இவளுக்கு கொஞ்ச நாளாவே ஒரு பயங்கரமாக கனவு வருது... இவளோட செத்து போன அம்மா இவ கனவுல வந்து இவ கிட்ட எதோ சொல்ல வராங்க ..
இவளுக்கு எப்போ இருந்து பிரச்சனை ?
அன்று ஒரு நாள் தன் காதலன் ரகு கூட பார்டில கலந்து கிட்டு வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு செத்து போன சிறுமி உருவம் அவளை வீட்டுக்கு போக வேணாம்னு எச்சரிக்க ... இருந்தும் வீட்டுக்கு போன போது... அவளோட அப்பா ராஜீவ் .. அவருக்கு வேலைக்கு உதவியா இருக்குற 30 வயசு பெண் சுசீலா கூட வீட்டில் இருக்க... வீட்டுக்கு அருகில் போட் ஹவுஸ் இல் நோயாளியாக இருக்கும் அம்மாவை பார்க்க சென்றாள் ... அப்போ அம்மா இவளை பாத்து எதோ சொல்ல முயற்சிக்க அதை புரியாமல் வீடு நோக்கி வந்த பூஜா கண்ட கடைசி காட்சி... அம்மா வீட்டோடு எரிந்து சாம்பல் ஆனது தான் .. அதன் பிறகு அன்று நடந்தது எதுவும் இவள் நினைவுக்கு வர மாட்டுது .
வெளியூர்இல் இருந்த பூஜா அம்மா இறந்தவுடன் அவள் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவிட.. அம்மா இருந்த இடத்தில் சுசீலா இருப்பது கண்டு மனதுக்குள் குமிறியவாறு அந்த வீட்டில் இருகிறாள்... அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் சகோதரி நிர்மலா தான்... அவளை விட மூத்தவள்... தனது தந்தை செயல்பார்த்து நேரடியாக அவரை எதிர்பவள்.. இருப்பினும் அவளும் அதே வீட்டில் தான் இருகிறாள்.. சில சமயம் அவள் போதை பழக்கங்களை நாடுவதும் உண்டு...
பூஜாவின் காதலன் ரகு.. இவள் வீட்டிற்கு எல்லா வேலையும் செய்பவன்... இவர்களை சந்திக்க விடாமல் சதி செய்கிறாள் சுசீலா.. இருப்பினும் இரு பெண்கள் மீதும் பாசம் இருப்பது போன்றும் இருகிறாள்...
ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... வீட்டிற்கு வந்து பூஜா தான் அறைக்கு வர...அங்கு இருந்தான் ரகு... ஆனால் அவனுள் எதோ மாற்றம்... அவளுடன் பேசி போதே அவன் உடல் நிலை மாற்றம் ஆகிறது... அந்த நிலையிலும் அவன் அவளிடம் சொல்லியது ... "அன்று இரவு பார்ட்டி முடிந்தவுடன் உன் பின்னால் வந்து உன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் பார்த்தேன்... உன் அம்மா அப்போவே சொன்னாங்க நான் தான் கேக்கல " மேலும் அவன் உருவம் மோசமாக ஆனது...
இதனால் பயந்து அறையை விட்டு வந்த பூஜா மீண்டும் அறைக்கு செல்ல அது காலியாக இருந்தது...
மறுநாள் காலையில் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றில் ரகுவின் பிணம்... அவனின் இறுதி சடங்கிற்கு சென்ற பூஜா அங்கே ஒரு சிறுமியை சந்திகிறாள்... அவளை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்...
"ஆ! அவள் அன்று பிணமாக வந்த எச்சரிதவள்... "
தன்னை அறியாம அவள் பின்னால் செல்ல அந்த சிறுமி இன்னும் இரு சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.. அவர்களை பின் சென்ற பூஜா ஒரு கல்லறை மேல் சென்று விழுந்தாள்... எழுத்து பார்த்த போது அது ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களின் கல்லறை என்பது புரிகிறது...
தனக்கு வரும் மர்ம கனவை பற்றி ஒரு நாள் பூஜா நிர்மலாவிடம் கூறினாள் .. அம்மாவின் சாவுக்கு காரணம் சுசீலா தான் என்கிறாள் நிர்மலா.
இதை உறுதிபடுத்த சுசீலாவின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் இருவரும்..
அவர்களின் தேடுதல்லில் சுசீலா அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்தவள் என்றும் அவர்களை கொன்று தப்பித்து வந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்கள்... அந்த சிறுமியின் அம்மாவின் கழத்தில் இருந்த முத்து மணி இப்போது சுசீலா கழுத்தில்.. இது ஒன்றே அவர்களின் சந்தேகத்தை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது...
இந்த விஷயத்தை அவரின் அப்பாவிடம் சொல்ல நினைத்தும் ஆனால் அப்பா அவளின் மேல் உள்ள மோகத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்வதை நம்பபோவது இல்லை என்று சொல்லாமல் தவிர்தார்கள்..
இந்த நிலையில் ஒரு நாள் ராஜீவ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல ..
வீட்டில் பூஜா, நிர்மலா, சுசீலா மட்டுமே...
நிர்மலா பூஜாவிடம் நம்பகமான ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவரிடம் உதவி கேட்கலாம் என்று சொல்ல சரி என்றாள் ... இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சுசீலா வீட்டை விட்டு கிளம்பும் போது நிர்மலாவிற்கு போதை ஊசி போட்டு விட்டு பூஜாவை பிடிக்கவும் முயற்சி செய்கிறாள் எனினும் பூஜா தப்பி சென்று அவரை பார்த்தாள் ... அவர் அவளை அமர சொல்லி சுசீலாவை வரவழைத்து பூஜாவிற்கும் போதை ஊசி போட்டுவிடுகிறார்கள்..
சுசீலா பூஜாவை வீட்டிற்கு தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி அவளின் ஆடைகளை கலைத்தாள் .. பாதி மயக்கத்தில் இருக்கும் பூஜா அருகில் இருக்கும் கத்தியை எடுத்து சுசீலாவை தாக்க நினைக்க சுசீலா அந்த கத்தியை எடுத்து கொண்டாள் .. பூஜாவிடம் பேசி கொண்டே அவளின் ஆடைகளை சுசீலா களைந்து கொண்டு இருக்கும் போது மயக்கம் தெளிந்த நிர்மலா பின்னால் இருந்து சுசீலாவை தாக்க வந்தாள் ... இதை கவனித்தபடி பூஜா மயக்கமடைந்தாள் .
மயக்கம் தெளிந்த பூஜா எழுந்து பார்க்க தரை எல்லாம் ஒரே ரத்த கறை... ரத்த கறையை தொடர்ந்த பூஜா அது ஒரு பெரிய பெட்டியில் சென்று முடிவதை பார்த்து பெட்டியை திறக்க அதனுள் பிணமாய் சுசீலா...
பூஜா சுற்றிலும் பார்க்க... அங்கே கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நிர்மலா... இருவரும் செய்வது அறியாமல் நிற்கவும் ராஜீவ் கார் போர்டிகோவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது... காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய ராஜீவ் பூஜாவை நோக்கி ஓடிவந்து "என்ன ஆச்சு ?" என்று கேட்க...
"சுசீலா தான் அம்மாவை கொன்றதாக"சொல்கிறாள் நிர்மலா...
அதை அவர் காதில் வாங்காமல் பூஜாவிடம் திரும்ப கேட்க...
பூஜாவும் "நிர்மலா சொல்வது சரி "என்று கூறினாள்..
"நான் சொல்வதை அப்பா நம்ப மாட்டார் " என்று கூறுகிறாள் நிர்மலா...
"இல்லை அப்பா... சுசீலா தான் அம்மாவை கொன்றாள் ,என்னையும் நிர்மலாவயும் கூட கொல்லவந்தாள் அதனால் தான் நிர்மலா சுசீலாவை கொன்றாள் " என்று பூஜா கூற
அதிர்ச்சி அடைந்த ராஜீவ்...
நிர்மலாவா? என்றார்...
ஆமாம் நிர்மலா சொல்வது உண்மை... நீயே சொல் நிர்மலா என பூஜா கூற...
என்னடி உளர்ற... நிர்மலா செத்து போய் ஒரு வருஷம் ஆகுது என்றார் ராஜீவ்...
அப்போ யாரு சுசீலாவ கொன்னது ?, அம்மாவ யாரு கொன்னது? நிர்மலாவ யாரு கொன்னது? ரகுவ யாரு கொன்னது ? இதுக்கு எல்லாம் பதில் தெரியனும்னா
"the uninvited " படத்த பாருங்க...
"the uninvited "



பூஜாவாக anna கதாபத்திரத்தில் Emily Browning
நிர்மலாவாக alex கதாபாத்திரத்தில் Arielle Kebbel
சுசீலாவாக rachel கதாபாத்திரத்தில் Elizhabeth Banks
ரகுவாக maat கதாபாத்திரத்தில் Jesse Moss
ராஜீவ்வாக stephen கதாபாத்திரத்தில் David Strathairn
சாவித்திரியாக mom கதாபாத்திரத்தில் Maya Massar
directed by Guard brothers
இசை மட்டும் அப்போ அப்போ ஓம் சாந்தி ஓம் படத்த நினைவு படுத்துது...
படத்த பத்தி என்னோட பார்வை சொல்லனும்னா திரில்லர் சஸ்பென்ஸ் எதிர் பாக்குறவங்களுக்கு சரியான தீனி... கூடவே இளமை துள்ளும் அழகு பெண்களின் டூ பீஸ் காட்சியும் உண்டு.. ஜொள்ளு விட்டுகிட்டு என்ஜாய் பண்ணலாம்..
இயக்குனருக்கு செய்யும் மரியாதையை காரணமாக சில சம்பவங்களை, காட்சிகளை தவிர்த்து விட்டேன்...
தமிழ்ல இந்த கதை எதுக்குனா ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இதே கதைய தமிழ் படமா நமக்கு யாரவது சுட்டு தருவாங்க அப்போ படத்துக்கு கதை, தலைப்பு, கதாபாத்திர பெயர் வைக்க மண்டைய பிச்சிக்க கூடாது இல்லையா?
படம் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... படம் பார்த்துட்டு சொல்லுங்க


