை ஊசி போட்டு விட்டு பூஜாவை பிடிக்கவும் முயற்சி செய்கிறாள் எனினும் பூஜா தப்பி சென்று அவரை பார்த்தாள் ... அவர் அவளை அமர சொல்லி சுசீலாவை வரவழைத்து பூஜாவிற்கும் போதை ஊசி போட்டுவிடுகிறார்கள்..

சுசீலா பூஜாவை வீட்டிற்கு தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி அவளின் ஆடைகளை கலைத்தாள் .. பாதி மயக்கத்தில் இருக்கும் பூஜா அருகில் இருக்கும் கத்தியை எடுத்து சுசீலாவை தாக்க நினைக்க சுசீலா அந்த கத்தியை எடுத்து கொண்டாள் .. பூஜாவிடம் பேசி கொண்டே அவளின் ஆடைகளை சுசீலா களைந்து கொண்டு இருக்கும் போது மயக்கம் தெளிந்த நிர்மலா பின்னால் இருந்து சுசீலாவை தாக்க வந்தாள் ... இதை கவனித்தபடி பூஜா மயக்கமடைந்தாள் .

மயக்கம் தெளிந்த பூஜா எழுந்து பார்க்க தரை எல்லாம் ஒரே ரத்த கறை... ரத்த கறையை தொடர்ந்த பூஜா அது ஒரு பெரிய பெட்டியில் சென்று முடிவதை பார்த்து பெட்டியை திறக்க அதனுள் பிணமாய் சுசீலா...

பூஜா சுற்றிலும் பார்க்க... அங்கே கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நிர்மலா... இருவரும் செய்வது அறியாமல் நிற்கவும் ராஜீவ் கார் போர்டிகோவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது... காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய ராஜீவ் பூஜாவை நோக்கி ஓடிவந்து "என்ன ஆச்சு ?" என்று கேட்க...
"சுசீலா தான் அம்மாவை கொன்றதாக"சொல்கிறாள் நிர்மலா...
அதை
அவர் காதில் வாங்காமல் பூஜாவிடம் திரும்ப கேட்க...
பூஜாவும் "நிர்மலா சொல்வது சரி "என்று கூறினாள்..
"நான் சொல்வதை அப்பா நம்ப மாட்டார் " என்று கூறுகிறாள் நிர்மலா...
"இல்லை அப்பா... சுசீலா தான் அம்மாவை கொன்றாள் ,என்னையும் நிர்மலாவயும் கூட கொல்லவந்தாள் அதனால் தான் நிர்மலா சுசீலாவை கொன்றாள் " என்று பூஜா கூற
அதிர்ச்சி
அடைந்த ராஜீவ்...
நிர்மலாவா
? என்றார்...
ஆமாம் நிர்மலா சொல்வது உண்மை... நீயே சொல் நிர்மலா என பூஜா கூற...

என்னடி உளர்ற... நிர்மலா செத்து போய் ஒரு வருஷம் ஆகுது என்றார் ராஜீவ்...

அப்போ யாரு சுசீலாவ கொன்னது ?, அம்மாவ யாரு கொன்னது? நிர்மலாவ யாரு கொன்னது? ரகுவ யாரு கொன்னது ? இதுக்கு எல்லாம் பதில் தெரியனும்னா
"the uninvited "
படத்த பாருங்க...
"the uninvited "


































































பூஜாவாக
anna கதாபத்திரத்தில் Emily Browning
நிர்மலாவாக alex கதாபாத்திரத்தில் Arielle Kebbel
சுசீலாவாக rachel கதாபாத்திரத்தில் Elizhabeth Banks
ரகுவாக maat கதாபாத்திரத்தில் Jesse Moss
ராஜீவ்
வாக stephen கதாபாத்திரத்தில் David Strathairn
சாவித்திரியாக mom கதாபாத்திரத்தில் Maya Massar

directed by Guard brothers


இசை மட்டும் அப்போ அப்போ ஓம் சாந்தி ஓம் படத்த நினைவு படுத்துது...
படத்த பத்தி என்னோட பார்வை சொல்லனும்னா திரில்லர் சஸ்பென்ஸ் எதிர் பாக்குறவங்களுக்கு சரியான தீனி... கூடவே இளமை துள்ளும் அழகு பெண்களின் டூ பீஸ் காட்சியும் உண்டு.. ஜொள்ளு விட்டுகிட்டு என்ஜாய் பண்ணலாம்..
இயக்குனருக்கு செய்யும் மரியாதையை காரணமாக சில சம்பவங்களை, காட்சிகளை தவிர்த்து விட்டேன்...

தமிழ் இந்த கதை எதுக்குனா ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இதே கதைய தமிழ் படமா நமக்கு யாரவது சுட்டு தருவாங்க அப்போ படத்துக்கு கதை, தலைப்பு, கதாபாத்திர பெயர் வைக்க மண்டைய பிச்சிக்க கூடாது இல்லையா?

படம் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... படம் பார்த்துட்டு சொல்லுங்க

Tuesday, June 9, 2009

சிதம்பரத்தில் பதிவர் சந்திப்பு...


இன்னைக்கு ஒரு பதிவு போடலாம்னு நினைச்ச உடனே ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பர் ஒருத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது...

"ஏன்டா @#%#$&$*#^@ நாயே எப்போ பாத்தாலும் பொண்ணுங்க , காதல்னு எழுதி எழுதி வீணா( இது பொண்ணு பேரு இல்ல ஆங்கிலத்துல வேஸ்ட்னு சொல்லுவாங்க ) போறியே உருப்படியா எதாவது எழுதினியா? உன்னை எல்லாம் பாலொவ் பண்ணி படிச்சி கமெண்ட் பண்றாங்க பாரு அவனுங்கள சொல்லணும்..."

என்ன பத்தி என்ன சொன்னாலும் என் மனசு தாங்கிக்கும் அது என்னவோ தெரியுல என்ன மாயமோ தெரியுல எனக்கு சூடு, சொரண வர்றது இல்ல . ஆனா என்ன நம்பி படிச்சி கமெண்ட் பண்றவங்கள சொன்னா என் மனசு தாங்காது...

அதான் இந்த தடவ நோ காதல், நோ பெண்கள்,நோ ஜொள்ஸ் ... (அய்யோடா இதை தவிர எனக்கு ஒன்னும் எழுத தெரியாதே... அவசர பட்டு வாய விட்டுட்டேனா ? சரி சமாளிப்போம்..)

என்னத்த எழுதலாம்.. ?

நக்கலு ,நையாண்டி, பிக்கலு , பிடுங்கலு ,சுய புராணம், என்ன தவிர யாருங்க பதுவுலகதுல நல்லா எழுதுறா.. ?,நான் தான் பதிவருக்கு எல்லாம் பதிவரு... , எவண்டா என்னை எதுத்து பதிவு போட்டது? அனானி பேருல அட்டகாசம் , எவண்டா எங்க அண்ணன சொறிஞ்சது ?, தல உன்ன அவன் திட்டிடான் தல... இப்படி பல தலைப்புல யோசிச்சி பார்த்தேன்.. எல்லாத்துக்கும் ஆள் இருகாங்க...

புதுசா எழுதலனாலும் இப்போ இருக்குற டிரண்டுக்கு ஏற்ற மாதிரியாவது இருக்கனும்.. எவன் பதிவ காப்பி அடிச்சி போட்டாலும் பினிஷிங் நம்மளுதா தான் இருக்கனும்... என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் கண்ணுல மாட்டுனது பதிவர் சந்திப்பு...

சரி சிதம்பரத்துல யாரா போய் நான் தேடுறது... அப்படி தெரிஞ்சி நான் அவங்க முன்னாடி போய் நின்னா....(விடுங்க நமக்கு ஊர்ல அவ்ளோ நல்லா பேரு...)
பதிவர்ங்க எல்லாம் ஒன்னு கூடி கும்மி அடிச்சாதான் அது பதிவர் சந்திப்பா ?
கிஷோர் பதிவு எழுதுறதுல இன்னும் மாணவன் தான் ஆனால் வித்யாசமானவன்...( டேய் போதும்டா..)
அதனால இன்னைக்கு இந்த பதிவர் யார எல்லாம் சந்திச்சாரோ அது தான் இவரோட பதிவர் சந்திப்பு...

சிதம்பரத்தில் பதிவர் சந்திப்பு...


காலை 6 மணி

காலிங் பெல் சத்தம் கத்தில் நாராசமாய் காதில் நுழைய கதவை திறந்தால் இன்று இந்த பதிவரை சந்தித்த முதல் அதிர்ஷ்டசாலி என் வீட்டு பால்காரர்... தம்பி சீக்ரம் வாப்பா புதுசா பாக்குற மாதிரி பாக்குற... 1/2 லிட் குடுங்கனே.. பால் வாங்கிட்டு வீட்டுக்குள் நுழைய... தம்பி லுங்கிய எடுத்து கட்டிக்கிட்டு போ.. கருமம் இத சொல்றதே தினம் எனக்கு வேலையா போச்சு என்றார்...

காலை 6.30 மணி

என்ன அண்ணா இன்னும் தூக்கம் கலையலையா ? என்று கேட்டவாறு என்னை சந்தித்த அதிர்ஷ்டசாலி பேப்பர் காரன்...

காலை 7.15 மணி

அடுத்த என்னை பாக்கணும்னு அடம்பிடிச்சி பாத்தவரு கடவுள்...சரி அவரு மூணாவது அதிர்ஷ்டசாலினு வசிக்கலாம்.

காலை 7. 45

எரும மாடு எத்தன தடவ சொல்றது சாப்பிடும் போது பேப்பர் படிக்காத, டீவி பாக்காதனு என்று அர்ச்சனை மலருடன் என்னை சந்தித்தவர் அம்மா.

காலை 7 .55

டேய் வண்டிய எடுத்தா கிளம்ப வேண்டியது தான ? தேவை இல்லாம எதுக்கு ரைஸ் பண்ற ... உன் நடவடிக்கை ஒன்னும் சரி இல்லாத மாதிரி தோனுது... ஒழுங்க இருந்துக்கோ எனக்கு வேலை வச்சிடாத.. - அப்பா

காலை 8.15

என்னை மச்சான் நேத்து அடிச்சது இன்னும் தெளியலயா என்று கரிசனத்துடன் விசாரித்து என் அலுவலக நண்பன்... அதுகிட்ட இருந்து குடல புடுங்குற மாதிரி சரக்கு வாட வருது... அது என்னை கேக்குது தலை எழுத்து...

காலை 9.05

உங்கள ஏ.ஆர் அழைக்கிறார்... -அட்டெண்டர்
(ஐயோ காலைலேவா இவன் கிட்ட போன 10 .30 மணிக்கு தான் வெளில விடுவான்... நான் பேசுறதும் அவனுக்கு புரியாது அவன் பேசுறதும் எனக்கு புரியாது )

காலை 9.07

குட் மார்னிங் சார்...
வாங்க கிஷோர்... நேத்து நான் உங்க கிட்ட சொன்னது என்ன ஆச்சு... நீங்க போய் பாத்.. ...................................................................................................................................................................................
(ஐயோ எப்போ முடிப்பானு தெரியுல...)
நம்ம கணக்கு என்னைக்கு தப்பா போய் இருக்கு.. அவன் ரூம்ல இருந்து வெளில வரும் போது மணி 10 .30..
(தீபாவளி வரட்டும் இவன் வாயில ஒரு 1000 வாலா கொளுத்தி போடணும்....)

காலை 10.45

டேய் மச்சான் வாடா டீ சம்சா சாப்பிடலாம்.. அழைத்து ஒரு நாதாரி (எப்படியும் நீ காசு குடுக்க போறது இல்ல வந்து தொல )

காலை 11.30

டேய் நேத்து ஒரு மேட்டர் படம் செல்லுல ஏத்துனேன் டா உனக்கு வேணுமா? ஒரு ஜந்து கூச்சம் இல்லாம கேக்க..(ஐயோ இவனுக கூட இப்படி வருஷம் முழுசும் கும்மி அடிக்க வச்சிடியே கடவுளே )
அவனை முறைத்து விட்டு திரும்ப
இந்த பக்கம் ஒருத்தன் அவன் செல்போன குறுகுறுன்னு பார்க்க என்னனு எட்டி பார்த்தா .... கடவுளே... பயபுள்ளைங்க எல்லாம் இதே பொழபாவே அலையுதுங்க...

மாலை 6 மணி...

போன் அடிக்க ...எடுத்து ஹலோ என்றேன்... வாடா சினிமாக்கு போலாம் என்றான் நண்பன்... வேற வழி...? போய்ட்டு வந்து சாப்டு படுத்து தூங்கி விட்டார் இந்த பதிவர்...

குறிப்பு :காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை என்னை பண்ணுனன்னு சின்னபுள்ள தனமா கேக்காதிங்க ... அதான் ஆரம்பத்திலயே சொன்னோம்ல பொண்ணுங்கள பத்தி பேச மாட்டேனு...

Wednesday, June 3, 2009

சதிஷ் vs ரிஷிபாலா

சதிஷ்.. இன்றைய தலைமுறை வயசு பையன்...
இவனுக்கு ஒரு பிரச்சனை... தீர்க்க முடிஞ்சவங்க தீர்த்து வைங்க...

















ரிஷிபாலா
...

பிரச்சனையே சதிஷ்க்கு இப்போ இவ தான்...
இவ அப்படி என்ன தான் பண்ணிட்டா ?
இவன லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டாளா ?
இவன தான் கலயணம் பண்ணிப்பேன்னு அடம்பிடிகிறாளா ?
எதுவும் இல்ல...
சரி இவ யாரு?
இவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.?
இப்படி கேட்டா ரெண்டு பெரும் சொல்ற ஒரே பதில்...
அப்படி என்னத்த சொல்ல போறாங்க? எல்லோரும் சொல்லுற அதே பொய் தான்... நாங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ்...

சதிஷ்.. ரிஷிபாலா.. சந்திப்பே ஒரு இனிமையான நினைவுகள் தான்...
சதிஷ் தனது மனக்காயங்களை ஆற்ற இணையத்தை நாடி இருந்த சமயம்... வழக்கம் போல நெட்டில் ஒரு பெண்ணிடம் கடலை போட... அவளும் வெகுளியாக பேச...
அவளின் பேச்சு... அவன் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைய...அவர்களின் பேச்சு போன் நம்பர், போட்டோ பரிமாற்றம் என்று உருமாறி ... நேரில் சந்திப்பு நடத்துவது வரை போனது...

அவனின் மனக்காயங்களை முழுதாய் அறிந்தவள் என்பதாலோ என்னவோ நட்பு வட்டத்தில் மட்டுமே இருந்தது அவர்களின் உறவு...


சதிஷ் சில சமயங்களில் வரம்பு மீறி பேசினாலும் உடன் அது தவறு என்று தெரிந்து திருத்திகொள்வான் ... அவற்றை எல்லாம் சகித்து அவனுடன் பழகி வருகிறாள் ரிஷிபாலா...

இந்த நட்பு மீண்டும் ஒரு அழியா ரணத்திற்கான காரணமாக அமைந்துவிடுமோ என்று பயந்து சில சமயங்களில் அவளுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து இருக்கிறான்... சில நாட்களுக்கு பின் அவள் அவனிடம் இது பற்றி கேட்க அவன் தனது பயத்தை அவளிடம் சொல்ல... சிரித்தபடி.. அவள் சொல்லியது ...
"என்னை பற்றி நீ புரிந்துகொண்டது இவ்ளோ தானா சதிஷ்...?"

இதுக்கு அப்புறம் எப்படி அவளின் நட்பை துண்டித்து கொள்ள முடியும்?
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன...

அவனும் அவளிடம் பேசுறான்,சிரிக்கிறான் ,சண்டை போடுறான், சமாதானம் ஆகுறான்...
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது அவனுக்கு...
ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது என்ற கீழ்தரமான எண்ணம் கொண்டவன் அல்ல அவன்...
ஆனால் அவனுக்கு அவளிடம் மட்டும் இது சாத்தியபடவில்லை
இது நிச்சயம் எதையும் எதிர்பார்க்காத பரிசுத்தமான நட்பு இல்லை...
அப்போ
காதலா? நிச்சயம் அதுவும் இல்லை...
நட்பு ,காதல் போன்ற வார்த்தைகளை கண்டுபிடித்தவர்கள்.. இரண்டிற்கும் இடையில் உள்ள உணர்வை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது யார் குற்றம்?
(தயவு செய்து காமம் என்று சொல்லி கேவலபடுதாதிங்க )

என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தனுக்கு மனைவியா ஆகபோறவ... அவகிட்ட இப்படி முறை தவறி பேசுறது தப்புன்னு அடிக்கடி தோனுது இவனுக்கு... அதே சமயம் நான் அவளுக்கு நண்பன் என்ற சொல்லிக்கொண்டு கொண்டு அவனே சமாதானம் ஆகிப்பான்...

அவங்க ரெண்டு பேரு காதலிகிறாங்களா ?
அவங்க ரெண்டு பெரும் நண்பர்கள் தானா?
இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல தேவை இல்ல... ரெண்டு வருஷமா அவங்களுகே தெரியாதது ரெண்டு நிமிஷம் படிச்சிட்டு உங்களால சொல்லமுடியாதுன்னு அவனுக்கு நல்லவே தெரியும்...

அவன் கேக்குற கேள்வி...
அவளுடன் இப்படி தொடர்வது தவறு என்று அவனுக்கு அடிக்கடி தோனுது... இதை காலம் முழுதும் வெறும் நட்பு என்று சொல்லி அவனை அவனே ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை.. அதே போல் அவளின் முகம் பார்த்து இனி நாம் தொடர வேண்டாம் என்று சொல்லவும் தைரியம் இல்லை ...

அவளுடன் இந்த மாதிரியான நட்பும் அல்லாத காதலும் அல்லாத உறவை தொடரலாமா வேண்டாமா?
தொடரலாம் என்றால் காரணத்தை விளக்கவும்...
வேண்டாம் என்றால் அவளிடம் எப்படி இதை அவள் மனம் நோகாமல் தெரிவிப்பது என்று சொல்லுங்கள்.
(குறிப்பு: யாரு என்ன சொன்னாலும் அவன் என்ன நினைகிறானோ அதை தான் செய்வான்... இது அவனிடம் நன்கு பழகிய நண்பர்களுக்கு தெரியும் )