Saturday, January 9, 2010

கட்டிங் வித் கிஷோர் - 3

வணக்கம் உங்கள் அனைவரையும் க வி கி -ல் மீண்டும் சந்திப்பதில் குஜாலான மகிழ்ச்சி..
--------------------------------------------------------------------------
தொடர் பதிவு தொடங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு..

இன்றைய தேதியில் பதிவுலகத்தில் "தொடர் பதிவிற்கு" அமோக ஆதரவு இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ABCD யில் தொடங்கி டிராபிக் "கான்ஸ்" வரைக்கும் எல்லாம் தொடர் மயம் தான்.
ஆனால் அவர்கள் தொடங்கும் பதிவு சில பதிவர்களின் அலட்சியபோக்காலும் சோம்பேறித்தனத்தாலும் பாதியில் நின்று விட கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இப்படி தொடர் பதிவு எழுத நினைபவர்களை மேலும் உற்சாகபடுத்தவும் அவர்களை ஊக்கபடுத்தவும் நானும் நண்பர் பதிவர் திரு.வினோத்கெளதம் அவர்களும் 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடத்தி ஆலோசனைகளை தொடர் எழுத நினைபவர்களுக்கு தர ஆயுத்தமாகி உள்ளோம்.

நம்ம ஆளுங்க எந்த விஷயத்த செய்ய சொன்னாலும் அதுல தனக்கு என்ன லாபம் வரும்னு தான் பாப்பாங்க .. நம்ம நாட்டு பழக்கம் அப்படி அதனால அவங்கள குத்தம் சொல்ல முடியாது.

அதனால தொடர் தொடங்க நினைபவர்களுக்கு ஏதுவாகவும் ,தொடரை எழுத அழைக்கபடுவோர் ஆவலோடு அதில் பங்கேற்கவும் சில விஷயங்களை தொடர் எழுத நினைப்பவர் செயல்படுத்த வேண்டும்.

அது என்ன விஷயம் என்பதை தெரிந்து கொள்ள தொடர் பதிவு எழுத நினைக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அன்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும்
வெளிமாநிலம் மற்றும் உலக பதிவர்கள் சேர்ந்தவர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் குறிப்பாக அமீரகத்தை சேர்ந்த அன்பர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று தங்கள் சேவையை பதிவுலகத்திற்கு ஆற்றி தொடர் பதிவை செழித்தோங்க செய்ய வேண்டுகிறோம்.

குறிப்பு : ஆலோசனைகளுக்கு கட்டணம் எதுவும் கண்டிப்பாக வசூலிக்க படமாட்டாது. ஆலோசனைகளை பதிவில் குறிப்பிட முடியாததிற்கு சில பதிவுலக அரசியல் காரணம் இருப்பதால் தொடர் எழுத நினைபவர்கள் தயவு கூர்ந்து மின்னஞ்சலில் மட்டும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------
ஒரு " "ஜோக் (வ = வயது வந்தோர் மட்டும் )

நம்ம ஆளு ஒருத்தன் "அது "ல ரொம்ப வீக்..

ராணுவ பயிற்சிக்கு ஆள் எடுகிறாங்கனு கேள்விபட்டு ராணுவத்திற்கு தேவையான "காக்கி" கலர் பான்ட் எடுத்து போட்டுகிட்டு அவனும் போனான்.

அங்க ஒரு அழகான பொண்ணு தான் இன்டெர்வீவ் பண்ணிக்கிட்டு இருந்துச்சி.
நம்ம ஆளு கடைசியா போய் நின்னான்.

இவன் முறை வந்ததும் அந்த பொண்ணு முன்னாடி போய் நின்னான்.

இவனை பார்த்ததும் "யு ஆர் ரிஜெக்டெட்" என்றாள் அந்த பெண்.

இவன் ஒன்னும் புரியாமல் காரணம் கேட்க..

அவள் சொல்லிய பதில்..

இது ஒன்னும் "நேவி " இன்டெர்வீவ் இல்ல உன் இஷ்டத்துக்கு "வொய்ட் " பான்ட் போட்டுகிட்டு வர..


----------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம்... :)

Friday, January 8, 2010

நம்ம ஆளு

சென்ற வாரம் ஒரு நாள் என்னோட அப்பாவை பாண்டிச்சேரில உள்ள ஒரு மருத்தவமணைக்கு அழைச்சிகிட்டு போய் இருந்தேன்.அப்பாவ டெஸ்ட் பண்ண மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அழைச்சிட்டு போய்டாங்க.. டெஸ்டிங் ஒரு மணி நேரம் அங்க மற்ற யாருக்கும் அனுமதி இல்ல அதனால வெளில இருந்த சேர்ல உக்கார்ந்து இருந்தேன்.

அப்போ பக்கத்துல ஒருத்தர்.. ஐம்பது வயசிருக்கும் அவரோட மனைவிய உள்ள அனுப்பிட்டு அவரும் என் கூட உக்கார்ந்து இருந்தாரு.நாங்க ரெண்டு பேரு தான் அந்த வராண்டாவுல இருந்தோம்.

நான் வழக்கம் போல என்னோட மொபைல் போன் எடுத்து நோண்டிகிட்டு இருந்தேன்.. அவரும் எதோ பேப்பர் கைல வச்சிக்கிட்டு பார்த்துகிட்டு இருந்தார். அவருக்கு ரொம்ப "போர்" அடிச்சிருக்கும் போல.. தம்பி அப்பாவுக்கு என்ன? என்று பேச்சை ஆரம்பிச்சாரு.. நானும் அவரோட வயசுக்கு மரியாதை கொடுத்து என்னோட மிக "முக்கியமான" வேலைய பாதில நிறுத்திட்டு அவர் கிட்ட பேசுனேன்.

பேச்சு ஊரு, படிப்பு, வேலை பத்தி எல்லாம் போச்சி. நானும் அவரு கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்புறமா அவரு கேட்ட ஒரு கேள்வி தான் ஹை-லைட்.. நான் பதில் சொல்ல விரும்பாத கேள்வியும் கூட .

என்னை இப்போ தான் அவரோட வாழ்நாளுல முதல் முறையா பாக்குறாரு.. பேசி ஒரு பத்து நிமிஷம் கூட ஆகல. ஆனா இதுவரை அறிமுகம் இல்லாத ஒருத்தன் கிட்ட கொஞ்சம் கூட வெட்கபடாம அவரு கேட்ட கேள்வி.. தம்பி நீங்க "என்ன" ஆளுங்க?

நான் பதில் சொல்லாமல் சிரித்து விட்டு மீண்டும் என்னோட மொபைல நோண்ட தொடங்கினேன்.. அப்போவும் விடாமல் தம்பி நீங்க பார்த்தா "நம்ம ஆளு" மாதிரி தெரியிறிங்க.. சொந்த ஊரு வேற "நம்ம " பக்கம்னு சொல்றிங்க. அங்க "நம்ம ஆளுங்க" தான அதிகம்.. எனக்கு இப்போவும் அங்க நிறைய சொந்தகாரங்க இருக்காங்க தம்பி என்றார்.

நான் அமைதியாக சார் "இந்த" மாதிரி கேள்விக்கெல்லாம் நான் எப்போவும் பதில் சொல்றது இல்ல என்றேன்.

என்ன தம்பி இதுக்கு போய் கோச்சிகிறிங்க? நம்ம நாட்ல ஒரு மனுஷன் பிறந்ததுல இருந்து இறக்கிற வரைக்கும் "இதோட" அடையாளம் இல்லாம இருக்க முடியுமா? அட சும்மா சொல்லுங்க நீங்க "நம்ம" ஆளுதான? , என்றார்.


நானும் கோபத்தை கட்டுபடுத்திகிட்டு சார் இப்போ தான் என்னை பாக்குறிங்க அறிமுகம் இல்லாத ஒருத்தர்கிட்ட அதுக்குள்ள எப்படி இதெல்லாம் கேக்குறிங்க? என்றேன்.

என்ன தம்பி இப்படி சொல்லிடிங்க..இதுல என்ன தப்பு இருக்கு? என்னைக்குமே நம்ம நாட்டுல "இது" தான் தம்பி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முதலீடு.. "இதை" ஒழிக்கிறோம்னு சொல்லி தான் வோட்டு கேப்பாங்க ஆனா "இது " இல்லாம எவனும் அரசியல் பண்ண முடியாது. நம்ம தொகுதிய எடுத்துக்கோயேன் " நம்ம" ஆளுங்க சப்போர்ட் இல்லனா "இவன் " அங்க வந்து ஜெயிச்சி இருக்க முடியுமா என்று கேட்டு முழுமையாக என்னை "அவங்க" என்றே ஆக்கி பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

இதற்கு மேலும் தாங்கமுடியாமல் வேண்டுமென்றே சார் என்னோட அப்பா அம்மாவோடது காதல் திருமணம். அப்பாவும் அம்மாவும் வேற வேற மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவங்க. இப்போ சொல்லுங்க "நான் யாரு"? என்றேன்.

அதற்கும் சளைக்காமல் அப்பா என்ன "ஆளோ" அது தான் தம்பி பிள்ளைங்களுக்கும் என்றார்.

அப்படினா நான் "உங்க ஆளு " இல்ல என்றேன் அமைதியாக .

அதுவரை என்னை "நம்ம ஆளாக " நினைத்து பாசம் கொட்டியவர். திடீர் என்று பேச்சை நிறுத்திக்கொண்டு அவர் வச்சி இருந்த பேப்பர்-ஐ மீண்டும் மேய தொடங்கினார். நானும் நிம்மதியாக என்னோட மிக முக்கியமான வேலையை தொடர்ந்தேன்.

இது போன்று பல சந்தர்பங்களில் பலர் "இதே " கேள்வியை என்னிடம் கேட்டு இருகிறார்கள். குறிப்பாக சேலம், ஈரோடு,கோயம்புத்தூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் (நான் அடிக்கடி போகும் இடங்கள் ) இந்த கேள்வி என்னிடம் பல தடவை கேட்கபட்டு இருக்கிறது.

ஆனா யோசிச்சி பார்த்தா அவரு சொன்னது உண்மை தான். எப்போவுமே "இது" இல்லாம நம்ம நாட்டுல அரசியல் இல்ல. இருந்தாலும் ஒருத்தரை பார்த்ததும் அவரிடம் "மதம்" மற்றும் "ஜாதி" ரீதியாக அணுகும் இவரை போன்ற ஜென்மங்கள் எப்போ தான் திருந்துவாங்களோ?

இதற்கு கருத்து சொல்ல விரும்புபவர்கள் பெரியாரோ, பாரதியோ மீண்டும் பிறந்து வந்தால் தான் நாடு திருந்தும் என்ற ரீதியில் கருத்து இடவேண்டாம். என்னை பொறுத்த வரை அவர்கள் இருவருமே முயன்ற வரை மட்டுமே முயற்சி எடுத்தவர்கள் அதனால் "ஜாதி ஒழிப்பு" போரில் முழுமையாக தோற்று போனவர்கள்.

நாமும் முயன்ற வரை என்று இல்லாமல் முழுமையான முயற்சி எடுத்துது "இது" இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Wednesday, January 6, 2010

பீர் வித் கிஷோர் ( இது ஒரு மாநில மொழி திரைப்படம்)

வார் ரில் : எங்க எதிர்வீட்டு "பிகர்"மேல சாத்தியமா இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல.

எவனோ ஒருத்தன் எழுதியது.. பல பேருக்கு அவன் யாருன்னு தெரியும் தெரிஞ்சவங்க மூடிகிட்டு சும்மா இருங்க. தெரியாதவங்க தெரிஞ்சிக்க விரும்பாதிங்க. இந்த பதிவுல உள்ள ஒரே நல்ல விஷயம் என்னை "பிரபல" பதிவர்னு சொன்னது தான்.

இது ஏற்கனவே அவரு பதிவுல வந்தது தான் ஆனா ஒரு ரொம்மம்ப்ப நல்லவன பத்தி இப்படி எழுதுனதால கூகுள் ஆண்டவர்க்கு கோபம் வந்து அந்த ப்ளாக்கையே தூக்கிட்டாரு.

இப்போ புது ப்ளாக் போடலாம்னு நினைச்சாரு .. ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி நண்பன் மேல உள்ள பாசத்துல ஓவரா கூவி.. வீட்ல இவரோட சொம்பு ரொம்ப அடி வாங்கிடிச்சி..அதனால என்னோட ப்ளாக்ல போடுறேன் ( போட சொல்லி ஒரே அழுகாச்சி).

இப்போ இதை திரும்ப பதிவா போடுறதுக்கு என்ன அவசியம்ன்னு நீங்க கேட்டாலும் நாங்க சொல்ல தயாரா இல்ல.

ஆனா என்னை பத்தி யாரு என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரியும்.. அந்த நம்பிக்கையுடன் அந்த பதிவு உங்கள் பார்வைக்கு...

இனி அவனின் அசல் அட்டகாசம்..

100 %
அக்மார்க் மொக்கை பதிவு:












நானும்
பிரபல பதிவர் கிஷோர்ரும் பல இடங்கள் ஒன்றாக சுற்றி இருக்கிறோம் என்றாலும் மறக்கவே முடியாத ஒரு அனுபவம் கிஷோரின் நண்பரின் கல்யாணத்துக்கு சேலம் சென்று விட்டு அப்படியே ஏற்காடு சென்றது.

நானும் அவனும் சேலத்தில் உள்ள அவனின் அக்கா வீட்டில் தான் தங்கி இருந்தோம். நடந்தது அவனின் நண்பன்(நண்பி) திருமணம் என்றாலும் என்னையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.நான் சில நிபந்தனையோடு அவன் கூட சென்றேன்.

கண்டிஷன் 1:கல்யாணம் நடந்தது சண்டே, நாங்கள் அங்கே சென்றது சனிக்கிழமை காலை என்னால் ஒரு நாள் கூட அதிகமாக விடுமுறை எடுக்க முடியாது. ஏன் என்றால் நான் ஒரு நாள் லீவ் போட்டால் கூட எனக்கு மண்டை வெடித்து விடும் அவ்வளவு ஒரு சின்சியர் சிகாமணி.
கண்டிஷன் 2:என்னை எக்காரணம் கொண்டும் குடிக்க வற்புறுத்த கூடாது என்று சொல்லியும் அவன் கூட சென்றேன்.

போன முதல் நாள் அன்று கொஞ்சம் சேலத்தை சுற்றி விட்டு அன்று இரவு என்னை வாடா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கலாம் என்று அழைத்து சென்றவன் அவனின் வேலையை காட்ட தொடங்கினான்.

கிப்ட் வாங்கி விட்டு அவன் அழைத்து சென்ற இடம் "டாஸ்மாக்"..எனக்கு அந்த இடத்தை பார்த்ததும் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன..

"டேய், என்னடா இங்க கூப்பிட்டு வந்துட.."..நான்.
"மச்சான் ஒரே ஒரு பீர் டா, சாப்பிட்டு போயருல்லாம்..நீ சொன்ன இங்க வந்து இருப்பியா அதான் சொல்லாமலே கூப்பிட்டு வந்துட்டேன்.."..கிஷோர்.

"டேய் நான் தான் இதே மாதிரி இடத்துக்கு எல்லாம் வர மாட்டேனு உனக்கு நல்லா தெரியும்"..என்று நான் புலம்ப ஆரம்பித்தேன்.
"டேய், புலம்பாத இங்க வேணாம் வாங்கிட்டு ஏற்காடு போற பத்தாவது ஹேர் பின் பெண்ட் போய்டுவோம்.."

"எதோ பண்ணி தொலை.."
வந்தவன் இரண்டு பீர் வாங்கி கொண்டு வந்தான்.

"டேய் என்னடா இது.."..நான்.

"நீயும் அடிடா.."..கிஷோர்.

"டேய்..நான் உங்கிட்ட வரப்பவே சொன்னேன்..உனக்கே தெரியும் நான் வருசத்துக்கு ஒரு முறை தான் அடிப்பேன் அதுவும் அரை பாட்டில் தான் என்று..ஏண்டா இப்படி பண்ணுற.."

"ஒரு தடவடா ப்ளீஸ்"..என்று கெஞ்ச ஆரம்பித்தான்..

சரி என்று தலையில் அடித்து கொண்டே வண்டியயை ஏற்காடு செல்லும் பாதையில் ஓட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு வண்டியை ஓட்டும் பொழுதே ஒரு சந்தேகம்..

"டேய் செக் போஸ்ட் எதுவும் வராதா"..என்றேன்.

"அது எல்லாம் வராது நீ போ நான் பாத்துக்குறேன்"..என்றான்.

செக் போஸ்ட்டும் வந்தது..போலீஸ் ஒருவரும் வண்டியை நிறுத்தி முன்னாடி இருந்த பீர் பாட்டிலை எடுத்து இது என்னது என்று என்னை பார்த்து கேக்கும் பொழுது சொன்ன மாதிரி ஒரு பத்து அடி தள்ளி நடக்கிற சம்பவத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருந்தான்.

நானும் பேசி சமாளித்து ஏற்காடு போகமால் வண்டியை கிழ் நோக்கி திருப்பி ஒட்டினேன்.அப்பயும் அடங்காத அவன் இரண்டாவது ஹேர் பின் பெண்ட்ல் நின்று அடிப்போம் என்றான்..தலை எழுத்தே என்று நினைத்து கொண்டு வேறு வழி இல்லமால் அன்று கொஞ்சம் குடித்தேன்.

குடித்து விட்டு அவன் வண்டியை ஓட்டிய வேகம் இருக்கிறதே..எப்பா ஒரு இடத்தில் சங்கு ஊத வேண்டியது..ஜஸ்ட் தப்பிதோம். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து உறங்கினோம்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் நான் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன்.

அவனை எழுப்பி கல்யாணத்துக்கு கிளப்புவதற்குள் பெரும்ப்பாடு ஆகிவிட்டது இத்தனைக்கும் அவனின் நண்பன் திருமணம் வேறு.

திருமணத்தை முடித்தவுடன் ஏற்காடு அவனின் உறவினர் பைக்கில் சென்றோம்.

அங்கே சென்றவுடன் மறுபடியும் குடிக்கலாம் என்று ஒரே அழுகாச்சி.சொன்னால் கேக்கவும் மாட்டான்.எனக்கு அவன் அழுவதை பார்தால் மனசு கஷ்டம் ஆகி விடும்.வேறு வழியே இல்லமால் மனசு வெறுத்து போய் மறுப்படியும் ஒத்துக்கொண்டேன்.

பீர் வாங்கி வந்தவன் என்னை கூப்பிட்டு கொண்டு வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு மலை மேல் சென்றான்.ஏற்கனவே பல முறை வந்து இருப்பான் போல் என்று நினைத்து கொண்டேன்.

வண்டியை நிறுத்தி விட்டு கையில் பீரை கண்ணும் கருத்துமாக எடுத்து வந்தவன் சாவியை வண்டியில் வைத்து விட்டு வந்தான்.மறுபடியும் நான் ஓடி சென்று சாவியை கையில் எடுத்து வந்தேன்.குடி என்று வந்து விட்டால் அவன் அப்படி ஒரு ஆள் எதை பற்றியும் கவலை பட மாட்டான் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாது.

அவன் அடிக்க தொடங்கினான்

நான் அடிப்பதை போல் அக்டிங் கொடுத்து கொண்டே எல்லாவற்றையும் கிழே ஊற்றினேன்.என்ன பண்ணுவது அந்த கருமத்தை நினைத்தாலே எனக்கு குமட்டி கொண்டு வரும்.

பீரை அடித்து விட்டு அவன் பண்ண அலம்பல் இருக்கிறதே..எப்ப..சொல்லி மாளாது வசமா வந்து சிக்கினேன் என்று நினைத்து கொண்டு ஒரு வழியாக சேலம் கிளம்பு வண்டியை எடுத்தேன்..

மறுபடியும் நான் தான் ஓட்டுவேன் என்று ஒரே அடம் பிடித்தான்.சரி ஒட்டி தொல என்று ஒரு விட பயத்தோடு கொடுத்தேன்.சாதரண சாலை என்றால் பரவா இல்லை..மலை சாலை வேறு..ஒரு வித நடுக்கதோடு அவன் பின்னால் அமர்ந்தேன்.

பயந்த மாதிரியே அவன் ஓட்டிய வேகம் இருக்கிறதே..அட வேகமாக போனால் கூட பரவா இல்லை..ஒவ்வொரு வளைவு வரும் பொழுது கையை விட்டு கொண்டே வளைந்தான்..எதிரில் வந்த ஒரு வண்டி விடமால் எல்லோரும் திட்டி கொண்டே சென்றார்கள்..

சேலம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆனது..

டிஸ்கி 1 : இது பாதி கற்பனை பதிவு..வழக்கம் போல் நானும் அவனும் கல்யாணத்திற்கு போய் விட்டு செவேனே என்று திரும்பி விட்டோம்.தண்ணி எல்லாம் ஒன்றும் கிடையாது..நானும் அவனும் உத்தமர்கள்..

டிஸ்கி 2 :மேல உள்ள டிஸ்கி அவன் எழுதுனது தான்.. நல்ல விஷயத்த எவ்ளோ லேட் சொல்றானுங்க. இவனுங்க மாதிரி ஆளுங்க இருந்தா "2012 " கன்பார்ம் தான் போல இருக்கு.

Monday, December 28, 2009

கரைவேன் காற்றாய்..



நித்தம் துடித்திருந்தேன் உன்னை காண
மொழி தெரிந்தும் தவித்திருந்தேன் உன்னிடம் பேச

தயக்கம் என்னில் நிலைத்திருந்ததாலோ என்னவோ
என்னை தவிக்க விட்டு சென்ற போதும் தனித்திருந்தேன்

உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன்
நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல

யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று


மாற்றான் தாரத்தை நினைப்பது பாவம் என்று தெரிந்தும்
உன் நினைவுகளில் என் நிஜங்களை மறக்க முயல்கிறேன்


மலர்வதற்கு
முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது


ம்.. என்று ஒரு வார்த்தை சொல் நீ இறப்பதற்கு முன்
உன் கடைசி மூச்சு காற்றில் கலப்பதற்குள்

உன் சுவாசத்திற்காக கரைவேன் காற்றாய்..

Sunday, December 27, 2009

கட்டிங் வித் கிஷோர் - 2

க வி கி இல் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..
-----------------------------------------------------------------------------

இன்னைக்கு நாம பார்க்க போற சப்ஜெக்ட் "ஹியூமன் அனாடமி" அதாவது "மனித உடற்கூறுவியல்" .


உடலின் எல்லா பாகங்களும் , அது செய்ய வேண்டிய செயல்களும் நரம்பு மண்டலங்களின் (neuro system ) வழியாக மூளையின் கட்டுபாட்டின் கீழ் தான் இயங்குகிறது.



இவை அனைத்தும் சரிவர நடைபெற மிக முக்கியமாக தேவைபடுவது.. உடலின் சமசீரான இரத்த ஓட்டம்.

இதயத்தில் இருந்து அழுத்து விசை மூலம் பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்த படும் இரத்தம் ஆனது மீண்டும் இரத்த நாளங்களின் (blood veins )வழியாக இதயத்திற்கு வந்து அடைகிறது.


வெட்டுபடும் இடங்களில் இருந்து வெளிபடும் இரத்தம் சில நிமிடங்களின் உறைவதும் (blood clotting) மீண்டும் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுரபிகள் மூலமாக சுரந்து கொள்வதும் இரத்தத்தின் சிறப்பு.

இந்த உடலை அறுவை சிகிச்சை செய்வது என்பது கசாப்பு கடையில் கறி வெட்டுவது அல்ல.. மாறாக.. கத்தியை மெதுவாக உடலின் வைத்து சீரான அழுத்தம் குடுத்து சருமத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் கிழித்து பின் முழுமையாக வெட்டி போட வேண்டும்.

ok guys.. i hope you understood what you read regarding the human anatomy. To make things more clear, now we will have a small presentation..




அந்த "அறுவை" சிகிச்சையை தான் அருமையாக எந்த வித பதற்றமும் இல்லாமல் செய்து இருக்கிறார் விஜய்.. அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பேயில்ல.


எனக்கு இவ்வளவு இரத்த இழப்பு ஏற்பட்டதற்கு வீணாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை. எவ்ளவோ விமர்சனங்களை பார்த்தும் திருந்தாமல் நானே எனக்கு வைத்து கொண்ட ஆப்பு இது.


ஒருவருக்கு அதிக அளவிலான இரத்த இழப்பு ஏற்படும் போது அதை சரிகட்ட உடலுக்கும் 3 முதல் 6 மாதம் வரை ஆகும்.
இதற்கு தான் ஒருவர் ஒருமுறை இரத்த தானம் செய்த பிறகு அடுத்த முறைக்கு 3 முதல் 6 மாதம் வரை இடைவெளி விட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீண்டும் விஜய் படம் வர ஒரு 6 மாதம் ஆகும்.. அதுக்குள்ள உடம்ப தேத்தனும்..
மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 22, 2009

கட்டிங் வித் கிஷோர் - 1

இந்த பதிவ படிச்சிட்டு அருமைன்னு சொன்னாலும் சரி.. போடா எருமைன்னு சொன்னாலும் சரி.. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரசிச்ச.. என்னை சந்தோசமாய் இருக்க வைத்த .. சில சமயம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திய எனது வாழ்வில் நடந்த.. நடந்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க போற சரியான மொக்கை பதிவு.. (சாரி கண்ணா....)

சரி விஷயத்திற்கு போவோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சி..இதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சா.. ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதுறாங்க.. (அப்போ அவங்க எழுதுறது எல்லாம் மொக்கையான்னு கேக்காதிங்க .. எனக்கு பதில் தெரியாது..ஆனா கண்டிப்பா நான் எழுதுறது மொக்கை தான் )

தலைப்பு வைக்கிறதுலையும் ஒரு நியாய தர்மம் இருக்கனும் இல்லைங்களா?

உலகத்துலயே ஒருத்தன் அனுபவிக்கிற கொடுமையான நிகழ்வு எதுன்னு நினைகிறிங்க..?
காதல் தோல்வி?
நண்பர்கள் பிரிவு?
தனிமை?
தொடர் தோல்விகள் ?

அது எல்லாம் சும்மாங்க..

அதெல்லாம் கூட எதோ ஒரு வகைல தாங்கிக்கலாம். இல்ல இன்னொருத்தர் கிட்ட சொல்லியாச்சும் மனச ஆத்திக்கலாம் ..
ஆனா ஒருத்தன் குடிக்கும் போது அதை வேடிக்கை பார்த்துகிட்டு அவன் திரும்ப திரும்ப சொல்றத குடிக்கிற பழக்கம் இல்லாம வெறும் கடலைய மட்டும் கொறிசிகிட்டு கேக்குறவன் இருக்கான் பாருங்க.. அவன் அனுபவிக்கிற வேதனை.. கஷ்டம்..(அதெல்லாம் என்னை மாதிரி கஷ்டபட்டவங்களுக்கு தான் தெரியும்)

ஹலோ.. ஹலோ .. . எங்க கிளம்புறிங்க? வெயிட்..
இனிமே நீங்க அந்த கஷ்டத்த தான் அனுபிவிக்க போறீங்க..
அதான் "கட்டிங் வித் கிஷோர் "
பேர்லயாவது சரக்கு இருக்கட்டுமேனு தான் "கட்டிங்"ன்னு வச்சேன்..

------------------------------------------------------------------------------------------
இனி மொக்கைகள் ஆ"ரம்பம்" (வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்.. )


கடந்த சனிக்கிழமை "அவதார் " பார்த்தேன்.. அவதாரம் போக வேண்டியது என்னோட பிடிவாதத்தால முதல் தடவை தப்பிச்சிட்டேன்..
பாலா இந்த படத்த "ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு.. எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது .. சின்ன புள்ள தனமான கதைன்னாலும் நல்லா தான் ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க.. என்னா ஒண்ணு.. "நாவி " வேஷத்துல ஹீரோயின் மட்டும் இல்ல எந்த பொன்னை பார்த்தாலும் ஒரு கிளுகிளுப்பு வரல..

உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.. இதுல தியேட்டர் ஒரு "காஞ்சி " போனது அவங்க ரெண்டு பேரும் "கிஸ்"பண்னும் போது விசில் அடிக்கிது..

எப்படியோ கொடுத்த காசுக்கு கலர் கலரா காட்டுனாங்க.

அப்புறம் நேத்து ரெண்டாவது தடவையும் விதி என் வாழ்க்கைல விளையாட பார்த்துச்சி.. திரும்பவும் அவதாரம் போக வேண்டியது..இருந்தாலும் இப்போவும் என்னை கடவுள் கைவிடல..

என் நண்பர்கள்ல ஒரு மகான் .. "கந்த கோட்டை " தான் வருவேன்னு அடம்பிடிக்க.. எனக்கு ஒன்னும் இல்லடா நான் வரேன்.. மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு கேளு அப்படின்னு சொல்லிட்டு அவங்க முகத்த பார்த்தா.. வினோத் கிட்ட நீ துபாய்ல வேலை பார்க்க வேணாம் இந்தியா வந்துடுன்னு சொன்னா அவன் முகம் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை பேரு முகத்துளையும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்..

சரின்னு ஒரு வழியா படத்துக்கு போனோம்..

படத்தை பற்றி ஒரு பார்வை..

"பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..
"நகுல்" பண்ணுற முக சேஷ்டைகள் ரொம்ப கேவலமா இருக்கு..
"சம்பத்" அ முடிஞ்ச அளவுக்கு கேவலபடுத்தி இருக்காங்க.
"கெளதம் "(சண்டை கோழியில் விஷால் நண்பராக வந்தவர் ) குடுத்த ரோல முடிஞ்ச அளவுக்கு நெருடல் இல்லாம பண்ணிட்டு செத்து போறார்..

ஒரே ஆறுதல் சந்தானம் தான்.. அவரும் "செகண்ட் ஆப் "ல ரொம்ப இல்ல..

கதையா ? நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் படங்கள கொஞ்சம் ரீவைண்டு பண்ணிகிங்க..

ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்.
-------------------------------------------------------------------------------------------

இப்போ நான் கடவுள் கிட்ட வேண்டிகிற ஒரே விஷயம்.. சனிக்கிழமை சீக்கிரம் வர கூடாதுன்னு தான்..

எங்க ஊருல ஆறு தியேட்டர்ல மூணு இடிச்சிடாங்க மீதி மூணு தான் இருக்கு.. அதுல ரெண்டு தியேட்டர்ல பார்த்தாச்சி.. மீதி இருக்குறது.. அவதாரம் தான்..

சனிக்கிழமை
ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. அதுக்குள்ள எதாவது ஒரு படம் மாறிட வழி பண்ணுங்கனு தான். இருந்தாலும் இந்த தடவையும் டவுள் கை விடமாட்டார்னு நம்புறேன் ...

சரிங்க.. முதல் மொக்கையே கொஞ்சம் ஓவரா போச்சி.. மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 15, 2009

ஐ.. மீ.. மைசெல்ப்..

ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்னு நெனச்சி தான் பதிவெல்லாம் போட்டு கிளம்புனேன்..( எங்க போனேன்னு கேக்காதிங்க.. சொல்ல மாட்டேன்.)
திரும்பவும் வந்து பதிவு எழுதனும்னு நெனச்சேன்.. நெனச்சேன்.. நெனக்கிறேன்.. ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியுல..உண்மைய சொல்லனும்னா எழுதறதுக்கு சரக்கு இல்ல
(சரக்குன்னு சொன்னதும் குவாட்டர் , ஆப், புல்லு ன்னு லொள்ளு பண்ணாதிங்க)
அதனால அப்படியே அடங்கிட்டேன்.( சரியான முடிவு.. அப்படியே அடக்கமா இருக்கலாம்னு நீங்க சொல்றது காதுல விழுது)

சரி மொக்கையாவது போடுவோம்னு நெனச்சி ப்ளாக் உள்ள வந்தா கண்ணா பதிவு தான் கண்ணுல பட்டுது.. அந்த பதிவ படிச்ச அப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுட்டேன்..

பாலா கூட பேசும் போது சொன்னாரு.. எதாவது ஆங்கில படம் விமர்சனம் எழுதுடான்னு.. ஏற்கனவே நான் ஒரு ஆங்கில படம் விமர்சனம் எழுதி பல பேரு "சூசைடு " அட்டென்ட் பண்ணினது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவரு சொல்லும் போது இந்த மேட்டர் நியாபகம் வர.. நான் படம் பாக்குறதோட மட்டும் நிறுத்திகிறேனு சொல்லிட்டேன்.

அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
( வினோத் and கலை.. இப்போவும் அதே தான் பண்ணுறடானு "கேனத்தனமா" கமெண்ட் பண்ணாதிங்க ).

சரி அப்போ உனக்கு என்ன தான் தெரியும்னு கேட்டா.. என்னோட பதில் "தேடிகிட்டு இருக்கேன்".

பதிவு எழுதி கொடுமை படுத்த வேணாம்.. கமெண்ட்ல இம்சை பண்ணலாம்னு பார்த்தா.. பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. இவங்க ப்ளாக் கமெண்ட் பக்கம் போனா.. select profile ன்னு சொல்லுது.. கூகிள் செலக்ட் பண்ணுனாலும் கமெண்ட் பண்ண முடியல.. எதாவது "செய்வினை " வச்சிடாங்களோ ?
இதுக்கு விளக்கம் கேட்டு ஈரோடு "வால்"மீகி முனிவர்கிட்டயும் , பரிகாரம் கேட்டு "ஹாலிவுட் பாலா"னந்த சாமிகளுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன்.
உங்க யாருக்காவது பதில் தெரிஞ்சாலும் சொல்லுங்க..பதில் வந்ததும் இவர்களுக்கான இம்சை தொடரும்..